<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-19861113</id><updated>2012-02-01T12:29:30.307+05:30</updated><category term='மலேசியாவில்...'/><category term='அனுபவம்'/><category term='சிறுகதை'/><category term='சினிமா'/><category term='தினம் ஒரு சிந்தனை'/><category term='பதிவர் வட்டம்'/><category term='மரணம்.. ஒரு ஃப்ளாஷ்பேக்'/><category term='Religion'/><category term='செய்தி விமர்சனம்'/><category term='பொது'/><category term='கிறீஸ்த்துவம்'/><title type='text'>என் உள்ளத்திலிருந்து</title><subtitle type='html'>என்னுடைய உள்ளத்தில் எழும் சிந்தனைகளை அப்படியே உங்கள் முன் வைக்கிறேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>138</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-1558830592459835667</id><published>2010-11-17T12:05:00.001+05:30</published><updated>2010-11-17T12:12:10.896+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>போலி, பகுதி-நேர பகுத்தறிவாளர்கள்.</title><content type='html'>பகுத்தறிவது என்ற சொல்லை பகுத்து+அறிவது என்று பிரிக்கலாம். அதாவது எந்த ஒரு விஷயத்தையும் கேட்டு அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் நதிமூலம், ரிஷிமூலத்தை ஆய்ந்து அதன் பொருளை அறிவது. இதை அப்படியே முழுமையாக கடைபிடிப்பவர்களை பகுத்தறிவாளர்கள் என்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதை அப்படியே பகுத்தறிவாளர்களுடைய பகுத்தறியும் திறன் ஏற்றுக்கொள்வதில்லை. அதை அவர்களுக்கு சரியான ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;'இவர்தாண்டா உங்க அப்பா' என்ற என் தாயின் சொல்லை எப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு அவருடைய கணவரை என் தந்தையாக ஏற்றுக்கொண்டேனோ அப்படித்தான் கடவுள் இருக்கிறார் என்ற என்னுடைய பெற்றோர் கூறியதையும் இதுவரை ஏற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது எனக்கு எதையும் பகுத்து அறிந்துக்கொள்ளும் திறன் வந்துவிட்டது. ஆகவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் (beyond reasonable doubt) தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாதபட்சத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை இனியும் ஏற்றுக்கொள்ள இயலாது என்பவர்கள் இத்தகையோர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இவர்கள் பிறப்பால் இந்துக்களாகவோ, கிறிஸ்துவர்களாகவோ இருந்தவர்கள். அன்று பெற்றோர் வைத்த இந்து மற்றும் கிறிஸ்துவ கடவுள்/புனிதர்களின் பெயரை இப்போதும் வைத்துக்கொண்டிருப்பவர்கள். இன்றும் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகள் மதம் சார்ந்த பெயர்களைத்தான் சூட்டுவார்கள். இவர்களுள் பலருடைய வீடுகளிலும் மதம் சார்ந்த படங்களைக் காணலாம். தினசரி பூஜைகள் நடைபெறும். ஆனால் இதெல்லாம் வீட்டிலுள்ள பெண்களூக்காக என்பார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்களை சம்பிரதாயமாக கொண்டாடுவார்கள். கேட்டால் இதுவும் வீட்டுப் பெண்களூக்காகத்தான் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் மற்றும் சாதிகளின் அடிப்படையில் கிடைத்த, கிடைக்கக் கூடிய அனைத்து சலுகைகளையும் பெற்று மதம் சார்ந்தோர் நடத்தும் பள்ளி/கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று சிறந்த நிறுவனங்களில் பணிக்கு அமர்ந்தவர்கள். தங்களுடைய பிள்ளைகள் ஏன் பேரக் குழந்தைகளூக்கும் இவற்றை பெற்றுத் தந்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;'யாருக்கு தேவைகள் அதிகமோ அவர்கள் மட்டுமே கோவிலுக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறார்கள்' என்பார்கள். ஆனால் இவர்கள் வீட்டுப் பெண்கள் சாமி கும்பிடுவதையும் கோவிலுக்கு செல்வதையும் இவர்களால் தடுக்க முடியாது. ஒருவேளை இவர்களுடைய தேவைகளுக்கும் சேர்த்து வீட்டிலிருப்பவர்கள் கோவில்களுக்கு செல்கிறார்களோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் நடக்கும் அனைத்துக்கும் ஏதோ ஒரு காரண காரியம் உண்டு ஆகவே இறைவனுக்கும் அவற்றிற்கும் சம்பந்தம் இல்லை என்பது இவர்களுடைய வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட இரு அனுபவங்களை இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மகப்பேறு:&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்னை கிளைகளில் ஒன்றில் மேலாளராக இருந்த காலத்தில் என்னுடைய கிளைக்கு மிக அருகாமையில் ஒரு மகப்பேறு மருத்துவமனை இருந்தது. அதன் உரிமையாளரான பெண் மருத்துவரிடம் என்னுடைய கிளையில் கணக்கு ஒன்று திறக்க கூறி அணுகலாம் என்று முயன்றபோது அவரை சந்திக்கவே இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அத்தனை கைராசியான மருத்துவர் என்று பெயரெடுத்தவர். அடுத்த சில மாதங்களில் அவரை அடிக்கடி அலுவல் விஷயமாக சந்தித்ததில் நட்பு ஏற்பட்டது. அவருடைய தந்தையும் கணவரும் கூட மகப்பேறுதுறையில் சிறந்த மருத்துவர்கள். மாதம் ஒன்றிற்கு நூற்றிற்கும் மேற்பட்ட பிரசவங்களைக் காணும் மருத்துவமனையின் உரிமையாளருக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. இதைக் கேட்டதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதை அவரிடமே ஒருமுறை விசாரித்தபோது அவர் கூறியது இதுதான். "எங்க ரெண்டு பேருக்குமே உடல் ரீதியா குழந்தை பிறப்பதற்கு தடையா எதுவும் இல்லை. பலமுறை கருத்தரித்தும் அது குறை பிரசவமாகவே முடிந்துபோனது. ஏன் என்று எங்கள் இருவருக்கும் இதுவரை விளங்கவில்லை.'&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவருடைய அனுபவத்தில் குழந்தை பேறு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று அவர் ஆய்வு செய்து திருப்பி அனுப்பிய பல பெண்களுக்கும் குழந்தை பேறு கிடைத்ததையும் குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளது என்ற குழந்தைகள் குறைபிரசவத்தில் மரித்து பிறந்ததையும் அவர் விளக்கிவிட்டு 'எல்லாமே நம்ம கையில இருக்குன்னு சொல்ல முடியறதில்லை சார்.' என்றது இப்போதும் நினைவில் நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மூத்த மகள் விஷயத்திலும் இதை என்னால் உணர முடிந்தது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் மகப்பேறு இல்லாமல் மலேஷியாவில் பல மருத்துவர்களை கண்டும் ஒன்றும் பலனளிக்காமல் அவரை சென்னைக்கு வரவழைத்து இங்கு அத்துறையில் மிகவும் பிரபலமான ஜி.ஜி. (ஜெமினி கனேசனின் மகளுடையது) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கும் இருவருக்கும் உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை எப்போது வேண்டுமானாலும் கருத்தரிக்கலாம் என்றார்கள். அவர்களுடைய வாய் முகூர்த்தம் என்பார்களே அதே போல் அடுத்த ஒரு ஆண்டிற்குள்ளாகவே கருத்தரித்தார் என் மகள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் கருத்தரிக்க ஏன் மூன்றாண்டுகள் ஆனது? இதற்கு என்ன காரணம் என்று இத்துறையில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்களிடம் எந்த விளக்கமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நண்பர் ஒருவருக்கு சிறு வயது முதலே ஆஸ்துமா. வருடத்தில் ஆறுமாதங்கள் படாதபாடு படுவார். அதன் தீவிரத்தை குறைக்க எண்ணி பல்வேறு மருத்துவங்களை செய்தார். இறுதியில் நண்பர் ஒருவரின் பேச்சை நம்பி ஒரு அரைகுறை மருத்துவரிடம் செல்ல அவர் தொடர்ந்து ஸ்டீராய்டை ஊசி மூலம் ஏற்ற நாளடைவில் ஆஸ்துமா குறைந்தது. ஆனால் அதை தொடர்ந்து ஒரு சில ஆண்டுகளில் அவருடைய கால் நடுக்கம் ஆரம்பித்து எழுந்து நிற்கவே முடியாமல் போனது. நானும் எனக்கு தெரிந்த பல மருத்துவர்களிடம் (அப்போல்லோ மருத்துவர்கள் உட்பட) அழைத்துச் சென்றதில் ஸ்டீராய்டின் தாக்கம்தான் இதற்குக் காரணம் இனி அவரால் யாருடைய துணையும் இல்லாமல் நடக்க முடியாது என்று கூறிவிட்டனர். சோர்ந்துபோன என்னுடைய நண்பர் இறுதியில் தெய்வமே கதி என்று தனக்கு குணமானால் தன் வாழ்நாள் முழுவதும் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை கால்நடையாகவே வருகிறேன் என்று நேர்ந்துக்கொண்டார். முதல் வருடம் நண்பர்கள் துணையுடன் சக்கர நாற்காலியில் சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நடைபயணம் மேற்கொண்டார். இடை இடையில் நண்பர்கள் பற்றிக்கொள்ள சில அடிகள் எடுத்து வைப்பார். பதினைந்து வருடங்கள் ஆகின்றன. அவருடைய பயணம் இன்றும் தொடர்கிறது. சக்கர நாற்காலி இல்லை. நண்பர்கள் கைத்தாங்கல் இல்லை. எவ்வித சிகிச்சையும் பெறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக நோய் வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பதல்ல. ஆனால் மருத்துவத்தால் கைவிடப்பட்ட பலரும் ஏதோ ஒரு சக்தியால், அந்த சக்தியின் மீதுள்ள அவர்களுடைய நம்பிக்கையால் குணமடைந்துள்ளார்கள் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இறை நம்பிக்கை என்பது அறிவுத்திறனை சார்ந்ததல்ல என்பதுதான் என்னுடைய வாதம். மனித மனங்களை ஆய்ந்து அறிந்தவர் எவரும் இல்லை. ஆகவே இறை நம்பிக்கையையும் எவராலும் ஆய்ந்து அறிந்துக்கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கிறிஸ்துவனாக பிறந்தேன், கிறிஸ்துவனாக வளர்ந்தேன், கிறிஸ்துவனாகவே மரிப்பேன். நான் படித்த படிப்போ, எனக்கு இதுவரை கிடைத்த அறிவு வளர்ச்சியோ இந்த நம்பிக்கையை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறுவனாக இருந்தபோது வேறுவழியில்லாமல் கிறிஸ்துவனாக இருந்தேன். இப்போது பகுத்தறியும் திறன் வந்துவிட்டது. ஆகவே கிறிஸ்து இருந்தார் என்பதற்கு சரியான சரித்திர சான்றுகள் கிடைக்காதவரை நான் அவரையோ அவர் ஏற்படுத்திய மதத்தையோ நம்பமாட்டேன் என்றால் நான் ஒரு பொய்யன், ஒரு சந்தர்ப்பவாதி, அரைகுறை பகுத்தறிவாளன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போலியான, பகுதி-நேர, சந்தர்ப்பவாத பகுத்தறிவாளனாக இருப்பதைவிட ஒரு முழுமையான விசுவாசியாக இருப்பதே சிறந்தது என்பதை நம்புகிறவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே சமயம் மதங்கள் பெயரால் மதகுருமார்கள் செய்யும் அக்கிரமங்களை ஏற்றுக்கொள்கிறவன் அல்ல. அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாயினும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-1558830592459835667?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/1558830592459835667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/11/blog-post_17.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/1558830592459835667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/1558830592459835667'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/11/blog-post_17.html' title='போலி, பகுதி-நேர பகுத்தறிவாளர்கள்.'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-6477114373048786089</id><published>2010-11-02T13:41:00.000+05:30</published><updated>2010-11-02T13:41:01.343+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்று மரித்தோர் தினம்!</title><content type='html'>இன்று உலகெங்குமுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர், நண்பர்கள் குடும்பத்தில் மரித்துப்போனவர்கள் நினைவாக பிரார்த்தனை செய்யும் தினம். &lt;br /&gt;&lt;br /&gt;இதை ஆங்கிலத்தில் All Souls Day என்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று மரித்தவர்களுடைய கல்லறைகளுக்குச் சென்று மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்திகள் ஏற்றி அவர்களுக்காக செபிப்பது வழக்கம். சிலர் மரித்தவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு பண்டங்களையும் எடுத்துச் சென்று கல்லறையில் வைப்பதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தஞ்சை மற்றும் தூத்துக்குடி போன்ற சிறிய நகரங்களில் பணியாற்றியபோதுதான் இந்த தினத்தின் மகிமையை முழுவதுமாக உணர முடிந்தது. அங்குள்ள தேவாலயங்களில் தொடர்ந்து நடைபெற்ற பிரார்த்தனைகளில் கலந்துக்கொள்ளும் மக்கள் கூட்டமும் அன்று நாள் முழுவதும் கல்லறைகளுக்கு கைநிறைய மலர்களுடன் படையெடுக்கும் கூட்டமும்... நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். குறிப்பாக தஞ்சையில் அதிகாலையிலேயே நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் பூக்களை கூடை, கூடையாக கொண்டு வந்து சர்ச் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் கடைகளை பரப்பி விடுவார்கள். அன்றைய நாள் முழுவதுமே வியாபாரம் படுஜோராக நடைபெறும். கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் இந்துக்களும் இதில் கலந்துக்கொண்டு தங்கள் கிறிஸ்துவ நண்பர்களுடன் இணைந்து கல்லறைக்கு செல்வதைக் கண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;படிப்பும் நாகரீகமும் அதிகம் இல்லாத அந்த பாமரர்கள் மத்தியில்தான் இத்தகைய பாசமும் நேசமும் மரித்துப்போனவர்களையும் வருடம் ஒரு நாளாவது நினைத்துப் பார்க்கும் பழக்கமும் இன்றும் இருக்கிறது. சற்று கேள்வி ஞானமும், பகுத்தறியும் திறனும் வந்துவிட்டாலே இத்தகைய வழக்கங்களை மூட நம்பிக்கை என அழைக்கும் குணமும் நம்மில் சிலருக்கு வந்துவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் அவர் எத்தனைத்தான் புனிதமான வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் மரித்ததும் நேரே மோட்சத்திற்கு (சொர்க்கவாசல்) சென்றடைவதில்லையாம். படுபாதகராய் வாழ்ந்து மரிப்பவர்கள் நேரே நரகத்திற்கும் அற்ப தவறுகளுடன் மரிப்பவர்கள் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கிடையில் இருக்கும் உத்தரிக்கும் ஸ்தலம் (Purgatory) என அழைக்கப்படும் இடம் தங்களுடைய அற்ப தவறுகளுக்காக தங்களை சுத்திகரித்துக்கொள்ளும் இடமாக இருப்பதாக கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையோர் நினைவாகத்தான் மரித்தோர் தினத்தை அவரைச் சார்ந்த குடும்பத்தினர் பிரார்த்தனகளில் செலவிடுகின்றனர். அவர்கள் நினைவாக ஏழை, எளியோரை அழைத்து உணவு கொடுப்பது, மரித்தவர்க்ள் பயன்படுத்திய ஆடைகளை அவர்களுக்கு அளிப்பது போன்றவற்றையும் செய்வதன் மூலம் கிடைக்கும் புண்ணியம் மரித்தவர்களுடைய உத்தரிக்கும் காலத்தை குறைத்து அவர்களை விரைவிலேயே சொர்க்கத்திற்குள் நுழைய வழிவகுக்கும் என்று நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்றார் உறவினர் என யாரும் இல்லாத அனாதை ஆன்மாக்களுக்காகவும் இன்றைய தினத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் தேவாலயங்களில் நடைபெறுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துச் சகோதரர்கள் தங்கள் குடும்பத்தில் மரித்தவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தியடைய அவர்களுடைய பிறந்த மற்றும் இறந்த தினங்களில் செய்யும் பூஜைகளைப் போன்றவைதான் கிறிஸ்துவர்கள் செய்யும் இத்தகைய பிரார்த்தனைகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இவற்றிலெல்லாம் இன்றும் நம்பிக்கைக் கொண்டுள்ளவர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே இல்லை என்றும் எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக மட்டுமே அணுக வேண்டும் என்றும் மதங்களை வெறும் மேல் சட்டைகளாக மட்டுமே கருதும் சிலருக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-6477114373048786089?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/6477114373048786089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/6477114373048786089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/6477114373048786089'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/11/blog-post.html' title='இன்று மரித்தோர் தினம்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-635174700758866365</id><published>2010-10-19T12:00:00.002+05:30</published><updated>2010-10-20T10:27:12.509+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Religion'/><title type='text'>Is Celibacy Possible?</title><content type='html'>The recent controversy of alleged raping of an excommunicated nun by the former Principal of St.Joseph College, Trichy has once again brought to the fore the question of practicality of celibacy practised by Roman Catholic Priests.&lt;br /&gt;&lt;br /&gt;In fact the condition that the RC Priests should practice celibacy or to remain unmarried was not there till 1130 AD i.e. upto almost 1100 years after the Christ was born!&lt;br /&gt;&lt;br /&gt;In the early days, the Priests were allowed to marry and have children just like the other branches of Christianity commonly known as the Proestants. Even though the elders of the Church were not in favour of this trend and several attempts were made to correct it they could not succeed till 1139 when a general council was summoned by Pope Innocent II and held in the Lateran basilica. At the end of the meet the Council decreed "that the law of continence and the purity pleasing to God might be propagated among ecclesiastical persons and those in holy orders, we decree that where bishops, priests, deacons, subdeacons, canons regular, monks and professed lay brothers have presumed to take wives and so transgress this holy precept, they are to be separated from their partners. For we do not deem there to be a marriage which, it is agreed, has been contracted against ecclesiastical law."&lt;br /&gt;&lt;br /&gt;However, it is interesting to note that Jesus Christ himself did not insist on celibacy as the first head of the Church, St. Peter, was himself a married man though he was said to have given up all his worldly possessions to follow Jesus. Jesus knew very well the limitations of human ability to practice celibacy as he says (Mathew:19:11):"This teaching (not marrying) does not apply to everyone, but only to those whom God has given it.... and others (who) do not marry for the sake of the kingdom of heaven. Let him who can accept this teaching do so."&lt;br /&gt;&lt;br /&gt;In 1 Corinthians 7:1-9, 25-40, St Paul says that it's fine to be idealistically commited to not marrying in order to devote one's life wholly to the service of God but if you can't handle it, you could be setting ourself up for spiritual disaster - we have seen how some churhes have had to deal with horrendous sins of fornication, adultery, and perversion because their priests were not able to contain their sexuality. He further says that "it is better to marry that burning with passion."&lt;br /&gt;&lt;br /&gt;Yes, it is better to give up celibacy than burning with passion for sex which finally leads to adultery.&lt;br /&gt;&lt;br /&gt;It has also been observed by several historians that the Church was in fact forced to bring Celibacy as a precondition for the aspiring RC Priests for fear of losing huge properties owned by the Church across the globe as several Clerics who were allowed to marry bequeathed the Church properties to their wife and children. The historians therefore surmise that Celibacy was introduced more as a man-made rule to protect one of the worldly belongings of the Church than as a virtue.&lt;br /&gt;&lt;br /&gt;The Church instead of accepting its own folly of forcing Celibacy on Priests for such earthly reasons declared that a married person would not be able to do justice to his ecclesiastical duties to justify its act. "An unmarried man concerns himself with the Lord's work, because he is trying to please the Lord. But a married man conerns himself with worldly matters, because he wants to please his wife; and so he is pulled in two directions."&lt;br /&gt;&lt;br /&gt;It maybe true as a married person has to face the day-to-day problems of running a family, as well. We have also recently read in the papers about a CSI Bishop swindling crores of Church money to the benefit of his family and a son of another Hindu seer selling properties belonging to the Temple, taking advantage of advanced age of his father!&lt;br /&gt;&lt;br /&gt;If the actual reason behind enforcing Celibacy is only to ensure the rights of the Church over its Property it can very well achieve its aim by taking away the selling rights of the Priests through a decree instead of depriving them of the worldly pleasures, which has become a burning issue these days. &lt;br /&gt;&lt;br /&gt;The ongoing controversy of the Church remaining a mute spectator when several hundres of its Priests were indulging in pedophilia, especially in Western countries, is also one of the offshoot of this practice of forcing celibacy on the Priests.&lt;br /&gt;&lt;br /&gt;The time has therefore come for the Church to subject itself to an introspection and analyse the practicality of practicing Celibacy and come to a practical solution.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-635174700758866365?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/635174700758866365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/10/is-celibacy-possible.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/635174700758866365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/635174700758866365'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/10/is-celibacy-possible.html' title='Is Celibacy Possible?'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-9082075085655019432</id><published>2010-10-01T12:56:00.000+05:30</published><updated>2010-10-01T12:56:14.086+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கண்ணதாசனின் நெஞ்சம் மறப்பதில்லை</title><content type='html'>கவிஞர் கண்ணதாசனுடைய மகள் விசாலி வழங்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தந்தையை அப்படியே உரித்து வைத்திருக்கும் விசாலி அழகான புன்னகையுடன் அவருடைய நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளும் அழகே அழகு. அவரே ஒரு சிறந்த கவிஞை என்பதை அவருடைய அழகு பேச்சு எடுத்துக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துக்கொண்ட நிகழ்வு மிகவும் அருமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் ஒரு கவியரங்கத்திற்கு தலைமையேற்கிறார். நடக்கும் இடம் ஒரு கல்லூரி. கவிஞருக்கு முன் கவிதை வாசித்த அனைவரையும் மாணவர்கள் எள்ளி நகையாடி வெளியேற்றுகின்றனர். இறுதியில் கவிஞர் எழுந்து தன்னுடைய கவிதையை வாசிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வாசித்த கவிதையின் ஒவொரு வரிக்கும் எழும் கைதட்டல் அவருடைய கவிதையையே கேட்க முடியாமல் செய்துவிடுகிறது. கைதட்டல் ஓயும்வரை காத்திருக்கிறார் கவிஞர். இறுதியில் புன்னகையுடன் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;'இப்போது நான் வாசித்த கவிதை என்னுடையதல்ல. எனக்கு முன்பு&amp;nbsp;நான் எழுதிய&amp;nbsp;கவிதையை&amp;nbsp;வாசித்துவிட்டு சென்றாரே ஒரு இளம் கவிஞர் அவர் எழுதியது. என்னுடைய கவிதையை அவர் வாசிக்க நீங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் அவருடைய கவிதையை நான் வாசித்தபோது நீங்க கரவொலியுடன் வரவேற்றீர்கள். நீங்கள் மதிப்பது என்னுடைய கவிதையை அல்ல கண்ணதாசன் என்ற ஒரு மனிதனைத்தான்.'&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வை தனக்கே உரிய பாணியில் புன்னகை மாறாமல் விசாலி கூறியபோது கேட்பதற்கு மிகவும் அழகாக இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கூறியதில் நினைவில் நிற்பது:&lt;br /&gt;&lt;br /&gt;'பாட்டு எழுத கவிஞர் கண்ணதாசன், இசை அமைக்க MSV, பாடுவதற்கு TMS, அதற்கு தத்ரூபமாக வாயசைத்து அற்புதமாக தன்னுடைய நடிப்பால் உயிர்கொடுக்க நடிகர் திலகம். இப்படியொரு கூட்டணி இனி அமைய வாய்ப்பே இல்லை.'&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டணியின் வெற்றிக்கு நடிகர் திலகம் முக்கிய காரணமாக இருந்தார் என்பதை மறக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் திலகத்தின் பிறந்தநாளாகிய இன்று இதை நினைவுகூர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-9082075085655019432?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/9082075085655019432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/9082075085655019432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/9082075085655019432'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/10/blog-post.html' title='கண்ணதாசனின் நெஞ்சம் மறப்பதில்லை'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-4084826694838096775</id><published>2010-09-15T13:20:00.000+05:30</published><updated>2010-09-15T13:20:13.781+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நிதானம் தவறிய நிமிடங்கள்...(நிறைவு)</title><content type='html'>இந்த அமைப்பில் இணைந்து தங்களை இந்த கொடிய நோயிலிருந்து மீட்டுக்கொள்ள விரும்புபவர்கள் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த பன்னிரண்டு கோட்பாடுகளை கடைபிடித்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உட்படுத்தப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டு எதிர்காலமே ஒரு சூன்யமாக தோன்றும் நபர்கள் ஏதாவது ஒரு பிடிப்பு அது எத்தனை சிறிய துரும்பாக இருந்தாலும், அதை பிடித்துக்கொண்டு கரையேறிவிட மாட்டோமா என்ற அங்கலாய்ப்புடன் வருவதால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தங்களை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்கின்றனர் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சக்தியை இறை நம்பிக்கையுள்ளவர்கள் 'கடவுள்' என்றும் அது இல்லாதவர்கள் 'தங்களை மீறிய சக்தி' என்றும் உருவகப்படுத்திக்கொள்கின்றனர். மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்காத நிலையில் இந்த அமைப்பை&amp;nbsp; அணுகுகின்ற சூழலில் கடவுள் என்கின்ற விஷயம் இவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பில் இணைய விரும்புபவர்களுக்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி 'நான் குடிபோதைக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து மீள முடிய விரும்புகிறேன்.' என்று மனமார ஏற்றுக்கொள்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முன்பே கூறியபடி இந்த அமைப்பில் மருத்துவ வசதிகளோ அல்லது உளவியல் ஆலோசனைகளோ அளிக்கப்படுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பு செய்வதெல்லாம் அங்கத்தினர்கள் வாரம் ஒருமுறையாவது ஒரு பொது இடத்தில் கூடி மனம் திறந்து பேசிக்கொள்ள வசதி செய்து தருவதுதான். அதற்கு யார் இலவசமாக இடவசதி செய்து கொடுக்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்கிறது இந்த அமைப்பு. ஆனால் சென்னையிலும் தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் ஏன் உலகெங்குமே எனக்கு தெரிந்தவரை இந்த அமைப்பின் கூட்டங்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைந்துள்ள அலுவலக அல்லது பள்ளி அறைகளில்தான் நடக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டங்களில் இருவகை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;1. பொதுக் கூட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடைய நலனில் அக்கறையுள்ளவர்கள் அல்லது இந்த அமைப்பைப் பற்றி அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் (ஆனால் ஊடகங்களை சார்ந்த நிரூபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை! அப்படியே குறிப்பிட்ட சிலர் அனுமதிக்கப்பட்டாலும் கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பற்றி அவர்கள் எழுதும் கட்டுரைகளில் சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ வெளியிடலாகாது என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.) கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய கூட்டங்களில் ஒருமுறை நீங்கள் கலந்துக்கொண்டால் இந்த நோயினால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் வாழ்கின்ற எத்தனைபேர் மனரீதியாகவும் பொருள் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்துக்கொள்ளலாம். சில குடும்பங்களுடைய சோக கதைகளை கேட்டால் கல்மனமும் கரைந்துபோகும். பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டு மீண்டும் தங்களுடைய வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள இவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதும் விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பிரத்தியேக கூட்டங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பாதிக்கப்பட்ட அங்கத்தினர்களைத் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டங்களில் பேசியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் இல்லை. பெரும்பாலும் இந்த நோயிலிருந்து மீண்டும் வந்தவர்களே முதலில் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள முன் வருவார்கள். அவர்களுடைய அனுபவத்தை கேட்டு பல புதிய அங்கத்தினர்களும் தாங்கள் பாதிக்கப்பட்ட விவரத்தை கூறி தங்களுக்கு உதவ வேண்டுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டங்கள் அங்கத்தினர்களை உளரீதியாக இதிலிருந்து விடுபட தயார்படுத்துவதை மட்டுமே செய்கின்றன. இத்தனை கூட்டங்களில் கலந்துக்கொண்டால் நீங்கள் இதிலிருந்து விடுபட்டுவிட முடியும் என்பதுபோன்ற பொய்யான வாக்குறுதிகள் ஏதும் வழங்கப்படுவதில்லை. கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய விவரங்களை தினத்தாள்களில் வெளியிடுவதைத் தவிர வேறெந்த விளம்பரமும் இந்த அமைப்புகள் செய்வதில்லை. பத்திரிகைகளும்&amp;nbsp;கூட&amp;nbsp;தாங்களாகவே முன்வந்து இவற்றை இலவசமாக வெளியிடுகின்றன என்கின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இலவசமாகவே நாங்கள் பெற்ற ஆலோசனைகளை இலவசமாகவே பிறருக்கு வழங்குகிறோம்' இதுதான் இந்த அமைப்பின் கொள்கை வாசகம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பில் இணைவதற்கோ அல்லது கூட்டங்களில் பங்குகொள்ளவோ எவ்வித கட்டாய கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இன்னுமொரு கூடுதல் தகவல் இந்த அமைப்பின் நியூயார்க் நகரில் இயங்கி வரும் தலைமையகமும் நம் நாட்டில் இயங்கிவரும் கிளைகளுக்கு எந்த நிதியுதவியும் செய்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே கூட்டங்களை நடத்துவதற்காக ஏற்படும் சில்லறை செலவினங்களை எதிர்கொள்ள கூட்டங்களில் கலந்துக்கொள்பவர்கள் தங்களுடைய விருப்பம் மற்றும் தகுதிக்கு ஏற்ப தாங்களாகவே முன்வந்து நன்கொடை வழங்குகின்றனர் என்பதும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நண்பர்களே, இந்த நோயில் நாம் பாதிக்கப்படவில்லை என்றாலும் நம்மை சார்ந்தவர்கள் அல்லது நண்பர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர்களை இந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களில் கலந்துக்கொண்டு இந்த கொடிய நோயிலிருந்து மீள ஊக்குவிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-4084826694838096775?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/4084826694838096775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post_15.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/4084826694838096775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/4084826694838096775'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post_15.html' title='நிதானம் தவறிய நிமிடங்கள்...(நிறைவு)'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-4978146344971891274</id><published>2010-09-14T15:59:00.000+05:30</published><updated>2010-09-14T15:59:34.185+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நிதானம் தவறிய நிமிடங்கள் (AA - ஒரு அறிமுகம்)</title><content type='html'>குடிப்பழக்கமும் (நான் குடிப்பதுண்டு, ஆனால் குடித்தே தீரவேண்டும் என்பதில்லை) குடிக்கு அடிமையாவதும் (என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லை) வெவ்வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில், குறிப்பாக மேல்மட்டத்தில், மது அருந்தாமல் இருப்பது அபூர்வம் என்று கூட கூறலாம். எந்த ஒரு வர்த்தக அல்லது நட்பு கூட்டமும் Fellowship எனப்படும் மதுவுடன் கூடிய விருந்து இல்லாமல் முடிவதில்லை. இத்தகைய கூட்டங்களில் மது அருந்தாதவர்கள் வரவேற்கப்படுவதில்லை என்று கூட கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கீழ்மட்டத்திலும் அப்படித்தான். இன்று தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் நிரம்பிவழியும் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியும் நான் கூற வருவது என்னவென்று. தினக்கூலி தொழிலாளர்கள், அரசு பணியில் உள்ள கடைநிலை ஊழியர்கள், ஆட்டோ, லாரி மற்றும் மூன்று சக்கர பளுதாங்கும் வாகன ஓட்டுனர்கள் இவர்கள்தான் இத்தகைய கடைகளின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுள் பெரும்பாலானோர் நான் துவக்கத்தில் கூறிய 'குடிக்கு அடிமையானவர்கள்' என கூறலாம். காலையில் கடை திறக்கப்படுவதற்கு முன்னரே வாசலில் காத்திருப்பவர்களும் இவர்கள்தான். அதாவது தங்களுடைய அன்றாட அலுவலை துவக்க வேண்டுமென்றால் சில மில்லிகளை விழுங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானவர்கள். அப்போதுதான் அவர்களால் செயலாற்ற முடியும். சிலருக்கு 'நிதானம்' தவறினால்தான் எதையும் நிதானமாக சிந்திக்க முடியும். நடுங்கும் கரங்களை, கால்களை ஒரு நிதானத்திற்கு கொண்டுவர உதவுவதும் இந்த திரவம்தான் என்றால் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது தமிழகத்திற்கு மட்டுமே சொந்தமல்ல. அண்டை மாநிலமான கேரளம்தான் நாட்டிலேயே அதிகம் 'குடிமக்களை' கொண்ட மாநிலம் என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே அதிகம் படித்தவர்களைக் கொண்ட மாநிலமும் அதுதான். கேரளம் நாட்டின் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபடுவது எதில் என்றால் 'குடிமகன்களின்' வரையறுப்பில்தான்! அதாவது அங்குதான் மேல்மட்டமும் இல்லாமல் அடிமட்டமும் இல்லாமல் நடுத்தரம் அல்லது அலுவலகவாசிகள் எனப்படுபவர்களும் இதற்கு அடிமையாகியுள்ளனர். &lt;br /&gt;நான் கேரளத்தில் சில வருடங்கள் பணியாற்றிய அனுபவத்தில் இதை கூறுகிறேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் Bankers' Club கூட்டங்கள் பெரும்பாலும் கூடி குடிப்பதற்குத்தான் நடத்தப்படுகின்றன என்பதுபோல் கூட்டம் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் Fellowship பெரும்பாலும் 'கையிருப்பு' தீரும்வரையிலும் நடப்பதுண்டு. கூட்டத்தின் இறுதியில் பலர் சிறு, சிறு கிளைகளாக பிரிந்து நள்ளிரவு வரை 'தனி ஆவர்த்தனம்' செய்வதையும் பார்த்திருக்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையோரை இந்த ஒருவகை 'நோயில்' இருந்து மீட்கத்தான் Alchoholics Anonymous என்ற அமைப்பு உருவானது. இன்று அது சுமார் 180 நாடுகளில் செயல்படுகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;'A.A.' அமைப்பைப் பற்றி ஆய்வு செய்கையில் இந்த 'நோய்' இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது அவர்களுடைய அறிக்கைகளில் இருந்தே தெரிகிறது. இந்த அமைப்பில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள் சுமார் 20 லட்சம் பேர் என்பதிலிருந்தே தெரியவில்லையா இந்த 'நோயின்' தீவிரம்!&lt;br /&gt;&lt;br /&gt;'ஆல்கஹாலிக் அனானிமஸ்' என்ற இந்த அமைப்பு 1935ம் ஆண்டு இந்த 'நோய்க்கு' அடிமையாகிப் போன ஒரு பொறியாளர் (பில் வில்சன்) மற்றும் ஒரு மருத்துவர் (டாக்.பாப்) என்ற இரு அமெரிக்கர்களால் அதே நோய்க்கு அடிமையாயிருந்த தங்களுடைய நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து துவக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பில் அங்கத்தினர்களாக சேர்வதற்கு சாதி, இனம், மதம், மொழி, வர்க்கம் என்ற எந்த பாகுபாடும் இல்லை. 'நான் இந்த நோய்க்கு அடிமையாகிவிட்டேன். இதிலிருந்து நான் மீள வேண்டும்.' என்று கருதும் எவரும் இதில் அங்கத்தினர்களாகலாம். இத்தகையோர் தங்களுடைய அனுபவங்களை பாதிக்கப்பட்ட மற்ற அங்கத்தினர்களுடன் பகிர்ந்துக்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு ஒருங்கிணைந்து போராடுவதே இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அங்கத்தினர்களாக இணைவோரின் பின்புலத்தைப் பற்றி ஆராயவோ அல்லது அவர்களுடைய பெயர்,விலாசம் போன்ற விவரங்களை பதிவுசெய்து அவர்கள் தொடர்ந்து இந்த போதைக்கு அடிமையாகாமல் வாழ்கின்றனரா என்றெல்லாம் இந்த அமைப்பு செய்வதில்லை. அதுபோன்றே உளவியல் அல்லது மருத்துவ ஆலோசனைகளோ அல்லது சிகிச்சைகளை வழங்குவதும் இந்த அமைப்பின் நோக்கமல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பை துவக்கியவர்கள் இதில் அங்கத்தினர்களாக விழைவோர்க்கு என&amp;nbsp; 12 அம்ச கோட்பாட்டை நிர்ணயித்திருந்தாலும் இவற்றை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமோ அல்லது நியதியோ இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;1. நான் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். இதை என்னுடைய கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. என்னையும்&amp;nbsp;விட&amp;nbsp;வலிமையான சக்தி ஒன்று உள்ளது என்பதையும் அதால் என்னை இந்த பழக்கத்திலிருந்து விடுவிக்க முடியும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அந்த சக்தியிடம் என்னையும் என்னுடைய வாழ்வையும் ஒப்படைக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;4. என்னை ஒரு முழுமையான ஆன்ம சோதனைக்கு ஆட்படுத்தி அதன் மூலம் இந்த பழக்கத்திலிருந்து மீளமுடியாத என்னுடைய இயலாமையை அறிந்துக்கொண்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5. என்னுடைய தவறுகளை, என்னுடைய இந்த இயலாமையை, 'கடவுள்' என்ற என்னை மீறிய சக்தியிடமும் என்னுடைய நண்பர்களுடனும் ஒப்புக்கொள்ள தயங்கமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;6. என்னுடைய இந்த இயலாமையை என்னிடமிருந்து முற்றிலும் அகற்றுவதில் அந்த சக்தியுடன் இணைந்து&amp;nbsp;ஒத்துழைக்க முன்வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;7. என்னுடைய குறைகளை ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து என்னை விடுவிக்க அந்த சக்தியிடம் தாழ்மையுடன் கோருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;8. என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் நான் யாருக்கெல்லாம் தீங்கிழைத்திருக்கிறேன் என்பதை ஆன்மசுத்தியுடன் ஆய்வுசெய்து&amp;nbsp;அவர்களுக்கு என்னால் இயன்றவரை ஈடு செய்ய சித்தமாயுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;9. என்னால் பாதிக்கப்பட்டவர்களுடைய நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாதவரையில் என்னால் இயன்றவரை என்னுடைய தவறுகளுக்கு பிராயசித்தம் செய்யவும் முயல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;10. நான் இனியும் பிறருக்கு தீங்கிழைக்காமல் இருக்கவும் என்னையும் அறியாமல் அவ்வாறு செய்ய நேரும்போதெல்லாம் அவற்றிற்கு பரிகாரம் செய்யவும் உறுதி கூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;11. தியானம் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் கடவுள் எனப்படும் சக்தியின் சித்தத்தை அறிந்துக்கொள்ளும் திறனையும் அவற்றை கடைபிடிக்க வேண்டிய வல்லமையை எனக்கு அளித்தருள வேண்டுமென்றும் கோருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;12. கடவுளை அறிந்துக்கொள்ள நான் செய்யவிருக்கும் முயற்சிகளின் பயனாக நான் அடையவுள்ள அனைத்து நன்மைகளையும் என்னைப்போன்றே இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள என்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதன் மூலம் அவர்களையும் இதிலிருந்து விடுவிக்க என்னால் இயன்ற அளவுக்கு முயல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை முதலில் வாசிக்கும் எவருக்கும் இது ஏதோ இறை நம்பிக்கையை வளர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் புதிய அங்கத்தினர்கள்&amp;nbsp;இந்த கோட்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ தேவையில்லை என்பதையும் இந்த அமைப்பின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-4978146344971891274?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/4978146344971891274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/aa.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/4978146344971891274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/4978146344971891274'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/aa.html' title='நிதானம் தவறிய நிமிடங்கள் (AA - ஒரு அறிமுகம்)'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-7609353968971845756</id><published>2010-09-13T16:28:00.000+05:30</published><updated>2010-09-13T16:28:02.831+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நிதானம் தவறிய நிமிடங்கள்... (சலீம் பாய்)</title><content type='html'>இதய நோய் என்பது இன்னாருக்குத்தான் வரும் இன்னாருக்கு வராது என்று நியதி ஏதும் இல்லை. கடந்த வாரம் அகாலமாய் மரித்த நடிகர் முரளியின் உடல்வாகுவைப் பார்த்தால் இவருக்கா உறக்கத்திலேயே மரித்துப்போகும் அளவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற கேட்க தோன்றுகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலத்தான் குடிப்பழக்கமும். உல்லாசமாக நண்பர்களுடன் பொழுதை கழிக்க அல்லது நமக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு தோல்வியிலிருந்து அல்லது இழப்பிலிருந்து தேற்றிக்கொள்ள என்று துவங்குகிற குடிப்பழக்கம் நாளடைவில் நம்மை அறியாமலேயே நம்மை முழுவதுமாக ஆட்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முதல் இரண்டு பதிவுகளிலும் நான் விவரித்த இருவரில் முதல்வர் (மாத்யூஸ்) வாழ்க்கையில் தன்னுடைய மகளால் ஏற்பட்ட அவமானத்திலிருந்து விடுபட அவர் தஞ்சம் அடைந்தது மதுவை. இரண்டாமவர் (ரோஹினி) ஒரு ஜாலிக்காக, ஒரு புது அனுபவத்திற்காக குடிக்க துவங்கி இறுதியில் தன்னுடைய மணவாழ்வையே இழக்கும் அளவுக்கு மதுவில் தன்னை இழந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு வயது, பாலினம் ஏதும் விலக்கில்லை. இதில் இளம் வயதினர் மட்டுமே அடிமையாவார்கள் என்றோ அல்லது ஆண்கள் மட்டுமே அடிமையாவார்கள் என்றோ நியதி ஏதும் இல்லை. அதுபோன்றே படித்தவன், படிக்காதவன், பணக்காரன், பரமஏழை என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அவர்கள் தங்களை உணர்ந்து நிதானித்துக்கொள்வதற்கு முன்பே அடிமையாக்கிக்கொள்வதுதான் இந்த பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நான் விவரிக்க இருக்கும் நபர் ஒரு முதியவர். அவர் இந்த பழக்கத்திற்கு அடிமையானதாக உணர்ந்தபோது அவருக்கு வயது 70!&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய பெயர் சலீம். இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். இளம் வயதிலேயே அதாவது திருமணமாகி பதினைந்து வருடங்களுக்குள்ளாகவே மனைவியை இழந்தவர். தன்னுடைய இரண்டு மகன்களுக்காக மறு திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்தவர். ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் எப்படி இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையானார்? இதோ அவரே விவரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் பேங்க்லருந்து ரிட்டையர் ஆற வரைக்கும் குடிச்சதே இல்லைன்னு சொன்னா உங்களுக்கு நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். ஆனா அதுதான் உண்மை. ரிட்டையர் ஆறதுக்கு பத்து வருசத்துக்கு முன்னாலருந்து ஒரு சீனியர் எக்ஸ்க்யூட்டிவா இருந்தேன். அப்போ கலந்துக்கிட்ட பார்ட்டிகள்ல எல்லாம் வெறும் லைம் ஜூஸ் கிளாஸ் ஒன்னெ கையில வச்சிக்கிட்டு கம்பெனி குடுக்கறேன்னு நின்னப்போ லிக்கர் சாப்டுக்கிட்டு இருந்த என்னெ பார்த்து கிண்டலா சிரிச்சாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருந்த நானா இப்படி ஆல்கஹாலிக்குன்னு முத்திரை குத்தப்படற அளவுக்கு போய்ட்டேன்னு அவங்க யாராலயும் நம்ப முடியல. ஏன், என்னாலயே எப்படி இதுக்கு அடிமையானேன்னு நம்ப முடியல. ஆனா அதுதான் உண்மை. சாயந்தரம் ஆனா குடிக்காம இருக்க முடியல. கை, கால் எல்லாம் நடுங்குது. அஞ்சி நிமிசத்துக்கு மேல ஒரு இடத்துல உக்காந்து இருக்க முடியல. எதுக்கு வாழணும்னு தோனுது. தற்கொலை பெரிய பாவம்னு எங்க குரான் சொல்லுது. எந்த பாவத்துக்கும் விமோசனம் உண்டு. ஆனா தற்கொலைக்கு இல்லைன்னு சொல்லுது. அதனாலதான் இன்னும் உயிரோட இருக்கேன். உங்களோட தனிமைதான் இதுக்கு காரணம். பேசாம உங்க பிள்ளையோட சமாதானமாயி அவனோட போய் இருந்தீங்கன்னா இந்த பழக்கம் தன்னால போயிரும்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் பல பேர் சொன்னாங்க. ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்ல. நம்மள வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டவங்கள தேடி நாம எதுக்குப் போகணும்னு....&lt;br /&gt;&lt;br /&gt;தனிமை எனக்கு புதுசு இல்ல. என் மனைவி இறந்து ஏறக்குறைய முப்பது வருசம் ஆயிருச்சி. என் பசங்க ரெண்டு பேரையும் வளர்த்து ஆளாக்கணுமேன்னுதான் நா கல்யாணமே பண்ணிக்கலை. என் பசங்கதான் எனக்கு எல்லாமேன்னு இருந்துட்டேன். என்னோட வேலையில அடிக்கடி ஊர் ஊரா மாத்துவாங்கங்கறதால என் மனைவி இறந்ததும் என் பசங்க ரெண்டு பேரோட படிப்புக்காக அவங்கள இங்க ஹாஸ்டல்ல சேர்த்துட்டு நா மட்டும் போனேன். அதுதான் நா செஞ்ச பெரிய தப்பு. என் பசங்களுக்காகத்தான் நா மறு கல்யாணம் செய்யாம இருந்தேங்கற விஷயத்த என் பசங்களுக்கு நான் புரியவைக்க தவறிட்டேன். அம்மாவ இழந்துட்டு நின்ன பசங்களுக்கு ஒரு மாரல் சப்போர்ட்டா என்னெ எதிர்பார்த்திருப்பாங்க போலருக்குது. இத என்னால ரொம்ப வருசமா புரிஞ்சிக்க முடியல. &lt;br /&gt;&lt;br /&gt;அவங்களுக்கு தேவையான படிப்பு, கைச்செலவுக்கு பணம், உடுத்த ஆடை இப்படிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி வச்சா போறும்னு நினைச்சிட்டேன். நான் தனியா ரூம் எடுத்து தங்கியிருந்ததால சம்மர் வெக்கேஷன்ல கூட அவங்கள என்னோட வந்து தங்க வச்சி சப்போர்ட்டிவா இருக்கணும்னு எனக்கு தோனியதே இல்ல. அது அவங்க ரெண்டு பேரையும் மனத்தளவுல நிறையவே பாதிச்சிருக்கு.&lt;br /&gt;ஸ்கூல் முடிஞ்சி, காலேஜ், அதுக்கப்புறம் ஃபாரின்ல ஹையர் எஜுகேஷன் அப்படீன்னு அவங்களோட வாழ்க்கைக்கு என்னவெல்லாம் தேவையோ எல்லாத்தையும் செஞ்சி குடுத்த என்னெ அவங்களுக்கு என் மேல மதிப்பு மட்டுந்தான் இருந்துது, அப்பாங்கற பாசம் இருந்ததே இல்லைன்னு புரிஞ்சிக்கவே இல்லை. மேல படிக்கறதுக்காக ஃபாரின் போன பெரியவன் அங்கேயே வேலையை மட்டுமில்லாம ஒரு மனைவியையும் தேடிக்கிட்டான். கல்யாணம் பண்ணதுக்கப்புறந்தான் 'I would like to inform you Dad..' பேருக்கு ஒரு ஈமெய்ல் அனுப்பினன். ஏறக்குறைய பதினஞ்சி வருசம் கழிச்சி ஒரு கார் ஆக்சிடெண்ட்ல ஸ்பாட்லயே இறந்துட்டான்னு ஃபோன் வந்தப்போ எனக்கு போகணும்னு கூட தோனல.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட ரெண்டாவது மகன் அண்ணன மாதிரி அங்கேயே செட்டில் ஆகாம படிச்சி முடிச்சிட்டு திரும்பி வந்தான். அப்பாடா இவனாவது என்னெ புரிஞ்சி வச்சிருப்பான். என் கூடவே இருப்பான்னு நினைச்சேன். ஆனா பெரியவனெ விடவும் இவன் என்னெ வெறுத்திருக்காங்கறது அப்புறம்தான் தெரிஞ்சது. 'அண்ணன் வெளிநாட்ல இருந்துக்கிட்டு உன்னெ இக்நோர் பண்ணான். ஆனா நா உள்ளூர்ல இருந்துக்கிட்டே உன்னெ கண்டுக்கிட மாட்டேன்னு' சொல்றா மாதிரி இதே டவுன்ல செட்டிலாகியும் என்னெ ஒரு பொருட்டாவே மதிக்கறதில்ல. அவனும் என்னெ கலந்துக்காமயே கல்யாணமும் செஞ்சிக்கிட்டான். எப்பவாவது மாஸ்க்ல வச்சி பாத்தாலும் யாரோ மூனாவது மனுசன பாக்கறமாதிரி பாத்துட்டு போயிருவான். அவனுக்கு ரெண்டு பசங்க. என் புள்ளைங்கள பாக்காம இருந்த எனக்கு என் பேரப் பசங்கள பாக்க முடியாம, அவங்களோட பழக முடியாம போயிருச்சேங்கற வேதனைதான் எனக்கு பெரிசா தெரிஞ்சது. என் பையன் வீட்ல இல்லாதப்பல்லாம் அங்க போவேன். ஆனா மருமக ஒங்க மகனுக்கு தெரிஞ்சா வீடே ரெண்டாயிரும் தயவு செஞ்சி இங்கன வராதீங்கன்னு சொல்லிட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;இனி எதுக்கு வாழணும்னுதான் தோனிச்சி. டிப்ரெஷ்ன் ஜாஸ்தியாயி தூக்கம் வராம ரொம்ப நாள் கஷ்டப்பட்டுருக்கேன். 'என்ன பாய் நீங்க. ஒரு ரெண்டு பெக் போட்டுட்டு படுத்து பாருங்க. நிம்மதியா தூக்கம் வரும்னு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் சொன்னப்போ ட்ரை பண்ணி பார்த்தா என்ன தோன்றி..... தினம் ரெண்டுதானே... ட்ரை பண்ணேன்... முதல் ஒரு வாரம் நிம்மதியா தூங்கினேன்... அதுக்கப்புறம் ரெண்டு போறலை... கொஞ்சம், கொஞ்சமா... ஒரு முழு பாட்டில ரெண்டு மணி நேரத்துல காலி பண்ற அளவுக்கு போயி...... ப்ரெஷர் அதிகமாகி ஒருநாள் அன்கான்ஷியசாகி வீட்டுக்குள்ளேயே விழுந்துட்டேன்... நினைவு வந்து எழுந்து பார்த்தப்போ.... ஏறக்குறைய அரை நாள் அப்படியே விழுந்து கிடந்து இருந்தது புரிஞ்சிது... நெய்பர் ஒருத்தரோட உதவியோட பக்கதுலருக்கற ஹாஸ்ப்பிடல்ல சேர்த்தப்போ 'உங்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருக்கு... குடிக்கறத உடனே நிறுத்தலைன்னா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லி... அவர்தான் இந்த க்ரூப்போட விவரத்த சொன்னார்...இதான் நான் அட்டெண்ட் பண்ற முதல் மீட்டிங்... ரொம்ப நம்பிக்கையோட வந்துருக்கேன்....'&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூவரின் அனுபவங்கள் போதும் என்று கருதுகிறேன். குடிபோதை என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பதற்கு இந்த மூவரும் ஒரு உதாரணம். எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடரை எழுதுவதற்குமுன் சென்னையில் நான் செல்லும் தேவாலயத்தில் இயங்கிவரும் இந்த அமைப்பின் கூட்ட ஒருங்கிணைப்பாளரை சந்தித்து என்னுடைய எண்ணத்தை கூறினேன். 'நிச்சயமா எழுதுங்க சார். இப்ப நர்காட்டிக்ஸ் அனானிமஸ்னு ஒரு அமைப்பை உருவாக்கி போதைவஸ்துகளுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாதவர்களுக்கும் கூட்டங்கள் நடத்துகிறோம். குடிபோதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதைக் கடந்தவர்கள் என்றால் Drug க்கு அடிமையாகியுள்ளவர்கள் பெரும்பாலும் இளம்வயதினராகவே உள்ளது வேதனையளிக்கிறது. அதைப்பற்றியும் கூறுங்கள். எங்களுடைய கூட்டங்கள் சென்னையில் நடக்கும் விவரமெல்லாம் தினந்தோறும் ஏறக்குறைய எல்லா தினத்தாள்களிலும் வெளியாகின்றன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பு யாரால், எப்போது, எங்கு உருவானது என்ற விவரங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-7609353968971845756?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/7609353968971845756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post_13.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/7609353968971845756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/7609353968971845756'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post_13.html' title='நிதானம் தவறிய நிமிடங்கள்... (சலீம் பாய்)'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-2994348977754716348</id><published>2010-09-07T13:05:00.000+05:30</published><updated>2010-09-07T13:05:55.202+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நிதானம் தவறிய நிமிடங்கள் - ரோஹினி</title><content type='html'>இத்தொடரில் என்னுடைய முதல் கட்டுரையை படித்துவிட்டு சில பெயர் சொல்ல விரும்பாத பதிவர்கள் 'ஏ.ஏ.' இயக்கமும் கிறிஸ்துவர்களின் மதமாற்ற யுக்திகளில் ஒன்று என்றும் தேவாலயங்களில் நடக்கும் கூட்டங்களில் கிறீஸ்துவை நம்பினால் மட்டுமே குடிபழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும் என்பதுபோல் பேசுவார்கள் என்று பின்னூட்டம் இட்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு நான் கூற விரும்புவது:&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் இந்த இயக்கத்தின் நோக்கம் அதுவல்ல. இந்த இயக்கம் நடத்தும் கூட்டங்கள் தேவாலயங்களில் நடைபெறுவதில்லை. ஆலய வளாகங்களில் அமைந்துள்ள பள்ளி, அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள அறைகளில் மட்டுமே நடைபெறுவதுண்டு. இந்த கூட்டங்களில் பாதிரிமார்கள் எவரும் கலந்துக்கொள்வதில்லை. கூட்டங்களில் இயக்க அமைப்பாளர்கள் தவிர இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப் பற்றி இத்தொடரின் இறுதியில் நிச்சயம் விவரமாக எழுதுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட சிலருடைய அனுபவங்களை கூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய பெயர் ரோஹினி. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிப்போகின்றனர் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர். கட்டிட பொறியியல் பட்டம் பெற்றவர். அவருடன் கல்லூரியில் படித்த வசந்தை காதலித்து பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு திருமணம் புரிந்துக்கொண்டவர். இருவரும் இணைந்து கட்டிட வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை அந்த நகரில் நடத்தி வந்தனர். ஆகவே செல்வந்தர் அற்றும் வர்த்தக வட்டங்களில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமானவர். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் எப்படி இந்த பழக்கத்திற்கு அடிமையானார் என்பதை அவர் அன்று கூட்டத்தில் விவரித்ததை என்னால் முடிந்தவரை இங்கு தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு சின்ன வயசுலருந்தே இந்த பழக்கம் இருந்துதுன்னு சொன்னா உங்களால நம்ப முடியாம போகலாம், ஆனா அதான் உண்மை. அப்பாவுக்கு குடி பழக்கம் உண்டு. ஏறக்குறைய டெய்லி அப்பாவோட பிசினெஸ் ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் வீட்டுக்கு வருவாங்க. ராத்திரி ரொம்ப நேரம் பார்ட்டி நடக்கும். அதனால வீட்ல எப்பவுமே ட்ரிங்க்ஸ் ஸ்டாக் வச்சிருப்பார் அப்பா. விளையாட்டா ஒரு நாள் வீட்ல யாரும் இல்லாத நேரத்துல ஒரு பாட்டிலருந்து கொஞ்சம் ஊத்தி அப்பா மாதிரியே சோடா, ஐஸ் சேர்த்து குடிச்சி பார்த்தேன். ஆரம்பத்துல கசப்பாருந்தாலும் அதுக்கப்புறம் ஏற்பட்ட ஒருவிதமான போதை சந்தோஷமா இருந்துது. அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும். அன்னையிலருந்து அப்பாவும் அம்மாவும் வீட்ல இல்லாதப்போ கொஞ்சம், கொஞ்சம் குடிக்க ஆரம்பிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இது ரொம்ப நாள் நடக்கல. ஒருநாள் என் ரூமுக்கு வந்த அம்மா நா குடிச்சிட்டு கழுவாம வச்சிருந்த டம்ளர ஸ்மெல் பண்ணி பாக்க, மாட்டிக்கிட்டேன். எவ்வளவு நாளா இந்த பழக்கம்னு அம்மா அடிச்சி கேட்டப்போ எல்லாத்தையும் சொல்லிட்டேன். இதுக்கு நீங்கதான் காரணம்னு அம்மா அப்பாவை திட்ட அப்பா என்னெ அடுத்த மாசமே ஒரு போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துவிட்டுட்டார். துவக்கத்துல குடிக்காம இருக்கறது கஷ்டமா இருந்தாலும் நாளடைவில அத மறந்து போய்ட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் காலேஜ்ல வசந்த சந்திச்சேன். செக்கண்ட் இயர்ல அவனும் நானும் க்ளோசா நெருங்கி பழக ஆரம்பிச்சோம். அவனுக்கும் குடிப்பழக்கம் இருந்தது. அவனோட ரூம்ல லிக்கர பார்த்ததும் லேசா ஒரு சபலம். அவனெ கம்பெல் பண்ணி கொஞ்சமா குடிச்சேன். மறுபடியும் குடிக்கணும்போல இருந்தது. நான் தங்கியிருந்தது காலேஜ் ஹாஸ்டல்ங்கறதால லிக்கர் வச்சிக்கவும் முடியல. குடிக்கணுங்கற ஆசை ஏற்படறப்பல்லாம் ஒருமாதிரி பைத்தியம் புடிக்கறாமாதிரி வர ஆரம்பிச்சிது. லிக்கர் கிடைக்கணும்னா அது வசந்த் மூலமாத்தான் முடியும்னு நினைச்சி அவனெ நச்சரிக்க ஆரம்பிச்சேன். ஆனா அவன் ஒத்துக்க மாட்டேன்னுட்டான். எனக்காக அவனும் லிக்கர் பார்ட்டிக்கு போறத நிறுத்திட்டேன்னு சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா என்னால குடிக்கறத மறக்க முடியல. படிப்புலயும் கான்சண்ட்ரேட் பண்ண முடியாம ரொம்ப தவிச்சேன். அப்பல்லாம் வசந்த் சஜ்ஜஸ்ட் பண்ணா மாதிரி ச்சூயிங் கம் மெல்ல ஆரம்பிச்சேன். கொஞ்சம், கொஞ்சமா குடிக்கற ஆசைய கண்ட்ரோல் பண்ணி நாளடைவில அத முழுசுமா மறந்துட்டேன். காலேஜ் முடிஞ்சி வீட்டுக்கு திரும்பறவரைக்கும் அந்த நினைவே இல்லாம இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு திரும்பி வந்த உடனே எனக்கு கல்யாணம் செஞ்சி வைக்க அப்பா ப்ரப்போஸ் பண்ணப்போ நான் வசந்த் விஷயத்த சொன்னேன். அதுல ஆரம்பிச்ச பிரச்சினைதான் என்னெ மறுபடியும் ட்ரிங்க் பண்ண வச்சிதுன்னு நினைக்கறேன். நா என்ன சொல்லியும் அப்பாவும் அம்மாவும் கேக்கற மூட்ல இல்ல. அதால ஏற்பட்ட டிப்ரெஷன்லருந்து எஸ்கேப் ஆறதுக்கு எனக்கு வேற வழி தெரியாம எனக்க ஏரியாவுலருந்த ஸ்டார் ஹோட்டல்லருந்த பாருக்கு போக ஆரம்பிச்சேன். அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சி வீட்ல பெரிய ரகளையாயிருச்சி. அப்பா கோபத்துல வீட்ட வெளிய போடின்னு சொல்லிட்டார். ஹாஸ்டல்ல தங்கிக்கிட்டு ஒரு வேலைய தேடிப் பிடிச்சிக்கிட்டேன். அதுலருந்துக்கிட்டே ஆர்கிடெக்ட்ல டிப்ளமா வாங்கினேன். ஆனா தனியா இருக்கறா மாதிரியான ஃபீலிங்ஸ் வர்றப்பல்லாம் டிர்ங்ஸ் சாப்பிடாம இருக்க முடியல. நீ லிக்கர் சாப்பிடறத விட்டாத்தான் நம்ம கல்யாணம்னு வசந்த் கண்டிஷன் போட்டார். வசந்த விட்டா எனக்கு அப்போ வேற யாரும் இல்லை. அதனால கஷ்டமா இருந்தாலும் லிக்கர ஒதுக்கி வச்சேன். ரெண்டு வருசம் கழிச்சி வசந்தும் நானும் சேர்ந்து ஒரு கன்சல்டன்சி ஃபர்ம் ஸ்டார்ட் பண்ணோம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி எனக்கும் வசந்துக்கும் கல்யாணம். ரெண்டு பேர் வீட்லருந்தும் யாரும் வரலை. ஃப்ரெண்ட்ஸ் சாட்சி கையெழுத்துபோட ரிஜிஸ்தர் மேரேஜ். &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்துல சந்தோஷமாத்தான் இருந்தோம். குடிக்கறத சுத்தமா மறந்துட்டேன். ஆனா வசந்துக்கு நான் மறுபடியும் ட்ரிங்ஸ் பக்கம் போயிருவேனோன்னு பயம். அதனாலயே வெளியூருக்கு பிசினஸ் விஷயமா போறத நிறுத்திட்டு உள்ளூர் அசைன்மெண்ட் மட்டும் போறும்னு சொல்லிட்டார். உள்ளூர்ல பெரிசா புது ப்ராஜக்ட்ஸ் இல்லாம கன்சல்டன்சி பிசினஸ் டல்லடிக்க ஆரம்பிச்சி கொஞ்ச நாள்ல எங்க கைவசம் ப்ராஜக்ட்சே இல்லாம போயிருச்சி. இதுக்கெல்லாம் உன்னோட வீக்னஸ்தான் காரணம்னு என்னெ குத்தம் சொல்ல ஆரம்பிச்சார் வசந்த். அதனாலயே அடிக்கடி எங்களுக்குள்ள வாக்குவாதம் வரும். வேணும்னா நீங்க வெளியூர் அசைன்மெண்ட்ஸ் ஒத்துக்குங்க என்னெ என்னால பாத்துக்க முடியும்னு சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா கொஞ்ச நாள்ல என்னையும் அறியாம மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சேன். வசந்துக்கு இது தெரிஞ்சி என்னெ விட்டு விலக ஆரம்பிச்சார். வெளியூர்ல கிடைச்ச ப்ராஜக்ட்ஸ் சைட் ஒர்க்க நா பாத்துக்கறேன் நீ ஆஃபீச பாத்துக்கோன்னு சொல்லிட்டு ஊருக்கு வர்றதயே கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாசத்துக்கு முன்னால டைவர்ஸ் நோட்டீஸ் வந்துது. அவர் இல்லன்னா எனக்கு லைஃப் இல்லேன்னு நினைச்சேன். குடிக்கறத குறைக்க ட்ரை பண்ணேன். முடியல. சாயந்தரம் ஆனா குடிக்கணும். இல்லன்னா கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிரும். எனக்கு தெரிஞ்ச டாக்டர்ஸ் கிட்டல்லாம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். சக்சஸ் ஆகல. 'நீங்க முதல்ல குடிக்கறதுல்லன்னு டிசைட் பண்ணாத்தான் எந்த மருந்தும் வேலை செய்யும்னு எல்லா டாக்டர்சும் சொல்லிட்டாங்க.' &lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் மாத்யூஸ் சார ஒரு ப்ராஜக்ட் விஷயமா மீட் பண்ணேன். என்னோட மூச்சுல இருந்த லிக்கர் ஸ்மெல் அவருக்கு என்னெ பத்தி சொல்லியிருக்கும் போல இருக்கு. அடுத்த ரெண்டு வாரம் டெய்லி சாயந்தரம் ஆனா என்னெ ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவரோட ஆஃபீசுக்கு கூப்டுவார். நாங்க செய்யப் போற ப்ராஜக்ட்ட பத்தியே பேசிக்கிட்டிருப்பார். ப்ராஜக்ட் டிஸ்கஷன் முடிஞ்சதும் அவங்க வீட்டுக்கு கூப்ட்டுக்கிட்டுப் போய் சாப்பிட வைப்பார். அதுக்கப்புறம் அவரே வீடு வரைக்கும் வந்து ட்ராப் பண்ணிட்டு போவார். ஆரம்பத்துல இவர் எதுக்கு இப்படி பண்றார்னு தோனும். ஒருவேளை எங்கிட்ட தவறா நடக்க பாக்கறாரோன்னு கூட தோனும். ரொம்ப நாளைக்கப்புறம் அந்த ரெண்டு வாரம் நா குடிக்கணும்கற நினைவே இல்லாம இருந்தேன். நமக்கு ரொம்ப புடிச்ச விஷயத்துல நாம கவனத்த செலுத்த ஆரம்பிச்சா இந்த வியாதியிலருந்து கொஞ்சம், கொஞ்சமா மீண்டு வர முடியும்னு மாத்யூஸ் சொன்னப்போ என் பொசிஷன தெரிஞ்சிக்கிட்டுத்தான் இவர் இப்படியெல்லாம் செஞ்சிருக்கார்னு எனக்கு புரிஞ்சிது. &lt;br /&gt;&lt;br /&gt;'நானும் ஒன்னெ மாதிரிதாம்மா இருந்தேன். ஆனா ஒன்னெ கைட் பண்றதுக்கு நா இருந்தா மாதிரி எனக்கு யாரும் இருக்கல. என் ஃப்ரெண்ட் ஒருத்தர் சொல்லித்தான் இந்த ஏ.ஏ. மூவ்மெண்ட பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். ஆரம்பத்துல எனக்கு இதுல பிலீஃப் இல்லன்னாலும் என்னெ மாதிரியே அஃபெக்ட் ஆயி மீண்டு வந்தவங்களோட அனுபவங்கள கேட்டப்போ என்னாலயும் இதுலருந்து மீண்டு வர முடியுங்கற நம்பிக்கை வந்துது'ன்னு அவர் சொன்னப்போதான் இந்த மூவ்மெண்ட பத்தியே எனக்கு தெரியும். இது எனக்கு மூனாவது மீட்டிங். இந்த மூனு வாரமா குடிக்காம இருக்கேன். கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா ஒங்கக் கூட பேசினதுக்கப்புறம் இந்த வியாதியிலருந்து மீண்டு வர முடியுங்கற நம்பிக்கை வந்துருக்கு.'&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அறையில் அமர்ந்து ரோஹினியின் இந்த சுய அனுபவத்தை கேட்டுக்கொண்டிருந்த எனக்கே கண்கள் கலங்கிப்போயின. அத்தனன உருக்கமாக இருந்தது அவர் விவரித்த விதம். ஆனால் ஒரு இடத்திலும் தன்னுடைய நிதானத்தை இழக்காமல், உணர்ச்சிவசப்படாமல் அவர் விவரித்ததை இப்போது நினைத்தாலும் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. &lt;br /&gt;அந்த கூட்டம் நடந்த ஒரு சில தினங்களிலேயே நான் அந்த நகரத்திலிருந்து மாற்றலாகி வந்துவிட்டேன். ஆனால் நிச்சயம் ரோஹினி மட்டுமல்லாமல் அவருடன் அன்றைய கூட்டத்தில் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டவர்கள் தங்களுடைய குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என்பது நிச்சயம்...&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஒரு முதியவரின் அனுபவங்களை கூறுகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-2994348977754716348?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/2994348977754716348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post_07.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/2994348977754716348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/2994348977754716348'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post_07.html' title='நிதானம் தவறிய நிமிடங்கள் - ரோஹினி'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-6908900998843800826</id><published>2010-09-05T12:09:00.001+05:30</published><updated>2010-09-05T12:17:58.022+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நான் இந்து. இல்லை, இல்லை கிறிஸ்துவன் (சிறுகதை)</title><content type='html'>பாதிரியார் தேவசகாயம் தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்து பணியில் மூழ்கியிருந்தார். தன் எதிரில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். அவருடைய அலுவலக பணியாளன் லாரன்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன லாரன்ஸ்?'&lt;br /&gt;&lt;br /&gt;'இவர் உங்கள பாக்கணும்னு வந்திருக்கார், ஃபாதர்.'&lt;br /&gt;&lt;br /&gt;தேவசகாயம் அவன் நீட்டிய விசிட்டிங் கார்டை வாங்கி பார்த்தார். இவரா? என்னை எதற்கு பார்க்க வந்திருப்பார்?&lt;br /&gt;&lt;br /&gt;'சரி, ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி வரச் சொல்லு.'&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சென்றதும் தன்னுடைய மேசையை ஒட்டி இருந்த அலமாரியில் துழாவி இரண்டு நாட்களுக்கு முந்தைய ஹிந்து தினத்தாளை எடுத்து அவசரமாக பக்கங்களை புரட்டினார். ஏழாம் பக்கத்தில் தன்னை காண வந்திருந்த அரசு அதிகாரியின் புகைப்படத்தையும் அவர் அளித்திருந்த பேட்டியையும் படித்துவிட்டு தன்னுடைய உதவியாளர்களுடன் விமர்சித்தது நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'நான் சட்டப்படி ஹிந்து ஆனால் என்னுடைய நம்பிக்கையின்படி நான் ஒரு கிறீஸ்துவன்!'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இத பார்த்தீங்களா ஃபாதர்.' என்றவாறு அந்த செய்தியை அவரிடம் சுட்டிக்காட்டினார் அவருடைய உதவியாளர் 'இவர் சொன்னத இப்படியும் எடுத்துக்கலாமில்ல? அரசாங்கத்துலருந்து சலுகைகள் கிடைக்கறதுக்காகத்தான் நான் இந்துவா இருக்கேன். ஆனா உண்மையில நா கிறிஸ்துவன்.'&lt;br /&gt;&lt;br /&gt;தேவசகாயம் புன்முறுவலுடன், 'நீங்க சொல்றா மாதிரியும் எடுத்துக்கலாம். ஆனா இவர் ரொம்பவும் நேர்மையானவர், தைரியம் உள்ளவராமே?'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்போ இவர தவிர மத்த ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாருமே நேர்மையற்றவர்கள் அல்லது கோழைகள் என்று அர்த்தமா ஃபாதர். &lt;strong&gt;Honesty is not a virtue. Everyone is expected to be honest and straight forward &lt;/strong&gt;இல்லையா ஃபாதர்? ஏதோ இவர் மட்டும்தான் நேர்மையானர் என்பதுபோல இவர் தன்னை முன்நிறுத்திக்கொள்வது சரியா?'&lt;br /&gt;&lt;br /&gt;'தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு பணியமாட்டார் நிறைய பேர் சொல்றாங்களே!' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'முதலம்மைச்சர பத்தியும் அவரோட குடும்பத்த பத்தியும் இவர் தைரியமா பத்திரிகைகளுக்கு சொன்னத வச்சி சொல்றீங்களா ஃபாதர்?'&lt;br /&gt;&lt;br /&gt;தேவசகாயம் ஆமாம் என்று தலையை அசைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவியாளர் சிரித்தார். 'நீங்க ஒன்னு ஃபாதர். இவர் உண்மையிலேயே நேர்மையானவரா இருந்தா அந்த தவறுகள் நடந்த உடனேயே வெளியில சொல்லியிருக்க வேண்டாமா? இவர் செய்த ஒரு தவறுக்காக தண்டிக்கப்பட்டவுடன் வெளியில் கூறுவது பெரிய விஷயமா ஃபாதர்? அதாவது நான் செய்த தவற்றை நீ வெளியில் சொல்லாதவரை நானும் உன்னுடைய தவறுகளை கண்டுகொள்ளமாட்டேன் என்றுதானே அர்த்தம்?'&lt;br /&gt;&lt;br /&gt;தேவசகாயம், 'சரி விடுங்கள். நமக்கு எதுக்கு இந்த அரசியல் எல்லாம்? இன்றைக்கு அடித்துக்கொள்வார்கள். நாளைக்கு சேர்ந்துக்கொள்வார்கள். நம் வேலையை பார்ப்போம்.' என்று அந்த விவாதத்தை முடித்து வைத்ததும் நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இவர் எதற்காக நம்மை சந்திக்க வந்திருப்பார். ஒருவேளை நம்முடைய உதவியாளர் வாய் துடுக்காக இவரைப் பற்றி வேறு எங்காவது சென்று பேசியிருப்பாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;யோசனையில் ஆழ்ந்திருந்த தேவசகாயம் தன் முன் வந்து நின்றவரைப் பார்த்தார். &lt;br /&gt;&lt;br /&gt;'உக்காருங்க.'&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவருடைய பார்வை அவருடைய மேசை மீது கிடந்த ஹிந்து பத்திரிகை மீது விழுவதை பாதிரியார் பார்த்தார்.'சொல்லுங்க, நா என்ன செய்யணும்?'&lt;br /&gt;&lt;br /&gt;'என்னெ பத்தி பத்திரிகையில படிச்சிருப்பீங்கன்னு நினைக்கேன் ஃபாதர்.'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாம்... நீங்க ரெண்டு நாளைக்கு முன்னால குடுத்த இண்டர்வ்யூவ ஹிந்துல பார்த்த ஞாபகம்.'&lt;br /&gt;&lt;br /&gt;'என்னோட சஸ்பென்ஷன ரிவோக் ஆனா என்னோட ஒரு மாச சம்பளத்த சர்ச்சுக்கு டொனேட் பண்லாம்னு நேந்துக்கிட்டேன் ஃபாதர். நா இந்த பேரிஷ் மெம்பர் இல்லன்னாலும் நீங்க செய்யிற சோஷியல் சர்வீச பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அதான் இந்த சர்ச்சுக்கே டொனேட் பண்லாம்னு வந்தேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;தேவசகாயம் அவரை வினோதத்துடன் பார்த்தார். சட்டப்படி நான் ஹிந்து என்று கூறியவராயிற்றே?' &lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க எங்க சர்ச்சுக்கு வர்றதுண்டா?'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல ஃபாதர். ஆனா அம்மா ரெகுலரா வருவாங்க.'&lt;br /&gt;&lt;br /&gt;'உங்களுடைய மனைவி, குழந்தைகள்...?'&lt;br /&gt;&lt;br /&gt;'அவங்க எல்லாரும் ஹிந்துக்கள்தான் ஃபாதர். அப்பாவோட நிர்பந்தம். மீற முடியல.'&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க கிறிஸ்துவரா? ஏன் கேக்கறேன்னா நீங்க ஸ்கூல்ல படிக்கறப்போ கிறிஸ்துவர்னு குடுத்திருந்தீங்க போலருக்கு.'&lt;br /&gt;&lt;br /&gt;'உண்மைதான் ஃபாதர். ஆனா அப்புறம் அப்பா நிர்பந்தத்தால ஹிந்துவா மாற வேண்டிய சூழல்.'&lt;br /&gt;&lt;br /&gt;தேவசகாயம் அவரை ஏளனத்துடன் பார்த்தார்.'நீங்க பேட்டியில சொன்னத வச்சி&amp;nbsp;பார்த்தா&amp;nbsp;&amp;nbsp;நீங்க ஹிந்துவா மாறுனப்போ உங்களுக்கு வயசு 25 இருக்கும். அந்த வயசுல உங்கள உங்க அப்பா நிர்பந்தத்துக்கு பயந்து நீங்க ஹிந்துவா மாறுனீங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவருடைய முகம் சுருங்கியதை கவனித்தார் தேவசகாயம். தன்னுடைய கேள்விகள் அவரை எரிச்சலடைய வைத்திருந்ததை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்தார். 'சரி அதுபோகட்டும். சாதாரணமா அப்பா எந்த ரெலீஜியனோ அந்த ரெலிஜியனைச் சார்ந்தவராத்தான் பிள்ளைகளையும் பள்ளிகள்ல பதிவு செய்வார்கள். உங்களுடைய தந்தையோ ஹிந்து. பிறகெப்படி உங்களுடைய மதம் கிறிஸ்துவன் என்று பதிவு செய்ய முடிந்தது?'&lt;br /&gt;&lt;br /&gt;'எதுக்கு ஃபாதர் இந்த குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கறீங்க? நா யாராயிருந்தாலும் என்னுடைய நோக்கத்தை சந்தேகிக்காதீங்க ஃபாதர்.' என்று அவர் எரிச்சலுடன் கேட்டதை தேவசகாயம் கண்டுக்கொள்ளவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;'என்னுடைய கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை.' என்றார் பிடிவாதத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த அரசு அதிகாரி எழுந்து நின்றார். 'உங்க க்ராஸ் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல அவசியம் எனக்கில்லை ஃபாதர். உங்களுக்கு விருப்பமில்லன்னா சொல்லிருங்க.. சிட்டியில எத்தனையோ சர்ச் இருக்கு. அங்க குடுத்துக்கறேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;தேவசகாயம் புன்முறுவலுடன் எழுந்து நின்றார். 'அப்படியே செய்யுங்கள் சார். &lt;strong&gt;சிறிய விஷயங்களில் நேர்மையற்றவன் பெரிய விஷயங்களிலும் நேர்மையற்றவனாகவே இருக்கிறான் என்று வேதாகமம் கூறுகிறது&lt;/strong&gt;. உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒன்று முழு ஹிந்துவாக இருங்கள் அல்லது முழு கிறிஸ்துவனாக இருங்கள். நான் ஹிந்து ஆனால் கிறிஸ்துவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதில் தவறில்லை. சாதி அடிப்படையில் அரசாங்க சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெயரளவில் அதாவது, சட்டப்படி நான் ஹிந்து, ஆனால் மனத்தளவில் கிறிஸ்துவன் என்று கூறி கிறிஸ்துவத்தையும் ஹிந்துத்வைத்தையும் இழிவு படுத்தாதீர்கள். You don't deserve to be either a christian or a hindu, goodbye' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தேவசகாயத்தின் சாடலை சற்றும் எதிர்பார்க்காத அந்த அரசு அதிகாரி தலையை குனிந்தவாறு வெளியேறினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-6908900998843800826?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/6908900998843800826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/6908900998843800826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/6908900998843800826'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post.html' title='நான் இந்து. இல்லை, இல்லை கிறிஸ்துவன் (சிறுகதை)'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-2044052854015397710</id><published>2010-08-31T15:44:00.001+05:30</published><updated>2010-08-31T15:45:53.787+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நிதானம் தவறிய நிமிடங்கள்...</title><content type='html'>இந்த கட்டுரை தொடரில் நான் விவரிக்கப்போகும் சம்பவங்கள் அனைத்தும் நிஜம். ஆனால் சம்பவங்கள் நடந்ததாக குறிப்பிடப்படும் இடம், நபர்களின் பெயர்கள் அனைத்தும் கற்பனை. சம்பந்தப்பட்டவர்களின் நற்பெயருக்கு எவ்வித களங்கமும் ஏற்படலாகாது என்பதற்காகவே இந்த மாற்றங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவரும் குடிப் பழக்கத்திற்கு தங்களையும் அறியாமல் அடிமையாகி தங்களுடைய நிதானத்தை, மன நிம்மதியை தொலைத்தவர்கள். ஆனால் சென்னையிலும் நம் நாட்டின் பல பகுதிகளிலும் இயங்கிவரும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alchoholics Anonymous) என்ற அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டு அவர்களுடைய வழிகாட்டுதலில் தங்களுடைய வாழ்க்கையை, நிம்மதியை மீட்டெடுத்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய ஒருசிலரின் அனுபவங்களை எழுதலாம் என்றிருக்கிறேன். அவற்றின் இறுதியில் இந்த அமைப்பைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் எழுதுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் கூறிப்பிட்ட ஒருசிலரில் ஒருவர் கேரள மாநிலத்தைச் சார்ந்த மாத்யூஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பணியாற்றிய நகரங்கள் ஒன்றில் எனக்கு அறிமுகமானவர். பெரிய தொழிலதிபர். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அந்த நகரத்தில் வசித்து வந்த பகுதியில் வசித்தவர். நான் சென்ற தேவாலய அங்கத்தினர்களுள் மிகவும் பிரபலமானவர். பழகுவதற்கு மிகவும் நல்லவர். &lt;br /&gt;&lt;br /&gt;நான் வசித்த பகுதி நகரத்தின் செல்வந்தர்கள் பலரும் வசித்துவந்த பகுதி. என்னுடைய வங்கியின் பல மதிப்புமிக்க வாடிக்கையாளர்களும் அந்த பகுதியில்தான் வசித்தனர். அவர்களுள் ஒருவருக்கு சொந்தமான வீட்டு ஒன்றின் மாடிப்பகுதியில்தான் நானும் என் மனைவியும் குடியிருந்தோம். அந்த பகுதியில் குடியிருந்த ஆண்கள் வார இறுதி நாட்களில் அருகிலிருந்த க்ளப் ஒன்றில் மாலையில் 'கூடுவதுண்டு'. இந்த 'கூடுவது' என்ற வார்த்தையின் பொருள் கேரளவாசிகளுக்கு மட்டுமே தெரியும். அந்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் ஆளுக்கொளு மது பாட்டிலை (அனைத்தும் விலையுயர்ந்த மேலைநாட்டு சரக்கு) கொண்டு வருவார்கள். சுமார் ஐந்தாறு மணி நேரத்தில் அனைத்தையும் குடித்து தீர்த்துவிடுவார்கள். அத்தகைய கூட்டத்தில்தான் மாத்யூஸை நான் முதன் முதலாக சந்தித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;கேரள மாநிலத்தில் மதுபானம் அருந்துவது என்பது மிக, மிக சாதாரண விஷயம் என்பதை நான் அறிந்திருந்ததால் நான் அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது நான் அந்த அளவுக்கு 'குடிமகனாக' இல்லாததுடன் அவர்களுடைய 'பொருளாதார அந்தஸ்த்தும்' அந்த கூட்டங்களில் பெரும்பாலும் ஒரு பார்வையாளனாகவே பங்குகொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாத்யூஸ் மது அருந்தும் விதம் அங்கு குழுமியிருந்த நண்பர்களின்&amp;nbsp;அருந்தும் விதத்திலிருந்து சற்று மாறுபட்டிருந்ததை முதல் கூட்டத்திலேயே கவனித்தேன். மற்றவர்கள் 'டைம் பாஸ்' செய்ய மது அருந்த இவர் மட்டும் ஏதோ போட்டியொன்றில் பங்கெடுப்பவரைப் போன்று அவசர, அவசரமாக அருந்துவதை பார்வையாளனாக பங்குபெற்ற என்னால் மட்டுமே உணரமுடிந்தது. கூட்டத்தின் இறுதியில் தன்னுடைய முழு நிதானத்தையும் இழந்து கூட்ட சூழலையே நிர்மூலமாக்க அவருடைய நண்பர்கள் சிலர் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அவருடைய வாகனத்தில் ஏற்றி அவருடைய வீட்டில் கொண்டு விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மட்டும்தான் அவர் அப்படியென்று நினைத்த எனக்கு அடுத்தடுத்த வாரங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் அவர் அப்படியே நடந்துக்கொள்ள குடிபோதைக்கு அவர் அடிமையாகி 'குடிகாரர்' (alchoholic) என்ற நிலையை அடைந்துவிட்டார் என்பதை உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போன பலரும் அதை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் வேதனை. மாத்யூசும் அப்படித்தான். அவருடைய நண்பர்கள் பலருடன் நான் சூசகமாக விசாரித்து அறிந்தது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பரம்பரை பரம்பரையாகவே செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய குடும்பம் என்றால் அந்த நகரில் அறியாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு மதிப்புமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய ஒரே மகள் (அவருக்கு ஒரேயொரு மகன் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன். அவருக்கு ஒரு மகளும் இருந்தது பிறகுதான் தெரிந்தது) அவருடைய வீட்டு வாகன ஓட்டியுடன் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டது அவருடைய குடும்பத்துக்கே பெரிய அவமானமாகப் போய்விட அவருடைய பெற்றோர், சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பமும் அவருடைய மனைவி, மகன் அடங்கிய&amp;nbsp;குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டனர். மாத்யூஸ் மனமுடைந்துபோய் அதிக அளவு குடியில் தன்னை இழக்கத் துவங்கினார். அதுவே நாளடைவில் அவரை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய குடிப்பழக்கம் அவருடைய தொழிலையும் பாதிக்க பொருளாதாரத்திலும் நலிவடைந்தார். நல்ல வேளையாக அவருடைய மகன் படிப்பு முடிந்ததும் தந்தையின் தொழிலை கையிலெடுத்துக்கொள்ள அதை மீட்டெடுக்க முடிந்தது. ஆனால் மாத்யூசின் போக்கில் எந்த மாறுதலும் ஏற்படாததால் மனைவிக்கும் மகனுக்கும் கூட வேண்டாவராகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய நண்பர்களுள் பலரும் அவரிடமிருந்து விலகினாலும் அவர் குடியிருந்த பகுதியில் 'கூடும்' கூட்டங்களிலிருந்து மட்டும் அவரை விலக்க முடியவில்லை என்றனர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட நண்பர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை இரவில் நடக்கும் கூட்டங்களில் குடித்து மயங்கி விழுந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலை தேவாலயத்தில் நடக்கும் வழிபாட்டில் கலந்துக்கொள்வதிலிருந்து ஒரு வாரம் கூட தவறியதில்லை மாத்யூஸ். முந்தைய நாள் இரவில் குடித்து ரகளை செய்தவரா இவர் என்பதை அவரைக் காண்பவர்கள் வியந்துபோகும் அளவுக்கு மென்மையாக பழகுவார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்னையிலிருந்த காலத்திலேயே நான் செல்லும் தேவாலயத்தில் இயங்கி வந்த 'A.A.' என அழைக்கப்பட்ட 'Alchoholic Anonymous' என்ற இயக்கத்தைப் பற்றி அறிந்திருந்தேன். வார இறுதி நாட்களில் நடைபெறும் அந்த கூட்டங்களில் மாத்யூஸ் போன்று குடிபோதைக்கு அடிமையாகிப் போய் அதிலிருந்து மீண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை அவர்களைப் போன்றே அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வார்கள். அத்தகைய கூட்டங்களில் கலந்துக்கொள்ளும்போதுதான் இது ஒன்றும் பெரிய வியாதியல்ல என்றும் தங்களைப் போலவே பலரும் இதில் சிக்கிக்கொண்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர் என்பதையும் அறிந்து தாங்களும் முயன்றால் அதிலிருந்து மீள முடியும் என்பதை உணர்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாத்யூசையும் இத்தகைய அமைப்பால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று எனக்கு தோன்றியது. தமிழகத்தில் இத்தகைய அமைப்பின் கூட்டங்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ தேவாலய வளாகங்களில் மட்டுமே நடைபெற்று நான் கண்டிருந்தேன். ஆனால் நான் கலந்துக்கொண்ட தேவாலய தலைவரை அணுகியபோது அந்த பாதிரியாருக்கு அதில் அவ்வளவாக நம்பிக்கையில்லை. 'இது சரிவராது சார். இங்கல்லாம் குடும்ப விஷயங்கள டிஸ்கஸ் பண்ணவே முன்வரமாட்டாங்க. இதுல குடிப்பழக்கத்துக்கு நா அடிமையாய்ட்டேன்னு யார் ஒத்துக்கிட்டு வரப்போறாங்க? நம்ம டைம்தான் வேஸ்டாகும். அதோட மாத்யூஸ் மட்டுமில்லாமல் அவரோட ஃபேமிலியும்தான் நம்ம சர்ச்சோட பெரிய டோனர்ஸ் (Donors). மாத்யூஸ் இந்த பழக்கத்துக்கு அடிமையாகிப்போனது இப்ப அவ்வளவா வெளியில தெரியாது. அவருக்கு நல்ல செய்யிறதா நினைச்சி இப்படியொரு அமைப்பை ஸ்டார்ட் பண்ணி அவர இன்வைட் பண்ணி அவங்க பிரதர்சயும் அப்பாவையும் பகைச்சிக்க நா விரும்பல சார்.' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே நகரத்தில் இயங்கிவந்த ஒரு பெரிய மருத்துவமனையில் இத்தகைய அமைப்பு சிறிய அளவில் ஆனால் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை அறிந்த நான் அதன் அமைப்பாளர்கள் ஒருவரை சென்று சந்தித்தேன். மாத்யூஸ் பற்றி விவரித்தேன். அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நகரில் இருந்த செல்வாக்கை அறிந்திருந்த அவர் முதலில் தயங்கினாலும் சில வாரங்களுக்குப் பிறகு என்னுடைய காலனியில் வார இறுதி நாட்களில் நடக்கும் கூட்டம் ஒன்றிற்கு வந்து மாத்யூசை சந்திக்க ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு எங்களால் மாத்யூசை அந்த அமைப்பின் வாராந்தர கூட்டங்களில் கலந்துக்கொள்ள சம்மதிக்க வைக்க முடிந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு மாத்யூஸ் மீளவே மாட்டார் என்று நினைத்தவர்களும் வியக்கும் அளவுக்கு அதிலிருந்து மீண்டு வந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் அந்த நகரிலிருந்து மாற்றலாவதற்கு முன்பு...&lt;br /&gt;&lt;br /&gt;மாத்யூஸ் தன்னுடைய தேவாலய பாதிரியாரை சம்மதிக்க வைத்து அங்கு 'A.A.' அமைப்பை தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து துவக்கினார்.&amp;nbsp; அவர் குடிப்பழக்கத்திலிருந்து முழுவதுமாக நம்ப மறுத்த தேவாலய அங்கத்தினர்கள் துவக்கத்தில் எதிர்ப்பை தெரிவித்தாலும் நாளடைவில் அவருடைய நடவடிக்கைகளை பார்த்து அமைதியடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நகரிலிருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நான் அவரை சந்திக்க சென்றேன். அப்போது அவர் கூறியது இன்றும் நினைவில் நிற்கிறது. 'உங்களுக்கு எப்படி தாங்ஸ் சொல்றதுன்னு தெரியல ஜோசப். இன்னைக்கி நா ரொம்ப சந்தோசமா இருக்கேன். என் மகளை முழுசுமா ஏத்துக்கற மனப்பக்குவம் வந்துருச்சி. அதை விட பெரிய சந்தோசம் என்னெ மாதிரி இந்த பழக்கத்துக்கு அடிமையாகி அத ஏத்துக்க முடியாம தவிச்ச பலரை அதிலருந்து மீட்க முடிஞ்சதுதான். நா மட்டுமில்லாம என் வய்ஃபும் இதுல ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. நம்ம பேரிஷ் (Parish) சர்ச்சில மட்டுமில்லாம இன்னும் ரெண்டு சர்ச்சுலயும் இத ஆரம்பிச்சிருக்கோம். இதுதான் என்னோட இப்போதைய முழுநேர வேலை.'&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக இந்த அமைப்பின் வாராந்தர கூட்டங்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மட்டுமே பங்குகொள்ள அனுமதிப்பார்கள். ஆனால் மாத்யூஸ் என்னுடைய வேண்டுகோளை ஏற்று அடுத்து வந்த வாரத்தில் கூட்டம் நடந்த அறைக்கு அடுத்த அறையில் அமர்ந்து கூட்டத்தில் பங்குகொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டவர்கள் கூறுவதை அவர்களுக்கு தெரியாமல் கேட்க அனுமதியளித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கூட்டத்தில்&amp;nbsp; நான் கேட்கமுடிந்த சிலவற்றை அடுத்துவரும் பதிவுகளில் எழுதுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-2044052854015397710?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/2044052854015397710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/08/blog-post_31.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/2044052854015397710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/2044052854015397710'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/08/blog-post_31.html' title='நிதானம் தவறிய நிமிடங்கள்...'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-3699952523771290193</id><published>2010-08-24T14:41:00.001+05:30</published><updated>2010-08-24T14:45:13.144+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அன்னை திரேசாவுக்கு புனிதர் பட்டம்!</title><content type='html'>அன்னை திரேசாவின் நூறாவது பிறந்த நாள் வருகிற ஆகஸ்ட் 26ம் நாள் உலகெங்கும் குறிப்பாக கொல்கொத்தாவிலுள்ள அவருடைய இல்லத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய தினமே கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர்களால் அவர் புனிதராக பிரகடனப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் புனிதராக அறிவிக்கப்பட வேண்டுமென்றால் அவரால் ஒரு புதுமை அல்லது அதிசயம் (Miracle) நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது மருத்துவர்களால் தீர்க்க முடியாத ஏதேனும் ஒரு நோய் அதிசயமான முறையில் அதாவது அவரிடம் செய்துக்கொண்ட பிரார்த்தனையின் விளைவாக குணமாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;2003ம் வருடம் திருமதி மோனிகா பெர்சா என்பவர் அன்னை திரேசாவிடம் செய்த பிரார்த்தனையால் கேன்சர் நோயிலிருந்து அற்புதமாக குணமடைந்ததாக அறிவிக்க அதை அவருடைய மருத்துவர்களும் விரிவான ஆய்வுக்குப்பிறகு ஆமோதித்தனர் (ஆனால் சில மருத்துவர்கள் அதை பிறகு மறுத்து அறிக்கைவிட்டதும் உண்டு). அதன்&amp;nbsp;விளைவாக அன்னை&amp;nbsp;திரேசா&amp;nbsp; ஆசீர்வதிக்கப்பட்டவராக (Blessed) அறிவிக்கப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு உலகின் பல பகுதிகளிலிருந்தும் அன்னை திரேசாவின் வல்லமையால் பலரும் தங்களுடைய நோயிலிருந்து விடுபட்டதாக தெரிவித்திருந்தும் அவற்றை பரிசீலித்து உண்மையை கண்டறிய அமைக்கப்பட்ட குழு இதுவரை ஒன்றைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த குழுவின் தலைவர் கொல்கொத்தா ஆயர் லோபோ அவர்கள் சமீபத்தில் விட்ட &lt;a href="http://www.hindu.com/2010/08/24/stories/2010082459050700.htm"&gt;அறிக்கையின்படி&lt;/a&gt;&amp;nbsp; 2003ம் வருடத்தில் நிகழ்ந்த அற்புதத்திற்குப் பிறகு இதுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்த அற்புதமும் இதுவரை நிகழாததால் அவர் புனிதராக அறிவிக்கப்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதம் அல்லது அதிசயம் என்றாலே மனித மூளைக்கு புலன்படாத ஒன்று என்றுதான் பொருள். ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியே Miracle என்ற வார்த்தைக்கு An act or event breaking the laws of nature being the result of direct intervention by a supernatural force i.e. God என்கிறது. அதாவது இயற்கையின் விதிகளுக்கு அப்பால்பட்டு மனித மூளைக்கு எட்டாத ஒரு சக்தியால் ஏற்படக்கூடிய செயல் அல்லது நிகழ்வுதான் அதிசயம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அற்புதம் அல்லது அதிசயம் எனப்படும் எதையும் அலசி ஆராய்ந்த பிறகுதான் அதை ஏற்றுக்கொள்வோம் என்றால் அதை அற்புதம் என்று எப்படி அழைப்பது? அதுவும் மருத்துவத் துறையில் உலகம் அடைந்திருக்கும் முன்னேற்றம் எந்த ஒரு நோயுமே அற்புதமாக அதாவது மருத்துவ சிகிச்சை ஏதும் இன்றி குணமடையக் கூடும் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மனிதனால் முடியாதது பலவும் இறைவனால் முடியும் என்பார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அந்த இறைவனால் நிகழ்த்தப்பட்ட அற்புதத்தையும் கூட மனிதன் அங்கீகரிக்க வேண்டும் என்றால் நடக்கக் கூடிய காரியமா?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் என்று ஒருவன் இருந்தால்தானே அற்புதம் நிகழ வாய்ப்புண்டு என்கிறீர்களா? அதுவும் சரிதான்.... ஓரளவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் பெயரால் குணப்படுத்திவிட்டதாக பொய் பித்தலாட்டம் செய்யும் போலி சாமியார்கள் பலுகியுள்ள இந்த கலியுகத்தில் எதையுமே அற்புதமாக ஏற்றுக்கொள்ள முடியாதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இனியும் மரித்த ஒருவர் மூலமாக நிகழும் அற்புதத்தின் பின்னணியில்&amp;nbsp;மட்டுமே அவரை புனிதராக அறிவிக்க முடியும் என்ற&amp;nbsp;நியதியை கத்தோலிக்க தலைமை பீடம் தொடர வேண்டுமா என சிந்திப்பது நல்லது!&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-3699952523771290193?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/3699952523771290193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/3699952523771290193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/3699952523771290193'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/08/blog-post.html' title='அன்னை திரேசாவுக்கு புனிதர் பட்டம்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-297584851434461115</id><published>2010-03-04T10:42:00.000+05:30</published><updated>2010-03-04T10:42:11.574+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினம் ஒரு சிந்தனை'/><title type='text'>தினம் ஒரு சிந்தனை 4 - தலைவர்கள்</title><content type='html'>நம் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு (கோல்) என்பது உண்டு. அதை அடைவதற்கு நாம் அனைவருமே முழு வீச்சாய் முயல்கிறோம். சிலர் மற்றவர்களை விட அதை எளிதில் அடைந்துவிடுகின்றனர். இவர்களுக்கு இலக்கை எவ்வாறு அடைகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படியாவது அடைந்துவிட வேண்டும். இலக்கு, இலக்கு என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். இடையில் தடையாய் வரும் எதையும் அல்லது எவரையும் விலக்கிவிட தயங்கமாட்டார்கள். இவர்கள் சுயநலவாதிகள். இவர்கள் தங்களுடைய இலக்கை அடைந்துவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அங்கேயே நிலைத்திருந்து அதனுடைய பலனை முழுமையாக அடைவார்களா என்பது ஐயமே.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கை இப்படித்தான் அடைய வேண்டும் என்ற தங்களுடைய கருத்தில் உறுதியாய் இருப்பவர்கள் சிலர். இலக்கை அடைவதை விட அதை எப்படி அடைவது என்பதுதான் முக்கியம் என நினைப்பவர்கள் இவர்கள். இத்தகையோர் தங்களுடைய இலக்கை அடைய தடையாய் இருப்பவர்கள் ஒதுக்கி தள்ளிவிடுவதில்லை. மாறாக த‌ங்களுடைய பயணத்தின் முக்கியத்துவத்தை, குறிக்கோளை அவர்களுக்கும் உணர்த்தி அவர்களையும் அவரவர் இலக்கை நோக்கி பயணிக்க உதவிடுவார்கள். தான் மட்டும் இலக்கை அடைந்தால் போறாது தன்னைச் சார்ந்தவர்களும் ஏன் தன்னுடைய எதிராளியும் அவர்களுடைய இலக்கை அடைய செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். இவர்கள்தான் உண்மையான தலைவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பாரதத்தின் பல இன்னல்களுக்கும் வித்தாய் இருப்பவர்கள் நான் மேலே குறிப்பிட்டுள்ள முதல் ரகத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அரசு இயந்திரத்தின் அன்றாட செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாயுள்ள அதிகாரிகளாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாக வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்த வழக்குகளில் கையும் களவுமாக பிடிபடும் எத்தனை அரசு அதிகாரிகளைப் பற்றி செய்திகளில் வாசிக்கின்றோம். இவர்கள் அனைவருக்குமே இலக்கு பணம் சேர்ப்பதுதான். அதை இப்படித்தான் சேர்க்க வேண்டும் என்றில்லாமல் எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என நினைப்பவர்கள். இவர்கள் தேவைக்கு அதிகமாகவே பணத்தை சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் ஏதாவது ஒரு சூழலில் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு சேர்த்த பணத்தை இழந்துவிடுவதுடன் அரசு பதவி அளித்துவந்த சகல அந்தஸ்த்தையும் இழந்து ஒரு மூன்றாந்தர குற்றவாளியைப் போல் சிறையிலடைக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கு என்பது தேவைதான். ஆனால் அது நாம் எட்டக் கூடிய, நம்முடைய இன்றைய நிலமைக்கு ஒத்த இலக்காக வேண்டும். அன்றாட ஜீவனத்துக்கே வழியில்லாதவன் ஆகாசத்தில் பறக்க ஆசைப்படுவதைப் போன்று இருக்கலாகாது நம்முடைய இலக்கு. நம்முடைய தகுதிக்கு மீறிய இலக்கே நம்மில் பலரையும் வழி தவறி செல்ல வைத்துவிடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் எது முடியுமோ அதை அடைய முயலுவோம். அதி வேகமாக செல்லாமல் மெள்ள மெள்ள, சிறிய சிறிய அடிகள் வைத்து அதை அடைய முயலுவோம். இலக்கை அடைந்த பின் அதில் நிலைத்து நின்று அதனுடைய பயனை முழுமையாக அனுபவிக்க முயல்வோம். நாம் மட்டும் அல்லாமல் நம்மைச் சார்ந்தவர்களும் அவரவர் இலக்கை அடைய துணை செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி நமதே&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-297584851434461115?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/297584851434461115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/03/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/297584851434461115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/297584851434461115'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/03/4.html' title='தினம் ஒரு சிந்தனை 4 - தலைவர்கள்'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-671396970038065430</id><published>2010-03-02T12:41:00.000+05:30</published><updated>2010-03-02T12:41:39.963+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினம் ஒரு சிந்தனை'/><title type='text'>தினம் ஒரு சிந்தனை 3 - தடங்கல்கள்.</title><content type='html'>'தடங்கல்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் தோல்விதான் மிஞ்சும்.'&lt;br /&gt;&lt;br /&gt;இது நம்முடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து நாம் அன்றாடம் கேட்கும் அறிவுரை.&lt;br /&gt;&lt;br /&gt;இது அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தறிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தடங்கல்களை எதிர்பார்த்து அதை எப்படி எதிர்கொள்வது என முன்னதாகவே திட்டமிடல் வேண்டும் என்பதையும் மறுக்கவியலாது. நம்முடைய திட்டங்கள் எவ்வித தடங்கலும்&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாமல் நிறைவேறிவிடவேண்டும் என்பது நம் ஒவ்வொருவருடைய ஆவல். ஆனால் நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய எந்த திட்டமும் தடங்கல்கள் இல்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவேறுவதில்லை என்பதும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;'Expect the unexpected' என்பார்கள். 'உன்னுடைய எதிரியை எதிர்கொள்ள செல்வதற்கு முன் உன்னுடைய தரப்பு வாதங்களை சரிபார்த்துக்கொள்'. என்கிறது பைபிள். அதுபோன்றுதான்&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய திட்டங்களும். அவற்றை நிறைவேற்ற முனைவதற்கு முன் எத்தகைய தடங்கல்கள் வர வாய்ப்புள்ளது என்பதை நன்றாக ஆய்வு செய்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை தயார்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். எப்படி சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கு நாம் மட்டுமே பொறுப்பில்லையோ அதுபோன்று நாம் எதிர்கொள்ள நேரும்&lt;br /&gt;&lt;br /&gt;தடங்கல்களுக்கும் நம்முடைய திட்டமின்மையோ அல்லது கவனக்குறைவோ மட்டுமே காரணம் இல்லை. நாம் சற்றும் எதிர்பாராத, நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட தடங்கல்களும்&lt;br /&gt;&lt;br /&gt;தீர்க்கமாக நாம் திட்டமிட்டு செயல்பட விழையும் திட்டங்களை குலைத்துவிடுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய சமயங்களில் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு நாம் வெற்றிகொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய தனித்தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும். தடங்கல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாமல் நம்முடைய திட்டங்கள் வெற்றிபெற வேண்டும் என கனவு காண்பதை விட எத்தகைய தடங்கல்கள் வந்தாலும் அதை வெற்றிகரமாக என்னால் எதிர்கொள்ள முடியும் என&lt;br /&gt;&lt;br /&gt;நினைப்பவனே தன்னையொத்தவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய திட்டங்களை வெற்றிகரமாக முடித்துத்தர எனக்கு உதவிபுரியவேண்டும் இறைவா என்று வேண்டுபவனை விட எவ்வித தடங்கல்கள் வந்தாலும் அவற்றை நான் துணிச்சலுடன்&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்கொள்ளும் மனவலிமையை எனக்கு தா இறைவா என்று வேண்டுவபவனுக்கே இறைவனும் துணை வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தடங்கல்கள் தடைகற்களாக நம்மை தடுத்து நிறுத்திவிடாமல் நம்முடைய வெற்றிக்கு துணைபோகும் நடைகற்களா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-671396970038065430?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/671396970038065430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/03/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/671396970038065430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/671396970038065430'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/03/3.html' title='தினம் ஒரு சிந்தனை 3 - தடங்கல்கள்.'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-2684841029920380501</id><published>2010-02-24T11:32:00.000+05:30</published><updated>2010-02-24T11:32:18.518+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினம் ஒரு சிந்தனை'/><title type='text'>தினமொரு சிந்தனை - 2 - பிறரை தீர்ப்பிடாதே</title><content type='html'>பைபிளில் ஒரு இடத்தில் இயேசு கூறுவார். "உன் கண்ணில் இருக்கும் விட்டத்தை எடுத்துவிட்டு உன் சகோதரனின் கண்களில் இருக்கும் துரும்பைப்&amp;nbsp;பார்"&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கூறப்பட்ட வார்த்தைகள் என்றாலும் இன்றைக்கும் மிகவும் பொருத்தமான அறிவுரை.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலரும் இப்படித்தான். பிறரைப் பற்றி தீர்ப்பிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவரை தீர விசாரிக்க வேண்டியது அவசியம் என்பதை&lt;br /&gt;மறந்துவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பணிக்காலத்தில் என்னுடைய வங்கியின் ஒழுங்குமுறை கமிட்டியின் உத்தரவுப்படி பல விசாரனைகளை தலைமையேற்று&amp;nbsp;நடத்தியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலனவைகளில் விசாரனையின் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குற்றம் சுமத்துபவர்களின்&lt;br /&gt;கற்பனையாகவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அல்லது தனிப்பட்ட பகையின் வெளிப்பாடக இருக்கும். அல்லது மிகைப்படுத்தப்பட்ட&lt;br /&gt;குற்றச்சாட்டாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகையில் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு செல்வதென்பது இயலாத காரியம் என்பது நம் அனைவருக்கும்&amp;nbsp;தெரியும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யாரையாவது நம்மையும் அறியாமல் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதை மனதில் அப்படியே&amp;nbsp;வைத்துக்கொண்டு சமயம் பார்த்து திருப்பித்தாக்குவதில் நம்மில் பலரும் வல்லவர்கள். அதுவும் hitting below the belt என்பார்களே அதுபோன்று&lt;br /&gt;கேவலமாக தாக்குவதில் சிலர் சூரர்கள். என்னுடன் சாராதவன் எனக்கு எதிரி என்கிற எண்ணத்தில் பணியாற்றும் சில உயர் அதிகாரிகளும்&amp;nbsp;தங்களுக்கு வேண்டாதவர்கள் சிலரை தூண்டிவிட்டு குற்றம் சுமத்தை வைத்து &amp;nbsp;விசாரணை என்ற பெயரில் நாடகமும் நடத்தி தண்டிப்பதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இத்தகையோர் தங்களுக்கும் இதுபோன்றதொரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடுவார்கள். என்னுடைய முப்பத்தாண்டு&lt;br /&gt;கால அலுவலக அனுபவத்தில் இத்தகையோர் தாங்களாகவே பிரச்சினையில் சிக்கிக்கொள்வதும், வேறு சிலர் செய்யாத தவற்றுக்கு&amp;nbsp;தண்டிக்கப்படுவதையும் கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இன்றைய சிந்தனை இதுதான். ஒருவரை தீர்ப்பிடுவதற்கு முன்பு குற்றச்சாட்டை முழுமையாக புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.&lt;br /&gt;குற்றம் சாட்டப்பட்டவரை விட குற்றம் சுமத்துபவர்களின் பின்னனியை விசாரித்து அவர்களுடைய குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பதை&lt;br /&gt;உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அவர்&lt;br /&gt;அளிக்கும் விளக்கத்திலிருந்தே விசாரனைக்குட்படுத்தப்பட வேண்டியவர் அவர்தானா அல்லது குற்றம் சுமத்தியவர்களா என்பது தெளிவாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-2684841029920380501?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/2684841029920380501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/02/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/2684841029920380501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/2684841029920380501'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/02/2.html' title='தினமொரு சிந்தனை - 2 - பிறரை தீர்ப்பிடாதே'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-8402449733261002914</id><published>2010-02-20T11:26:00.001+05:30</published><updated>2010-02-20T11:28:01.991+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினம் ஒரு சிந்தனை'/><title type='text'>தினம் ஒரு சிந்தனை - 1 இறை நம்பிக்கை</title><content type='html'>கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது மறைநூல் வாக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனில் நம்பிக்கைக் கொள்வோர் என்றுமே தனிமையை உணர்வதில்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் - இதில் நம் பெற்றோர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அடங்குவர் - ஏதாவது சமயங்களில் குறிப்பாக நமக்கு மிகவும் தேவைப்படும்போது, நம் அருகில் இல்லாமல் போய்விடக் கூடும். அல்லது இருந்தும் நமக்கு துணையாய், ஆறுதலாய் இருக்க இயலாமல் போய்விடக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இறைவன் ஒருவர்தான் நம்முடன் என்றும், எப்போதும், எங்கும் இருக்கக் கூடியவர். ஏனெனில் அவர் நம்மில், நம்முள், நம்முடன் இருக்கிறார். அவரை தொட்டுணர முடியாமல் அளவுக்கும் நம்முடன் கலந்திருக்கிறார். நம் உள்ளுணர்வுகளை எப்படி தொட்டுணர முடிவதில்லையோ அதுபோலத்தான் இறை பிரசன்னமும். இறைவனை உணர அவரை நேரிலோ, கனவிலோ காண வேண்டும் என்பதில்லை. நம் உணர்வுகளால் &amp;nbsp;காண முடிந்தாலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறை நம்பிக்கை என்பது மூளையால், பகுத்தறிவால் ஆய்ந்து அறியக் கூடிய ஒன்றல்ல. மாறாக நம் உள் உணர்வுகளால் அனுபவிக்க வேண்டிய ஒன்று. அவர் நம் உள்ளிருந்து நம்மை வழி நடத்தும் ஆசான், சோர்ந்திருக்கையிலே நமக்கு ஆறுதலாய் வரும் மருத்துவன், ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றும் காவலன், நம்மை உள்ளார்ந்த அன்புடன் நேசிக்கும் காதலன்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனையோ அவதாரங்களை எடுக்கக் கூடிய ஒரே வல்லவன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ரூபத்திலும், வடிவிலும் வணங்கப்பட்டாலும் நம் அனைவருக்கும் அவந்தான் தலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை நம்புவோம். ஆறுதலடைவோம்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-8402449733261002914?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/8402449733261002914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/02/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/8402449733261002914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/8402449733261002914'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/02/blog-post_20.html' title='தினம் ஒரு சிந்தனை - 1 இறை நம்பிக்கை'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-3628891193995489285</id><published>2010-02-18T12:15:00.000+05:30</published><updated>2010-02-18T12:15:25.926+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி விமர்சனம்'/><title type='text'>சாதிகள் இருக்குதடி பாப்பா!!</title><content type='html'>சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிவிட்டு சென்றான் இறவா புலவன் பாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அது வெறும் கனவே என மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன சமீப கால நிகழ்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று பத்திரிகைகளில் வெளியான கல்லூரி பேராசிரியை ஒருவர் தான் பணியாற்றிய கல்லூரியின் மேல்மாடியிலிருந்தே குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அவற்றுள் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தற்கொலைக்குக் காரணம் பெற்றோர் விரும்பாத காதல் என்றுதான் வெளியாகியுள்ளது என்றாலும் அதன் பின்னணி சாதியாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். அது இரு மனங்களுக்கிடையிலுள்ள உறவே அன்றி வேறில்லை. அது ஆண்-பெண் என்ற இரு வேறு பாலாருக்கிடையில் மட்டும்தான் ஏற்பட முடியும் என்ற இயற்கையின் நியதியையே மாற்றி போட்டுவிட்ட இந்த கலிகாலத்தில் இன்னும் ஒரே சாதியைச் சார்ந்தவர்களுக்கிடையில் மட்டும்தான் காதல் மலர வேண்டும் என்கிற நிலையில் பிடிவாதமாய் நிற்கும் பழைய தலைமுறையை என்னவென்பது?&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இருபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட, சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கவும் ஏன் ஒரு பேராசிரியராக, கல்லூரி மாணவர்களை வழிநடத்தக் கூடிய திறனுள்ள ஒரு வாலிப பெண்ணை அவர் விரும்பியவரை காதலிப்பதை தங்களுடைய சுய கவுரத்திற்காக தடுத்து நிறுத்தும் பெற்றோரையும் கூட தற்கொலைக்கு காரணமாய் இருந்ததாக தண்டிக்க சட்டம் வரவேண்டிய காலம் வந்தாகிவிட்டதாகவே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இத்தகைய தற்கொலைகளுக்கு பெற்றோரை மட்டுமே குற்றஞ்சாட்ட முடியுமா என்பதும் கேள்விக்குறிய விஷயம்தான். காதல் &amp;nbsp;பொருளாதார மற்றும் சாதி, மத பேதங்களை பார்த்து ஏற்படுவதில்லையென்பது உண்மை. அதாவது பள்ளிப் பருவத்தில் ஏற்படும்போது அதை இத்தகையை பேதங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கமுடியாத ஒரு விடலைக் காதல் - இனக்கவர்ச்சியால் ஏற்படும் ஒரு உடல் சார்ந்த உணர்வு - எனலாம். ஆனால் அதுவே வாலிபப் பருவத்தை அடைந்த, தான் யார், தன்னுடைய குடும்பம் எப்படிப்பட்டது, தன்னுடைய பெற்றோர் எத்தகையவர்கள் என்பதை தெளிவாக அறிந்துள்ள இருவர் ஒருவரையொருவர் விரும்பும்போது இதைப்பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் எல்லா காதலுமே திருமணத்தில்தான் முடிய வேண்டும் என்றோ அல்லது காதலிப்பவர்கள் எல்லாமே காதலித்தவர்களையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றோ நியதியில்லை என்பதையும் மாணவப் பருவத்தைக் கடந்தபின் காதல்வசப்படுபவர்கள் உணர்ந்திருக்க வேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் இல்லையேல் சாதல் என்பது பண்டைய காலத்து, முட்டாள்தனமான கூற்று. எதிர்வரும் காலத்தில் தாங்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கற்பனை செய்து இருபதாண்டுகளுக்கும் மேலாக மாணவப்பருவத்தில் பட்ட கஷ்டங்களையெல்லாம் காதலுக்காக உணர்வுபூர்வமாக முடிவெடுத்து தன்னையே மாய்த்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-3628891193995489285?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/3628891193995489285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/3628891193995489285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/3628891193995489285'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2010/02/blog-post.html' title='சாதிகள் இருக்குதடி பாப்பா!!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-4625292308175414454</id><published>2009-01-03T10:18:00.001+05:30</published><updated>2009-01-05T12:22:55.632+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறீஸ்த்துவம்'/><title type='text'>திருக்காட்சி திருவிழா</title><content type='html'>&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: justify;"&gt;இயேசு பாலகன் பிறந்த செய்தியறிந்து அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஒரே ஆவலினால் உந்தப்பட்டு நெடுதூரம் பயணித்த மூன்று அரசர்களின் (ஞானிகள், வாண் ஆய்வாளர்கள் எனவும் கூறலாம்) திருவிழா. &lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/SWGq4yvNFjI/AAAAAAAAAIk/1raNajvsID0/s1600-h/page3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/SWGq4yvNFjI/AAAAAAAAAIk/1raNajvsID0/s320/page3.jpg" vi="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இதை குட்டி கிறிஸ்துமஸ் என கோவாவில சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதையே திருக்காட்சி திருவிழா என தமிழிலும் Epiphany என ஆங்கிலத்திலும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெர்ஷியா நாட்டைச் சார்ந்த இந்த மூன்று ஆய்வாளர்களும் வானில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு அதைப் பிந்தொடர்ந்து சென்று இயேசு பாலகன் பிறந்திருந்த குடிலை அடைந்தனர் என்கிறது பைபிள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இறைமகன் இயேசு யூதர்களுக்கு மட்டுமின்றி புறவினத்தாருக்கும் தன்னை வெளிப்படுத்திய தினமாகவும் இது கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்லாமல் பெர்ஷியா நாட்டைச் சார்ந்த யூதர்களல்லாதவர்களுக்கும் தன்னுடைய பிறப்பை வெளிப்படுத்திய நாள் இது.&lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாக இத்திருவிழா ஜனவரி 6ம் நாள் உலகெங்குமுள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்காக செய்யப்படும் அலங்காரங்கள் இத்திருவிழா தினம்வரை வீடுகளில் வைக்கப்படுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வீட்டில் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களான குடில், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் சாந்தா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆகியவற்றின் புகைப்படம் மேலே!&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (Better late than never!!)&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜோசஃப்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-4625292308175414454?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/4625292308175414454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2009/01/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/4625292308175414454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/4625292308175414454'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2009/01/blog-post.html' title='திருக்காட்சி திருவிழா'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/SWGq4yvNFjI/AAAAAAAAAIk/1raNajvsID0/s72-c/page3.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-3556498478992556120</id><published>2008-09-08T11:29:00.001+05:30</published><updated>2008-09-08T14:18:32.027+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலேசியாவில்...'/><title type='text'>மலேஷியாவில் தேவாலய வழிபாடு</title><content type='html'>சமீபத்தில் கோலாலம்பூர் (மலேசியா) சென்றிருந்தபோது என்னை மிகவும் கவர்ந்தவற்றுள் ஒன்று அங்குள்ள கத்தோலிக்க தேவலாயங்களில் நடைபெற்ற வழிபாடுகளில் அனைத்து பக்தர்களின் ஈடுபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;வழிபாடுகளில் கலந்துக்கொள்ளும் மக்கள் பல இனங்களைச் சார்ந்தவர்களாகவும் பல மொழிகளைப் பேசுபவர்களாகவும் உள்ளதால் வழிபாடு சமயங்களில் உரைக்கப்படும் ஜெபம் மற்றும் பதிலுரைகளை ஆங்கிலம்,சீனம் மற்றும் தமிழில் ஆலய சுவற்றில் Power Point Slides வடிவத்தில் ஒளிபரப்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே வழிபாட்டில் கலந்துக்கொள்ளும் அனைவரும் தங்கள், தங்கள் மொழியிலேயே ஜெபிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலத்தான் பாடகர் குழுக்களூம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருடம் கிறீஸ்துமஸ் திருவிழா அன்று என்னுடைய மகள் சார்ந்திருந்த பங்கு தேவாலயத்திற்குச் செல்லாமல் சற்றே தள்ளியிருந்த திருக்குடும்ப தேவாலயத்தில் நடைபெற்ற தமிழ் திருப்பலிக்குச் சென்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழக தேவாலயத்திற்குள் நுழைந்ததுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது அங்கு குழுமியிருந்த மலேசிய வாழ் தமிழ் கத்தோலிக்கர்களின் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக தேவாலயங்களிலும் நான் அத்தகைய பாடகர் குழுவைப் பார்த்ததில்லை என்றால் மிகையாகாது. சுமார் இருபது பாடகர்களைக் கொண்ட (பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவியர்) குழு ஆர்மோனியம், தபேலா, வயலின் போன்ற பாரம்பரிய  இசைக்கருவிகளுடன் பாடல்களைப் பாடி பரவசப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கவனத்தை ஈர்த்த இன்னொன்று அங்குள்ள குருமார்கள் வழிபாட்டை நடத்திய விதம். சரியான நேரத்தில் வழிபாட்டைத் துவங்குவது, சிறிய கச்சிதமான பிரசங்கம் (பத்து நிமிடத்திற்கு மேல் செல்லவில்லை)பங்கைச்சார்ந்த மூத்த பக்தர்களையும் (Laymen) திவ்விய நற்கருணையை வழங்குவதற்கு அனுமதிப்பது போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு? மொத்த வழிபாடும் வாரநாட்களில் அரை மணி நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகள் 45 முதல் 60 நிமிடங்களிலும்  திருவிழா காலங்களில் அதிகபட்சம் 75 நிமிடங்களுக்குள்ளும் முடிந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இங்கு நடைபெறுவது போன்று திவ்விய நற்கருணையோடு முடித்துக்கொண்டு யாரும் தேவாலயத்தை விட்டு வெளியேறிடுவதில்லை. இறுதி ஆசீர் வரை மட்டுமல்லாமல் நன்றி கீதத்திலும் அனைவரும் பங்கு பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய தேவாலயங்களிலும் இத்தகைய முறை வருமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-3556498478992556120?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/3556498478992556120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2008/09/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/3556498478992556120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/3556498478992556120'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2008/09/blog-post.html' title='மலேஷியாவில் தேவாலய வழிபாடு'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-1470842959626016236</id><published>2008-04-03T11:17:00.003+05:30</published><updated>2008-04-03T11:40:39.999+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>இயற்கையில் இறைவன்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/R_RwsJ6Nx4I/AAAAAAAAAFY/AjGqpoxd9ME/s1600-h/god.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5184892974886930306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/R_RwsJ6Nx4I/AAAAAAAAAFY/AjGqpoxd9ME/s320/god.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;Look at those hands&lt;br /&gt;&lt;br /&gt;This is so awesome to me……..breathtaking to see this. WOW.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;It is called: God's hands.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;I took this picture on Hwy 30, traveling to London, KY. It has given meStrength in the times of trouble. I feel I should share it with the rest ofThe world. I hope it is an inspiration to you. It just goes to show what We already know.... We have a God and he's watching over us.&lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-1470842959626016236?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/1470842959626016236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2008/04/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/1470842959626016236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/1470842959626016236'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2008/04/blog-post.html' title='இயற்கையில் இறைவன்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/R_RwsJ6Nx4I/AAAAAAAAAFY/AjGqpoxd9ME/s72-c/god.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-6268917974617710063</id><published>2007-09-28T15:33:00.000+05:30</published><updated>2007-09-28T15:36:29.233+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி விமர்சனம்'/><title type='text'>அரசியலும் ஆன்மீகமும்</title><content type='html'>Bowler should bowl, batsman should bat என்பார்கள். இரண்டிலும் வல்லவரானாலும் மட்டை பிடிக்க வேண்டிய நேரத்தில் பந்து எரிபவரைப் போல் ஓடிவந்து கையிலுள்ளதை வீசினால் என்னாவது! &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலத்தான் அரசியலும் ஆன்மீகமும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகவாத அரசியல் பேசுவது எவ்வளவு தவறோ அதுபோலத்தான் அரசியல்வாதி ஆன்மீகம் பேசுவதும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு வெளியில் இருந்தாலும் அரசியல்வாதி அரசியல்வாதிதான், மறுப்பதற்கில்லை. ஆனால் ஆட்சிக்கு வெளியில் இருக்கும் சமயங்களில் பேசுகிற அதே தோரணையில் (பொறுப்பற்ற முறையில் என்று சொன்னால் சற்று அதிகபட்சமாகிவிடும்) ஆட்சியில் இருக்கும் சமயத்திலும் பேசினால்? பிரச்சினைதான். அதிலும் மதம் அல்லது இறைநம்பிக்கையைப் பற்றி பேசும்போது...&lt;br /&gt;&lt;br /&gt;எதிரணியில் இருக்கும் அரசியல்வாதி ஆட்சியாளரை குறைகூற ஆன்மீகம் என்ன எதை வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்வது சகஜம்தான். அவர் ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளையே ஆட்சியை இழந்த பிறகு வேறொருவர் செயல்படுத்த முனையும்போது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த முனைவதும் ஒன்றும் புதிதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தான் இன்று எதிரணியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.கவும் அ.இ.அ.தி.மு.கவும் செய்கின்றன. அந்த வகையில் அவர்களுக்கு இப்போது ஆயுதமாக பயன்படுவது ஆன்மீகம். அது வலுவிழந்து போகின்ற சூழலில் வேறெதையாவது கையில் எடுத்துக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்கு அயோத்தி ராமரானாலும் ராமேஸ்வரம் ராமரானாலும் ஒன்றுதான். காலத்திற்கேற்ப, சந்தர்ப்பத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளப்படும் கருவியும் கருத்தும் மாறிக்கொண்டே போகும். &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோலத்தான் கூட்டணிகளும். காங்கிரஸ் ஆட்சியை பதவியிழக்க செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத பா.ஜ.கவுடன் இணைந்து ஆட்சியை பகிர்ந்துக்கொள்ளவில்லையா? இதெல்லாம் இந்தியா போன்றதொரு நாட்டில் மிகவும் சகஜமப்பா என்கிற நிலைதான் இன்று! &lt;br /&gt;&lt;br /&gt;மதம், இறை நம்பிக்கை  என்பது அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் புனிதமானது. இறைவனில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்களிடம் அதையெல்லாம் எதிர்பார்ப்பதே முட்டாள்தனம். நான் இறை நம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அது என்னுடைய சொந்த விஷயம். ஆனால் பிறருடைய நம்பிக்கையை குறைத்துக் கூறுவதற்கோ அல்லது எள்ளி நகையாடுவதற்கோ எனக்கு உரிமையில்லை. அது என்னுடைய சொந்த கருத்து என்று ஒரு பொறுப்பான பதவியிலிருந்துக்கொண்டு நான் கூறினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதியானாலும் சரி ஆன்மீகவாதியானாலும் சரி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஜால்ரா அடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருக்கலாம் உயர் பதவியில் உள்ளவர்களும் இருக்கலாம். அவரவர் தேவைக்கேற்ப அதை வளைத்து, உருமாற்றி அர்த்தம் கொள்வது வழக்கமாகிப் போன ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மு.க அவர்கள் கூறியதை சரி என்று சொல்ல ஒரு கூட்டம் இருப்பது போல் வேதாந்தி சொல்வதிலும் தவறில்லை என்று சொல்லவும் ஒரு கூட்டம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு கூட்டங்களுமே தங்களுக்கு பொதுவான எதிரியை தாக்க நாளைக்கு ஒன்று சேர்ந்துக்கொண்டாலும் வியப்பதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை நாளை ஆன்மீகத்திலும் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை வந்தாலும் வரும்.. யார் கண்டது!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-6268917974617710063?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/6268917974617710063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/09/blog-post_28.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/6268917974617710063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/6268917974617710063'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/09/blog-post_28.html' title='அரசியலும் ஆன்மீகமும்'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-6637394539470257267</id><published>2007-09-22T10:57:00.000+05:30</published><updated>2007-09-22T11:00:02.799+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி விமர்சனம்'/><title type='text'>சோ ஒரு படித்த கோமாளி</title><content type='html'>பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சோ எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டை, முட்டைக் கண்களை உருட்டி பல படங்களில் அவர் அடித்த லூட்டிகள் மறக்க முடியாதவை. &lt;br /&gt;&lt;br /&gt;தேன் மழைன்னு ஒரு படம். கடத்தி வச்சிருக்கற கும்பல் அவரோட நண்பரோட தொலைப்பேசி எண்ணை சொல்றியா இல்லையான்னு கத்திய காட்டி மிரட்டும். இவர் கண்களை உருட்டியவாறு சொல்வார்'டேய் இதுக்கெல்லாம் பயந்து அந்த ஃபோன் நம்பர் 4678120னு சொல்லுவேன்னு பாத்தியா? சொல்ல மாட்டேன்.' அதாவது ஃபோன் நம்பர சொல்லிட்டு சொல்லமாட்டேன்னு சொல்வார். இதே மாதிரி தொடர்ந்து வீட்டு விலாசத்தையும் சொல்லிட்டு சொல்வேன்னு பாத்தியா, சொல்ல மாட்டேன்னு சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமாஷாருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி இந்த வாரத்து வார இதழ் ஒன்னுலயும் (அந்த எந்த இதழ்னு சொல்லணுமா என்ன?) நிறைய ஜோக் அடிச்சிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது மு.க அவர்களுக்கு இந்து மத கடவுள்களை பழிப்பதற்குத்தான் தெரிகிறது. ராமர் இருந்தாரா இல்லையா, முருகர் இருந்தாரா இல்லையா என்றெல்லாம் கேட்கும் இவர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்துவ மதங்களில் நடந்தவைகளுக்கெல்லாம் சரித்திர, அறிவியல் சாட்சிகளை கேட்பாரா என்று கேட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாங்கள் அப்படியில்லை. கிறிஸ்து மரித்து உயிர்த்ததற்கு சரித்திர, அறிவியல் சான்றுகள் உண்டா என்று நாங்கள் கேட்போமா? கேட்க மாட்டோம். என்று தமாஷ் செய்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;'அதான் கேட்டுட்டீங்களே சார், அப்புறமென்ன கேக்க மாட்டோம்னு சொல்றீங்க?' அப்படீன்னு நாங்க கேப்போமா சோ அவர்களே, கேட்க மாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சோ ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மற்றபடி சுப்பிரமண்ய சாமியைப் போலவே இவரும் ஒரு படித்த முட்டாள். கோமாளி, சந்தர்ப்பவாதி. சமயத்திற்கேற்றாற்போல் பேசுவார், எழுதுவார். நாகரீகம் என்று வாய் கிழிய பேசுவார். ஆனால் அவருடைய எழுத்தில் அதை பார்க்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;மு.க. இந்துக்களை பரிகசித்து, இழித்து பேசிவிட்டார் என்றால் அவரை சாடிவிட்டு போங்க. அத விட்டுட்டு மத்த மதங்களை பற்றி எதுக்கு சார் பேசறீங்க? சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டு நாங்க சொல்ல மாட்டோம்னு வேற சொல்லிக்கறீங்க.... ஏன் சார் இதென்ன காமெடி டயலாக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்த படிச்சி என்ன பிரயோசனம்? இதுல சட்டவல்லுனர்னு வேற சொல்லிக்கறது. &lt;br /&gt;&lt;br /&gt;கேவலம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோமாளின்னு வேணும்னா சொல்லிக்குங்க. அதான் சரியாருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-6637394539470257267?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/6637394539470257267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/09/blog-post_22.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/6637394539470257267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/6637394539470257267'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/09/blog-post_22.html' title='சோ ஒரு படித்த கோமாளி'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-5507334310098044468</id><published>2007-09-14T15:09:00.000+05:30</published><updated>2007-09-14T15:38:07.862+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>தரம் இறங்குவது சரியா?</title><content type='html'>கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலக விஷயமாக சென்னை டைடல் பார்க் வரை செல்ல வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக அலுவலக அலுவல் நிமித்தம் வெளியில் செல்லும் சமயங்களில் என்னுடைய வாகனத்தில் செல்வதில்லை. அதற்கென வங்கி நியமித்திருக்கும் டிராவல் நிறுவனத்திலிருந்து அமர்த்தப்பட்ட வாகனத்தில் செல்வது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்து குறைந்திருக்கும் நேரங்களிலேயே (non peak hours) அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகனங்கள் நிறம்பி வழிவதுண்டு. காலை நேரத்தில் கேட்கவே வேண்டாம். அந்த சந்திப்பிலிருந்து வலப்புறம் திரும்பும் (It corridor) வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்றும் அப்படித்தான். என்னுடைய வாகனம் சந்திப்பை நெருங்கவும் சிவப்பு விளக்கு விழவும் சரியாக இருந்தது. அதற்கு முன் எப்படியாவது சந்திப்பைக் கடந்துவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் வேகமாய் சென்ற என்னுடைய ஓட்டுனர் எத்தனை முயன்றும் அவருக்கு முன்பு சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது தொடாமால் நிறுத்த முடியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வாகனத்தின் முகப்பு பம்ப்பர் அவருடைய வாகனத்தை 'தொட்டது' என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயம் 'இடிக்க'வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவருக்கு வந்ததே கோபம். வாகனத்தை என்னுடைய வாகனத்திற்கு குறுக்கே நிறுத்திவிட்டு (அதாவது வழிமறித்துவிட்டு) இறங்கி வந்து என்னுடைய ஓட்டுனரின் கதவைத் திறந்து சரமாரியாக வசைமாரி பொழிந்து தள்ளிவிட்டார். அதாவது எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளால்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய ஓட்டுனர் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் வாகனத்திலிருந்து இறங்கி பதிலுக்கு வார்த்தை விளையாட்டில் இறங்கினார். அக்கம் பக்கத்து வாகன ஓட்டுனர்கள் காதுகளைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தேன். நின்றபாடில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியின்றி இறங்கி அந்த இளைஞரைப் பார்த்தேன். கழுத்தில் தொங்கிய ஐ.டி கார்டிலிருந்தே அவரும் டைடல் பார்க்கிலிருந்த மிகப் பெரிய ஐ.டி நிறுவனத்தில்தான் பணியாற்றுகிறார் என்பது தெரியவந்தது. நிச்சயம் பொறியாளர். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரிடம், 'என்ன தம்பி நீங்க. பாக்கறதுக்கு ஸ்மார்ட்டா ஒரு எக்ஸ்க்யூட்டிவ் மாதிரி இருக்கீங்க, நீங்களும் இவர் லெவலுக்கு இறங்கி வந்து பேசறீங்களே, ரிலாக்ஸ்.' என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று அவருடைய முகமே மாறிப்போனது. அக்கம்பக்கத்து வாகனங்களில் அமர்ந்திருந்த பெரும்பாலோனோர் அந்த இளைஞரைப் போன்றவர்கள்தான். அவர்களும் முகம் சுளிக்கும் அளவுக்கு அவர் பேசியிருந்ததை அவர் உணர்ந்திருப்பார் போலிருந்தது. சட்டென்று சென்று தன்னுடைய வாகனத்தை விலக்கிக் கொண்டார். அடுத்த நொடியே சிவப்பு விளக்கு பச்சையாக மாற புறப்பட்டுச் சென்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்னுடைய வாகன ஓட்டிக்கு என் மீது வருத்தம். 'என்ன சார் என்னுடைய லெவல்லுன்னு சொல்லி என்னையும் மட்டம் தட்டிட்டீங்களே. அவன் அப்படி பேசறப்போ நா எப்படி சார் பேசாம இருக்கறது?' என்றார் வருத்தத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் புன்னகையுடன், 'நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க தம்பி?' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'எட்டாம் க்ளாஸ் சார். ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்?'&lt;br /&gt;&lt;br /&gt;'இருக்கு தம்பி. படிக்கற படிப்புதான் நமக்கு ஒரு அந்தஸ்த்த ஏற்படுத்தி குடுக்குது, இல்லையா?'&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல வந்தது புரிந்திருக்க வேண்டும். அவர் பதில் பேசாமல் இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;'அவர் நிச்சயம் எஞ்சினியரிங் படிச்சிருக்கணும். நல்ல அந்தஸ்த்துல இருக்கார். அதனால அப்படி சொன்னேன். உங்கள மட்டம் தட்டணும்னு இல்லை. ஆனா அதுக்காக உங்கள மாதிரி ஆளுங்களும் இந்த மாதிரி தரக்குறைவான பேச்சு பேசணும்னு இல்லை. சரிதானே?' &lt;br /&gt;&lt;br /&gt;அவர் உடனே, 'நீங்க சொல்றது சரிதான் சார். மன்னிச்சிருங்க.' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் நம்மை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக நாமும் அதே பாணியில் பேசவோ, எழுதவோ செய்தால் பிறகு நமக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திக்க வேண்டிய விஷயம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-5507334310098044468?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/5507334310098044468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/09/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/5507334310098044468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/5507334310098044468'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/09/blog-post.html' title='தரம் இறங்குவது சரியா?'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-8286360011667810387</id><published>2007-02-21T12:33:00.000+05:30</published><updated>2007-02-21T12:41:24.860+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணம்.. ஒரு ஃப்ளாஷ்பேக்'/><title type='text'>சாகரனின் மரணம்.. ஒரு ஃப்ளாஷ்பேக்...</title><content type='html'>12.02.2007&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய சனியன்று சென்னையில் நடந்து முடிந்திருந்த முத்தமிழ்மன்ற வலைஞர்களின் முதல் கூட்டத்தின் புகைப்படங்களுடனான செய்தியை வாசிக்கும் ஆவலுடன் மன்றத்தில் நுழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முகப்பு பக்கத்திலேயே 'மன்றத்தின் மாமனிதர் சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி' என்று கருப்பு வெள்ளை பேனர் வரவேற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாரிந்த சாகரன்? இரண்டாண்டு காலமாக வலைஞராக இருந்த நான் கேட்டிராத பெயராயிற்றே என்று மருகுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்களில் நண்பர் மூர்த்தி அவர்களின் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ரியாத் தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளருமான சாகரன் என்கிற திரு. கல்யாண் அவர்கள் மாரடைப்பால் காலமானார். அவருடைய உடல் ஒபய்த் மருத்துவமனையில் தற்சமயம் வைக்கப்பட்டுள்ளது. முத்தமிழ் மன்றத்தின் அஸ்திவாரமாகவும், அதன் தூண்களில் ஒருவராகவும் இருந்தவர் என்கிறது அந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு தமிழ்மண நிர்வாகத்தின் பதிவு, மதி அவர்களின் பதிவு.. அதனைத் தொடர்ந்து துளசி துவங்கி பல வலைஞர்களின் பதிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் மன்றம் சாகரன் அவர்களின் மரண அஞ்சலியைத் தவிர வேறெந்த பதிவும் தற்சமயம் இடவேண்டாம் என்று தன்னுடைய உறுப்பினர்களைக் கோருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்றத்தின் இளம் கவிஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சாகரனுக்கு கவியஞ்சலியை செலுத்துகின்றனர்.&lt;br /&gt;.&lt;br /&gt;சாகரன் எங்கள் மன்றத் தூண்&lt;br /&gt;சாக வயதில்லா எங்கள் தோழனை&lt;br /&gt;வேகமாய் காலன் இடித்த தூண்&lt;br /&gt;ஆகமம் அடுக்கா பழி இதுகாண்&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?&lt;br /&gt;நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்&lt;br /&gt;மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே&lt;br /&gt;நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே&lt;br /&gt;&lt;br /&gt;மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்&lt;br /&gt;தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்&lt;br /&gt;இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்&lt;br /&gt;என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார் மன்றத்தின் வழிநடத்துனர்களில் ஒருவரான நண்பர் ரத்தினகிரி..&lt;br /&gt;&lt;br /&gt;முகம் பாராது&lt;br /&gt;இதயத்தால் இணைந்து நின்றோம்&lt;br /&gt;பேசாமல் பேசப்படுவது கண்டேன்&lt;br /&gt;இன்று பேசாமல் இருக்கிறாயே?&lt;br /&gt;&lt;br /&gt;அஜீவன்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பலர்..&lt;br /&gt;&lt;br /&gt;அரைகுறைத் தமிழில் கட்டுரையும் கதையும் எழுதப்பழகியிருந்த எனக்கு கவிதை வராமல் சண்டித்தனம் செய்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் பாலராஜன் கீதா தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கேள்விப்பட்டீர்களா என்கிறார். கேள்விப்பட்டேன்.. காலையிலிருந்து அவர் புகழ் பாடி வராத பதிவுகள் இல்லையே ஆனால் எனக்குத்தான் அவரை பரிச்சயமில்லாமல் போய்விட்டது என்றுவிட்டு அவரைப் பற்றி சற்று சொல்லுங்களேன் என்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவரும் ஆரம்பகாலத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தேன்கூடு திரட்டியைத் துவக்கியவர். அத்துடன் நண்பர்கள் பலருக்கும் இணையதளங்களைத் துவக்குவதில் இலவசமாக துணைபுரிந்தவர்.. அடுக்கிக் கொண்டே போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழுங்காலத்தில் அவருடன் பழக முடியாமற்போனதற்கு பிராயச்சித்தமாக அவருடைய இறுதிச்சடங்கில் பங்குகொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மன்றத்தில் என் பரிந்துரையை வைக்கிறேன். ஈராயிரம் அளவே உறுப்பினர்கள் கொண்டுள்ள மன்றத்தில் என் கருத்தொத்த நண்பர்கள் உடனே அதனை ஏற்றுக்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய சனியன்று நடந்த கூட்டத்தில் பங்குபெற்ற சென்னைவாழ் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் யாரெல்லாம் முடியுமோ அவர்கள் ஒரு குழுவினராக இறுதிச்சடங்கில் பங்குபெற்று மன்றத்தின் சார்பில் ஒரு மலர் வளையம் வைப்பதென முடிவெடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் பாலராஜன் கீதா, மூர்த்தி இருவரும் தொடர்ந்து சாகரனின் இறுதிச்சடங்கைப் பற்றிய செய்தியை அளித்தவண்ணம் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் ரியாத்தில் இருந்தும் வழமையான ரெட் டேப்பிசம் திங்களன்று மரித்தவரை சனியன்றுதான் சென்னைக்கு அனுப்பிவைக்க முடிகிறது. இதுதான் எங்களுடைய அவலம் என்று எழுதுகின்றனர் அயல்நாட்டில் வாழும் பல நண்பர்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;சனியன்று..&lt;br /&gt;&lt;br /&gt;முன்னமே சொல்லி வைத்திருந்த மலர் வளையத்துடன் சரியாக பிற்பகல் 1.30 மணிக்கு என்னுடைய அலுவலகத்திலிருந்து கிளம்புகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாசலில் கவலை தேங்கிய முகங்களுடன் எல்லோரும் ஒரே திசையை நோக்கி நிற்பதைக் காண்கிறேன். எனக்கு முன்பாகவே வந்திருந்த மன்ற நண்பர் சுதாகரைப் பார்க்கிறேன். முதல் முறையக சந்தித்தும் அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொள்ள இயலாத சூழல்.. அழுகுரல் இல்லாத நிச்சலனமான சூழலைப் பார்த்து அருகிலிருந்தவர் ஒருவரை அணுகி இன்னும் 'பாடி வரலையா சார்' என்கிறேன்.. 'ஏர்போர்ட்லருந்து புறப்பட்டாச்சாம் சார்.. வர்ற நேரம்தான்.' காலை 10.40 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய விமானம்.. யாருக்கும் கவலைப்படாத நடைமுறை தொல்லைகள்.. வீடு வந்து சேர சுமார் மூன்று மணிநேரம்..&lt;br /&gt;&lt;br /&gt;நேர்த்தியான மரப்பெட்டியில் சாகரனின் பூத உடல் வந்து இறங்குகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டிக்குள்ளே.. சில நெற்மணிகள்... மத்தியில் தலையிலிருந்து கால்வரை வெள்ளைக் கோடித் துணியால் போர்த்தப்பட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு நாட்களாக அழுது அழுது பாறையாகிப்போன முகங்களுடன் சொந்தமும் பந்தமும்.. நான்கு பேர் அப்படியே அணைத்து தூக்கி செல்ல மெல்லிதாக, மிக மெல்லிதாக அழுகைக்குரல்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;படித்த படிப்பு நம்முடைய உணர்வுகளைக் கூட நாகரீகமாகத்தான் வெளிப்படுத்த வைக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தபந்தத்துடன் அக்கம்பக்கத்து பெண்களும் சரசரவென உள்ளே செல்கின்றனர்.. கண்களை துடைத்தவாறு வெளியே வருகின்றனர்..&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் மன்ற நண்பர்கள் பலரும் வந்து சேர.. 'மலர் வளையத்த வச்சிரலாம் சார்.. அப்புறம் கூட்டம் சேர்ந்துட்டா கஷ்டமாயிரும்..' என்கிறார் நண்பர் ஒருவர். என்னுடைய வாகனத்திலிருந்து வளையத்தை எடுத்து தயக்கத்துடன் நுழைகிறோம்..&lt;br /&gt;&lt;br /&gt;சிறியதொரு கூடத்தில் தரையில் வெள்ளைத் துணியகற்றப்பட்டு.. மன்றப் பதிவுகள் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படத்தில் இருந்ததைவிடவும் இளமையாய்.. தூக்கத்தில் இருப்பதைப் போல..&lt;br /&gt;&lt;br /&gt;மலர் வளையத்தை தலைமாட்டில் வைக்கிறோம்.. என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவருடைய பாதம் சாகரனின் தலையை எங்கே தொட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் ஒரு நொடி சாகரனின் இளம் மனைவி ஐயோ என் புருசன் என்பதுபோல் தலையை அணைத்துக்கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னையுமறியாமல் கண்கள் கலங்கி குளமாகின்றன. சிறியதாயிருந்த கூடத்தில் கூட்டம் நெருக்குகிறது.. பிரிய மனமில்லாமல் இறுதியாய் ஒரு பார்வை அமைதியாய்போன அந்த முகத்தை.. வெளியேறி வாசலில் நிற்கிறோம்..&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ சொல்கிறார்கள்..'பாப்பாவ கூட்டிக்குட்டு வாங்கோ.. பாத்துரட்டும்..'&lt;br /&gt;&lt;br /&gt;சாகரனின் மகளைத்தான்.. பாப்பா அங்கு இல்லை.. இருவர் ஓடிச் சென்று அழைத்துவருகிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;வாகனத்தில் இருந்த மூன்று வயது பெண் குழந்தையை சாகரனின் தங்கை தூக்கி வருகிறார். குழந்தை அடம் பிடித்து இறங்கி முகமெல்லாம் புன்னகையுடன் குதித்தவாறு ஓடி வருகிறது....சுற்றிலும் நின்றிருந்த ஆண்களும் திகைப்பை வெளிக்காட்டாமல் பரிதாபத்துடன் குழந்தையையே பார்த்தவாறு..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நிமிடத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவருகிறது.. விளையாடப் போணும்.. என்னெ விடு..&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர்களுள் ஒருவர்.. 'இன்னும் ஒரு மணிநேரத்துல பொறப்பட்டுருவோம்.. சரியா நாலுமணிக்கு அங்க இருப்போம்..' எங்கிருப்போம்..? மயானத்தில் என்பது அவர் சொல்லாமலே புரிகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் வேதியர்கள் (பூசாரிகள்) மந்திரத்தை துவக்குகின்றனர்.. அமைதியாய் ஆர்ப்பட்டமில்லாமல் நான்கு செங்கற்குளுக்குள் தீச்சுவாலை.. மஞ்சள் நிறத்தில்.. சற்றுத் தள்ளி மூங்கில் பாடை தயாராகிறது.. இதாண்டாப்பா வாழ்க்கை.. வாழற நேரத்துல போற வாகனங்கள் எதுவானாலும்.. கடைசியில போறது இதுலதாண்டா என்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;வேதியர் ஓதும் எதுவும் விளங்கவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;சாகரன் தமிழுக்கு சேவையாற்றியவராயிற்றே.. இதுவே தமிழில் இருந்திருந்தால்..&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய வீடுகளில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனையை நினைவுகூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்..&lt;br /&gt;மரித்த விசுவாசிகளின் ஆத்மா நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது..&lt;br /&gt;&lt;br /&gt;மரித்த சகோதரனின் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி..&lt;br /&gt;அவரை நித்திய தீச்சூளையில் தள்ளிவிடாதேயும்&lt;br /&gt;உம்முடைய நிழலில் வைத்து நித்தியத்திற்கும் காத்தருளும் சுவாமி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆத்மாவை அமைதியாய் போகவிடும் சுவாமி&lt;br /&gt;அமைதியாய் போகவிடும்..&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்..'&lt;br /&gt;&lt;br /&gt;விடைபெற்றுச் செல்கையில் வாசலிலிருந்து எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம் கண்ணில் படுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;'திரு. கல்யாண்.. பெயரில் வரும் கடிதங்களை மேல் வீட்டில் கொடுக்கவும்..' சாகரனின் சொந்த கையெழுத்தா தெரியவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த 'மேல் வீட்டில்' என்ற வார்த்தைகள்.. இப்போது தீர்க்கதரிசனமாய் படுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டும் முடிந்தால்.. சாகரனுக்கு அஞ்சலியாய் எத்தனை பதிவுகள்.. எத்தனை கவிதைகள்..&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாவற்றையும் அனுப்பி வைக்க முடியாதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-8286360011667810387?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/8286360011667810387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_21.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/8286360011667810387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/8286360011667810387'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_21.html' title='சாகரனின் மரணம்.. ஒரு ஃப்ளாஷ்பேக்...'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-1454573828299667268</id><published>2007-02-17T10:32:00.000+05:30</published><updated>2007-02-17T10:33:34.398+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>அயரா உழைப்பும், விடா முயற்சியும்!</title><content type='html'>'இன்று சாதனையாளர்கள் பட்டியலில் முதன்மை இடத்தை வகிப்பவர்களூள் பலரும் சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தவர்களே. ஆனால் அவற்றால் முடங்கிப் போய்விடாமல் மீண்டு வந்தவர்கள்.'&lt;br /&gt;&lt;br /&gt;"சோதனைகள் ஒன்று அல்லது இரண்டு என்றால் பரவாயில்லை. ஆனால் வாழ்க்கையே சோதனையாகிப் போயிற்றே என்ன செய்வேன்." என்று கலங்கி நிற்கும் நம்மைப் போன்றோர்  இன்றைய சாதனையாளர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருப்பவர்களுடைய வாழ்க்கையை சற்றே புரட்டிப் பார்த்தால் தெளிவு பிறந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வாழும் காலத்திலேயே, நம் கண் முன்பே வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்த எத்தனை பேர் தாங்கள் உயர்ந்தது மட்டுமல்ல தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கும் நமக்குமுள்ள வேறுபாடு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சோதனைகளை வேதனைகளாக்கி சோர்ந்து போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அதே சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சிலருக்கு மட்டும் சாத்தியமாவதென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் ஏன் முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;'அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்&lt;br /&gt;பெருமை முயற்சி தரும்'&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இது செய்வதற்கு முடியாத செயல் என்று சோர்வடையாமல் இருக்க வேண்டும்; இடைவிடாத முயற்சி அதைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் என்கிறார் வள்ளுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரே தொடர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்&lt;br /&gt;தாழாது உஞற்று பவர்' என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது மனத்தளர்ச்சியில்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன்மேலும் முயன்று உழைப்பவர் வெற்றிபெறும் முயற்சிக்கு இடையூறாக வரும் விதியையும் வென்றுவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்வது எளிது. ஆனால் அவற்றை வாழ்க்கையில் கடைபிடிப்பது கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியைக் கண்டு சோர்ந்துவிடாமல் இருப்பது எளிதல்ல. அதற்கு மிகுந்த மனப்பக்குவம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரண்டு நாட்களிலோ ஏன், ஓரிரண்டு ஆண்டுகளிலோ வந்துவிடுவத்தல்ல இந்த பக்குவம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தொடர்ந்து முயற்சித்தால் கைகூடாதது எதுவுமில்லையல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சி திருவினையாக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-1454573828299667268?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/1454573828299667268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/1454573828299667268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/1454573828299667268'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_17.html' title='அயரா உழைப்பும், விடா முயற்சியும்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-339496581755776584</id><published>2007-02-10T11:41:00.000+05:30</published><updated>2007-02-10T11:15:06.091+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நான் ஒரு அசைவம்!</title><content type='html'>&lt;strong&gt;'நான் சைவம், அசைவம் என்பது நான் உண்ணும் உணவை மட்டுமே பொருத்ததல்ல. நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளையும்தான்.'&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;'நீங்கள் உண்ணும் உணவு உங்களுடைய இதயத்தை மாசுபடுத்துவதில்லை. அது நேரடியாக வயிற்றிற்குச் சென்று ஜீரணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு விடுகிறது. மாறாக உங்களுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே உங்களை யாரென்று காட்டுகின்றது' என்கிறது பைபிள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் வாயிலிருந்து வார்த்தைகள் நம் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களிலிருந்தே பிறக்கின்றன. நம்முடைய எண்ணங்கள் நல்லவையாக இருக்குமானால் நம்முடைய வார்த்தையும் சுத்தமானதாக இருக்கும். நம் செயல்களும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல எண்ணங்கள் உதிக்கும் அதே உள்ளத்திலிருந்தே காமம், களவு, பொறாமை, அகங்காரம் போன்ற தீய எண்ணங்களும் உதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தீய எண்ணங்கள் உதிக்கும் உள்ளம் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளையும் தீயதாக்குகின்றன என்பது மறுக்கவியலாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவற்றையே நினைக்கும் உள்ளம் இவ்வுலகில் காணும் அனைத்தையும் நல்ல கண்ணோட்டத்துடனே பார்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக தீயவன் கண்ணுக்கு தென்படுவதெல்லாமே தீயதாகவே தென்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் படைப்புகளில் உன்னதமானது மனிதன்!&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய பயன்பாட்டுக்கென்றே படைக்கப்பட்டவைதான் மற்ற படைப்புகள் அனைத்துமே.&lt;br /&gt;&lt;br /&gt;எதை உண்பது எதை உண்ணலாகாது என்பதெல்லாம் மனிதனாகவே வரித்துக்கொண்டதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இவற்றை உண்பவன் மட்டுமே நல்லவன் மற்றவரெல்லாம் தீயவர்கள் அல்லது மற்றவர்களைவிட தரம் தாழ்ந்தவர்கள் என்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வப் புலவர் 'புலால் மறுத்தல்' என்னும் அதிகாரத்தின் கீழ் அளித்துள்ள கீழ்காணும் குறள்களை வாசித்தால் புலால் (மாமிசம்) உண்பவன் இரக்கமற்றவன், அருளுடையவனாகும் தகுதியற்றவன் என்பதுபோன்ற தோற்றமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்&lt;br /&gt;எங்ஙனம் ஆளும் அருள்"&lt;br /&gt;&lt;br /&gt;தன் உடலைப் பெரிதாய் வளர்ப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;"பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி&lt;br /&gt;ஆங்கில்லை ஊந்தின் பவர்க்கு"&lt;br /&gt;&lt;br /&gt;பொருளுடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவருக்கு இல்லை. அவ்வாறே அருள் உடையவராகும் தகுதி ஊனைத் தின்பவருக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதைத்தான் அவர் கூற விழைந்தாரா என்பது சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-339496581755776584?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/339496581755776584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_5179.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/339496581755776584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/339496581755776584'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_5179.html' title='நான் ஒரு அசைவம்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-1911505244806871798</id><published>2007-02-10T11:10:00.000+05:30</published><updated>2007-02-03T11:05:33.060+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>வெற்றியும் தோல்வியும்..</title><content type='html'>&lt;strong&gt;'சூழ்நிலைகள் மட்டுமே நம்முடைய வெற்றிக்கும் தோல்விக்கும் காரணிகள் அல்ல.'&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வங்கிகளில் எல்லா கிளை மேலாளர்களுக்கும் ஒரு நிதியாண்டில் அடைய வேண்டிய பல இலக்குகளை (Targets) வங்கி நியமிக்கும். அவற்றை வெற்றிகரமாக அடையாத மேலாளர்கள் (என்னையும் சேர்த்துத்தான்) தங்களுடைய கிளை இயங்கி வரும் இடம், வர்த்தக நிலை என பல சூழ்நிலைகளைக் காரணம் காட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் திறமையில்லாதவர்கள், ஊழியர்களின் சேவை தரம் சரியில்லை என்றெல்லாம் கூட குற்றம் சாட்டுவார்கள். சிலர் ஒரு படி மேலே சென்று தங்களுக்கு தங்களுடைய வட்டார அலுவலகத்திலிருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று தங்களுடைய மேலதிகாரிகள் மீதே குற்றம் சுமத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது தங்களைத் தவிர மற்றெல்லாருமே தங்களுடைய இயலாமைக்கு காரணிகள் என்பதுபோலிருக்கும் அவர்களுடைய வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் இப்படித்தான். என்னுடைய வட்டாரத்தில் இயங்கிவந்த கிளை மேலாளர்களின் ஆண்டு கூட்டம் நடைபெற்றிருக்கையில் நான் மேலே குறிப்பிட்ட வாதங்களை பல மேலாளர்கள் முன்வைத்தனர். என்னுடைய வங்கி தலைவர் பதற்றமடையாமல் என்னுடைய வட்டார மேலாளரிடம், 'I think we can solve theri problem by transferring them from their respective branches.' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். அனைவரும் அவரவர் வாதங்களை மூட்டைக் கட்டிவிட்டு மவுனமாயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கித் தலைவர் தொடர்ந்து கூறினார். 'சாதகமான சூழலில் திறம்பட பணியாற்றுவது மிகவும் எளிது. ஆனால் அது பெரிய சாதனையல்ல. சாதகமற்ற சூழலில் எந்த அளவுக்கு ஒருவரால் சாதிக்க முடிகிறதோ அதை வைத்துத்தான் அவருடைய திறமை கணக்கிடப்படுகிறது. A person who performs beyond his capacity in adverse conditions can only be a real performer.'&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான்..&lt;br /&gt;&lt;br /&gt;சாதகமற்ற ஒரு சூழலில் ஒருவருடைய செயல்திறனுக்கு அப்பால் செயலாற்றுகிறவனே ஒரு உண்மையான சாதனையாளன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய வாழ்விலும் இத்தகையோர் பலரை நாம் கண்டிருக்கிறோம். வெள்ளையனுடைய ஆதிக்கத்தில் இருந்த நம் முன்னோர்கள் சாதித்தவற்றுடன் ஒப்பிடுகையில் நம்முடைய சாதனை ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே சாதகமற்ற சூழல்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பயிலுவோம். சாதிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்குறித்து தெய்வப் புலவர் கூறுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா&lt;br /&gt;ஊக்கம் உடையான் உழை"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தளர்ச்சியில்லாத ஊக்கம் உடையவனிடம், செல்வம் (வெற்றி) வழி கேட்டுக் கொண்டு வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்&lt;br /&gt;உள்ளத்து அனையது உயர்வு."&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தண்ணீரிலே மலரும் பூவின் தாளினுடைய நீளம், தண்ணீர் உயரத்துக்கு இருக்கும். அதுபோல் மனத்தில் ஊக்கம் உள்ள அளவுக்கு உயர்வும் இருக்கும்.&lt;br /&gt;******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-1911505244806871798?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/1911505244806871798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/1911505244806871798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/1911505244806871798'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_10.html' title='வெற்றியும் தோல்வியும்..'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-5390738825672096930</id><published>2007-02-02T12:14:00.000+05:30</published><updated>2007-02-02T12:16:20.146+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>என்னால் முடியும்!</title><content type='html'>&lt;span style="color:#cc9933;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;‘உன்னால் இது முடியாது என்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில் பொருளில்லை. என்னால் முடியும் என்பதுதான் மிக முக்கியம்.’&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நம்முடைய லட்சியம் பலருக்கு அதீத கனவுகளாய் தெரிய வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘வீணா கனவு காண்றத விட்டுட்டு ஒன்னால எது முடியுமோ அத செய்யப்பாரு.’ இது தினமும் நம் வீடுகளில் நாம் கேட்கும் அறிவுரை.&lt;br /&gt;&lt;br /&gt;கனவு காண்பவனால் மட்டுமே வாழ்க்கையில் பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதிக்க முடியும் என்பதற்கு நம்முடைய வாழ்நாளிலேயே பல சான்றுகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ரிலையன்ஸ் அம்பானி அவர் நினைத்த இடத்தை அடைவதற்கு கையாண்ட முறைகளில் சில தவறானவையாக இருக்கலாம். ஆனால் அதை தன்னால் அடைய முடியும் என்று அவர் நினைத்தது கனவுதானே! இன்று அவருடைய நிறுவனம் ஒரு லட்சம் கோடி வருவாய் என்ற உன்னத நிலையை கடந்திருக்கிறதே அது எத்தனை இமாலய சாதனை!&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தான் மின் விசிறி! பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்திருந்த துறையில் துணிவுடன் இறங்கி துவக்கத்தில் ஐந்தாறு பணியாளர்களை மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு துவக்கப்பட்ட நிறுவனம் பல பன்னாட்டு நிறுவனங்களையும் தோற்கடித்ததே அது கனவல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இந்திய நிறுவனம் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கோரஸ் எஃகு நிறுவனத்தை பலமுனைப் போட்டியை சமாளித்து ஏற்றதே அது நிறைவேறும் என்று யாரால் நினைத்திருக்க முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வயதை எட்டுவதற்கு முன்பே தன் நிறுவனத்தை நிறுவி சகல எதிர்ப்புகளையும் - ஒரு சமயத்தில் உலகின் மிகப் பெரிய கணினி நிறுவனங்களான ஐ.பி.எம், ஆப்பிள் – மீறி இன்று உலகின் நம்பர் ஒன் மென்பொருள் நிறுவனம் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறதே அதற்கு பில் கேட்ஸ் என்ற ஒரு இளைஞனின் கனவுதானே..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அனுதினம் நாம் கேட்கும் ‘உன்னால் முடியாது தம்பி’ என்ற அதே வார்த்தைகளை இவர்களும் எத்தனை முறை கேட்டிருப்பர்?&lt;br /&gt;&lt;br /&gt;‘உன்னால் முடியாது’ என்பதை சக்தியுடன் எதிர்கொள்ளக் கூடிய ஒரு ஆயுதம் ‘என்னால் முடியும்’ என்ற தன்னம்பிக்கைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்திற்கு எல்லை இல்லை என்பதுபோன்றே நாம் காணும் கனவுகளுக்கும் எல்லை இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கனவை நனவாக்குவது அத்தனை எளிதல்ல என்பது நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். அதை நமக்கு மற்றவர் எடுத்துக் காட்ட தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கனவு காணும் நமக்கு நமக்கு அவற்றை நனவாக்கவும் முடியும் என்பதை உணர்த்திக்காட்ட வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ‘என்னால் எதுவும் முடியும்’ என்ற ஆழமான நம்பிக்கை வேண்டும். என்னுடைய அறிவுத் திறனில், உழைப்பில்..&lt;br /&gt;&lt;br /&gt;தன்னம்பிக்கை! அதை வெற்றிக்கொள்ளக் கூடிய ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை இழக்காமல் இருப்போம்.. கனவுகளை நனவாக்குவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-5390738825672096930?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/5390738825672096930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/5390738825672096930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/5390738825672096930'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post.html' title='என்னால் முடியும்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116849362572369321</id><published>2007-01-11T11:03:00.000+05:30</published><updated>2007-01-11T11:03:45.910+05:30</updated><title type='text'>நான் நட்டதும் பூக்கணும்!!</title><content type='html'>‘வெற்றியின் ரகசியங்களுள் ஒன்று விடாமுயற்சி.’&lt;br/&gt;&lt;br/&gt;இதற்கு வாழும் சாட்சிகளாக நம்மிடையே பலர் உள்ளனர்.&lt;br/&gt;&lt;br/&gt;இன்று தொழில்துறையிலும், வணிகத்திலும் உச்சியில் நிற்கும் பலரும் தங்களுடைய துவக்க காலங்களில் தோல்வியை, ஒருமுறை இருமுறையல்ல, பலமுறை தழுவியவர்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;உதாரணத்திற்கு ரிலையன்ஸ் அம்பானி, கைத்தான், நம் தமிழகத்தில் விஜிபி சகோதரர்கள், சென்னையில் மட்டுமல்லாமல் நாட்டின் மிகப் பெரிய சில்லறை மின்பொருள் சாதனங்கள் விற்பனையாளர்களெனக் கருதப்படும் விவேக் அண்ட் கோ இவர்கள் அனைவருமே அவர்களுடைய தொழிலில்/வணிகத்தில் தோல்வியைத் தழுவியவர்களே.&lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் ஒவ்வொரு முறையும் சோர்ந்துபோகாமால் விடாமுயற்சியுடன் தங்களுடைய பாதையில் தொடர்ந்து சென்றதன் விளைவே இன்று அவர்கள் அடைந்திருக்கும் முதன்மை நிலை.&lt;br/&gt;&lt;br/&gt;வெற்றி என்பது இன்றோ, நாளையோ கிடைத்துவிடக் கூடியதல்ல. அப்படியே கிடைத்தாலும் அவ்வெற்றியில் நமக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைப்பதில்லை. எளிதாய் கிடைக்கும் வெற்றி நேர்மையான வழிகளில் கிடைக்கக்கூடியதல்ல என்பது நாம் அறிந்ததுதானே..&lt;br/&gt;&lt;br/&gt;என்னுடைய பெற்றோர்களின் உழைப்பால் எனக்கு கிடைத்த உறுதியான அடித்தளம் என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமானால் அவ்வெற்றியில் என்னுடைய பங்கு என்ன?&lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய திரைப்பட நடிகர்கள் வரிசையில் இன்று முன்னனி கதாநாயகர்களாகக் கருதப்படும் விக்ரம் திரைப்படத்துறையினரால் அங்கீகரிக்கப்பட எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது? அவர் மலையாளப் படங்களில் எத்தனை சிறிய பாத்திரங்களிலெல்லாம் நடிக்க வேண்டியிருந்தது என்பதை நான் அறிவேன். அன்றைய நாயகர்களான மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்களுடைய படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தோன்றிய பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். &lt;br/&gt;&lt;br/&gt;உன்னுடைய முகம் கதாநாயகனுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட ரஜினிகாந்த் இன்று தமிழகத்தின் சூப்பர் ஸ்டார். உன்னுடைய கண்கள் மிகவும் சிறியதாக உள்ளன, திரையில் எடுபடாது என்று ஒதுக்கப்பட்ட சத்யராஜ் இன்று பெரியாருடைய கதாபாத்திரத்தில், ஒட்டடைக் குச்சி மாதிரி இருக்கிறாய் என்று எள்ளி நகையாடப்பட்ட ரகுவரன் இன்று மிகச் சிறந்த குணசித்திர நடிகர்!&lt;br/&gt;&lt;br/&gt;இப்படி எத்தனை, எத்தனையோ எடுத்துக்காட்டுகள் நம் கண் முன்னே!&lt;br/&gt;&lt;br/&gt;‘நான் நட்டதும் பூக்கணும்’ இப்படியொரு தாவரம் உலகில் உள்ளதா என்ன?&lt;br/&gt;&lt;br/&gt;வெற்றியும் அப்படித்தான். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல தோல்விக்கு மேல் தோல்வி வந்தாலும் விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி நடப்பவனே அதை அடைய முடியும்!&lt;br/&gt;&lt;br/&gt;*******&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116849362572369321?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116849362572369321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116849362572369321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116849362572369321'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2007/01/blog-post.html' title='நான் நட்டதும் பூக்கணும்!!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116745745150782150</id><published>2006-12-30T11:02:00.000+05:30</published><updated>2006-12-31T19:51:43.950+05:30</updated><title type='text'>இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!</title><content type='html'>‘ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நம்முடைய கணக்குப் புத்தகங்களை சரிபார்ப்பது போலவே நம்முடைய உள்ளத்தையும் ஆராய்ந்து பார்ப்போம். எதிர் வரும் புத்தாண்டுக்கு நம்மை நாமே தயார் செய்துக்கொள்வோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;நம் அலுவலகங்களைப் பொருத்தவரை இன்று ஆண்டின் இறுதி வேலைநாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் வங்கிகளின் கணக்குகளை முடிக்கும் நாளாகவும் இந்நாள் இருந்தது. அப்போதெல்லாம் வருட இறுதி வேலை நாளன்று வீடு திரும்பவே நள்ளிரவைக் கடந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் நிதியாண்டை ஏப்ரல் முதல் மார்ச் வரை என்று மாற்றிய பிறகு டிசம்பர் மாத இறுதி வேலை நாள் ஒரு சாதாரண வேலை நாள் போலாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வங்கியில் ஆண்டின் இறுதி வேலைநாளன்று வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வைப்புக் கணக்குகளுக்கும், வழங்கப்பட்டிருந்த கடன் கணக்குகளுக்கும் கொடுக்க வேண்டிய, வரவு வைக்கப்பட வேண்டிய வட்டியைக் கணக்கிடுவது. மொத்த வருமானத்திலிருந்து வர்த்தகத்தை நடத்திச் செல்ல எத்தனை செலவழித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு என்னுடைய கிளையின் நிகர லாபம் என்ன என்பதை கணக்கிட்டு முடிக்கும் நேரத்தில் சில சமயம் மகிழ்ச்சியாகவும் சில சமயம் கவலையாகவும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மேலாளர்களுக்கு பாராட்டும் சிலருக்கு ஏச்சும் மேலதிகாரிகளிடமிருந்து கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே நம்முடைய சொந்த வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நாள் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் இவை:&lt;br /&gt;&lt;br /&gt;1. எனக்கு நானே உண்மையாக இருந்திருக்கிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;2. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு உண்மையாக இருந்திருக்கிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;3. நான் கடமைப்பட்டவர்களிடத்தில் - பெற்றோர், மனைவி - மக்கள், நண்பர்கள் – விசுவாசமாக, நன்றியுள்ளவனாக இருந்திருக்கிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;4. உண்மைக்கு புறம்பாக பேசி பிறரை வஞ்சித்திருக்கிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;5. வேண்டுமே தெரிந்தும் பிறர் மீது சேற்றை வாரியிறைத்திருக்கிறேனா (Character assassination)?&lt;br /&gt;&lt;br /&gt;6. பேராசை, அழுக்காறு கொண்டிருக்கிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இதுபோன்ற எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் புனிதர்கள் அல்ல. சாதாரண மனிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே ஏற்படும் சபலம், சலனம், சஞ்சலம் எல்லாவற்றிற்கும் அடிமையானவர்கள் நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சோதனைகள் நிறைந்த இவ்வுலகில் இவற்றை முற்றிலுமாக விலக்கி வைக்க எந்த ஞானியாலும் இயலாது என்பதும் நமக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கேள்விகளுக்கு நம்மிடமிருந்து எத்தகைய பதில் வரவேண்டுமென்றோ அல்லது சரியாக வரும் பதில்களுக்கு இத்தனை மதிப்பெண், தவறான பதில்களுக்கு இத்தனை எதிர்மறை மதிப்பெண் (Negative marks) இரண்டையும் கூட்டிக் கழித்து பார்த்து இத்தனை மதிப்பெண் வந்தால் நான் நல்லவன்.. இல்லையென்றால்..&lt;br /&gt;&lt;br /&gt;இதுவல்ல நாம் செய்ய வேண்டியது..&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய பதில்கள் எதுவாக இருப்பினும் நம்முடைய த்ம சோதனையில் நாம் உண்மையாக இருந்தால் போதும்..&lt;br /&gt;&lt;br /&gt;நாம் யாராக இருந்தோம், நாம் யாராக இருக்க வேண்டும் என்பது நமக்கு தெளிவாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டில் நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நமக்கு திருப்தி உண்டென்றால் அப்படியே தொடர்ந்து இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையென்றால் நம்மை திருத்திக்கொள்ள முயல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலரும் புத்தாண்டு நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் வாரி வழங்க வேண்டும் பிரார்த்திக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116745745150782150?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116745745150782150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_30.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116745745150782150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116745745150782150'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_30.html' title='இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116728513932245861</id><published>2006-12-28T11:22:00.000+05:30</published><updated>2006-12-28T13:22:17.883+05:30</updated><title type='text'>பணியில் சேர ஜாதகம் தேவை!!</title><content type='html'>வேலைக்கொரு ஜாதகம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஃபைனான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வந்திருந்த இந்த தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ வேடிக்கைக்காக கொடுத்த தலைப்பு என்று நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Your horoscope holds the key to a plum job!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;ஆனால் கட்டுரையைப் படித்துமுடித்ததும்தான் விளங்கியது இது வெறும் வேடிக்கைக்காக எழுதப்பட்டத்தல்ல என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை முழுவதும் படிக்க &lt;a content_id="15011"&gt;இங்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=150118"&gt;http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=150118&lt;/a&gt;&lt;br /&gt;  செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் படித்து முடித்ததும் என் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் இவை:&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக முதல் தர நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த எழுத்துத் தேர்வு (Written Exam), குழு உரையாடல் (GD), தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் மனித வள நேர்காணல் (Technical and HR Interview) என மூன்று சுற்றுகள் நடத்தப்படுகின்றன. இனி ஜாதக பொருத்தம் என்ற நான்காவது சுற்றும் இருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விக்கு ஆம் என்பது பதிலானால்..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்தவரை இந்துக்கள் அல்லாதவர்கள் ஜாதகம் கணிப்பதில்லை. ஒருவேளை அவர்கள் இந்த சுற்றுக்கு தகுதி பெற மாட்டார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை எல்லா சுற்றுகளிலும் முதலாவதாக வந்தவருடைய ஜாதகம் சரியில்லை என்றால் அவர் நிராகரிக்கப்படுவாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;சரி. நான்காவது சுற்றில் கலந்துக்கொள்ளும் ஜாதகம் யாருடைய ஜாதகத்துடன் பொருந்த வேண்டியிருக்கும்? நிறுவனத்துடனா? அப்படியொரு ஜாதகம் இருக்குமா? அல்லது அதன் முதல்வர் அல்லது மூத்த பங்குதாரர் இவர்களுடைய ஜாதகத்துடனா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு கேள்வி. ஜாதகப் பொருத்தத்தை சரிவர கணிப்பதற்கு எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடிய தரத்தில் ஒரு கருவி அல்லது முறை வகுக்கப்பட்டுள்ளதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய வங்கியில் கடன் பெற வருபவர்கள் வங்கிகளுக்கு ஒன்று, வரி இலாக்காவிற்கு ஒன்று என இரு வேறு நிதியறிக்கைகளை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே திருமணத்திற்கு ஒன்று, பணியில் சேர ஒன்று என இரு ஜாதகத்தையும் குழந்தை பிறந்தவுடனே கணித்து வைத்து விட வேண்டும் போலிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் குழந்தை நல்ல நேரத்தில் பிறந்துவிட வேண்டுமென்பதற்காக சுகப் பிரசவத்தை தவிர்த்து தங்களுக்கு வேண்டிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பிறக்கச் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஜாதகப் பொருத்தம் பார்த்து பணிக்கு சேர்க்கும் முறை பிரபலமானால் குழந்தைப்பேறு மருத்துவர்களுக்கு கொண்டாட்டம்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;இது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்றல்லாமல் வேறென்ன!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க இந்தியா!&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116728513932245861?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116728513932245861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_28.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116728513932245861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116728513932245861'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_28.html' title='பணியில் சேர ஜாதகம் தேவை!!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116720196772428204</id><published>2006-12-27T12:16:00.000+05:30</published><updated>2006-12-27T15:09:13.020+05:30</updated><title type='text'>இன்றைய சாதனை!</title><content type='html'>‘இன்று ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். இன்று நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் உங்களுடைய அன்பை வெளிப்படுத்துங்கள். அதுவே ஒரு பெரிய வெற்றியை அடைந்த மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கும்.’&lt;br/&gt;&lt;br/&gt;சாதனை என்பது தினமும் சாத்தியமல்ல.&lt;br/&gt;&lt;br/&gt;தினமும் சாதிக்கக் கூடியது எதுவும் பெரிய சாதனையுமல்ல.&lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் பிறரன்பு அப்படியல்ல. &lt;br/&gt;&lt;br/&gt;நம்மை நாமே அன்பு செய்வது பெரிய விஷயமல்ல. அதை ஐந்தறிவு படைத்த விலங்குகளும் செய்கின்றன. &lt;br/&gt;&lt;br/&gt;நம்மை நாம் அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும்!&lt;br/&gt;&lt;br/&gt;செய்து பாருங்கள். அது எத்தனை சிரமம் என்பது விளங்கும்.&lt;br/&gt;&lt;br/&gt;மனித இயல்புக்கு அப்பாற்பட்ட விஷயம் அது. &lt;br/&gt;&lt;br/&gt;நம்மை நம்முடைய எல்லா குறைகளுடனும் நாம் ஏற்றுக்கொள்வதுபோல பிறரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;இயலாத காரியம்தான். ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்லையல்லவா?&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பிணைப்பை காதல் என்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;காதலின் அடித்தளமே இந்த பிறரன்புதான்.&lt;br/&gt;&lt;br/&gt;இதில் கண்டதும் காதல் சேர்த்தியல்ல. இது கதைகளில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் ஏற்படும் இத்தகைய காதல் நாளடைவில் வெறும் காகிதக் காதலாகிவிட வாய்ப்புண்டு.&lt;br/&gt;&lt;br/&gt;இறைவனுக்கு மனிதர்களை இனம் பிரித்து பார்க்க தெரிவதில்லை. சாதி, மதம், மொழி, நிறம் இவை எவற்றையுமே பார்க்காமல் அன்பு செய்கிறவர் இறைவன். &lt;br/&gt;&lt;br/&gt;ஆகவேதான் அன்பே உருவானவர் இறைவன் என்கிறோம். &lt;br/&gt;&lt;br/&gt;இறைவனால் இது முடிகிறது. ஏனெனில் அவரே அனைத்தையும் படைத்தவர்.&lt;br/&gt;&lt;br/&gt;நம்மால் இது முடிவதில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;முடியாததை செய்து முடிப்பதே ஒரு சாதனைதானே..&lt;br/&gt;&lt;br/&gt;பெரிதாய் எதையும் சாதிக்க முடியவில்லையே என வருந்துவதைத் தவிர்த்து இதையாவது சாதிக்க முயல்வோம்!&lt;br/&gt;&lt;br/&gt;****&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116720196772428204?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116720196772428204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_27.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116720196772428204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116720196772428204'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_27.html' title='இன்றைய சாதனை!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116702429118890211</id><published>2006-12-25T10:46:00.000+05:30</published><updated>2006-12-25T23:07:31.656+05:30</updated><title type='text'>கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்!!</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;கடலைத் தேடி நதிகள் பாயும்,&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;மலரைத் தேடி வண்டுகள் நாடும்,&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இது இயற்கை!&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;மனிதனைத் தேடி இறைவன் வந்த நாள் இது!!&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i21.photobucket.com/albums/b268/tbrjoseph/IMG_0119.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;அனைவருக்கும் கிறிஸ்த்துமஸ் தின வாழ்த்துக்கள்!!!&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;அன்புடன்,&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஜோசஃப்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116702429118890211?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116702429118890211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_25.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116702429118890211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116702429118890211'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_25.html' title='கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்!!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116660680737813920</id><published>2006-12-20T14:56:00.000+05:30</published><updated>2006-12-21T10:21:55.176+05:30</updated><title type='text'>நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்!</title><content type='html'>‘நமக்கு நல்லது நடக்கும் சமயங்களில் நாமும் பிறருக்கு அதை செய்ய முயல வேண்டும்.’&lt;br/&gt;&lt;br/&gt;தினை விதைத்தவன் தினையையும் வினை விதைத்தவன் வினையையும் அறுவடை செய்வான் என்பதைக் கேட்டிருக்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;நமக்கு நல்லது&amp;nbsp;&amp;nbsp;நடக்க வேண்டும் என்று&amp;nbsp;&amp;nbsp;எப்படி விரும்புகிறோமோ அது பிறருக்கும் நடக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;நாமும் நம்மைச் சார்ந்தவர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது போலவே மற்றவர்களும் நினைக்க வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்து போகிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை பலரும் இன்றும் பாசத்துடன் நினைவுகூரக் காரணம் அவர் தனக்கு கிடைத்த சன்மானங்களையெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்த அந்த நல்ல உள்ளம்!&lt;br/&gt;&lt;br/&gt;இவரைப் போன்று நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு சான்றாக சான்றோர்கள் பலர் வாழ்ந்த பூமி இது. &lt;br/&gt;&lt;br/&gt;நாம் நல்லவற்றையே நினைத்தால் நமக்கும் நல்லது நடக்கும் நம்மால் பிறருக்கும் நல்லவற்றை செய்ய முடியும் என்பதை நம்புகிறவன் நான்.&lt;br/&gt;&lt;br/&gt;பிறருடைய நல்லவைகளில், அவர்களுடைய வெற்றியில் நாம் பங்குகொள்கிறோமோ இல்லையோ அதைப் பார்த்து அழுக்காறு கொள்ளாமலாவது இருக்க முயல வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் அதற்கு மேலே ஒரு படி சென்று அவர்களுடைய மகிழ்ச்சியில் கலந்துக்கொள்ள முயன்றால் அதில்தான் மனிதம் முழுமைப் பெறுகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;இப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் என்றென்றும் நினைவில் கொண்டிருக்கும்.&lt;br/&gt;&lt;br/&gt;நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்.&lt;br/&gt;&lt;br/&gt;*****&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116660680737813920?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116660680737813920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_20.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116660680737813920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116660680737813920'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_20.html' title='நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116642648930392997</id><published>2006-12-18T12:51:00.000+05:30</published><updated>2006-12-18T14:55:41.616+05:30</updated><title type='text'>சாதனை படைப்போம்!!</title><content type='html'>‘பெரிய சாதனைகளை படைக்க பெரியவர்களாக (வல்லவர்கள்) இருக்க வேண்டும் என்பதல்ல.. பெரியவற்றை சாதிக்க வேண்டுமென்ற எண்ணமுள்ள சிறியவர்களாலும் முடியும்’&lt;br/&gt;&lt;br/&gt;‘தம்மை உயர்த்திக்கொள்வோர் தாழ்த்தப்படுவோர். தம்மை தாழ்த்திக்கொள்வோர் உயர்த்தப்படுவோர்’ : இது பைபிள் வாக்கு&lt;br/&gt;&lt;br/&gt;இறைவனின் படைப்பிலே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;அவரவர் சொல், செயல், சிந்தனை இவைகளை வைத்தே ஒருவர் பெரியவரா சிறியவரா என்பதை இவ்வுலகம் கணிக்கின்றது.&lt;br/&gt;&lt;br/&gt;ஒருவரை பெரியவர் என்று கணிக்க அவருடைய&amp;nbsp;&amp;nbsp;பணம், பதவி அல்லது செல்வாக்கு ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் அத்தகைய கணிப்பு நிரந்தரமானதல்ல என்பதையும் நான் கண்டுணர்ந்திருக்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;இன்று முதல்வராயிருந்தவர் நாளை கைதியாவதும், இன்று கைது செய்யப்படுபவர் நாளை முதல்வராவதும் சரித்திரம்!&lt;br/&gt;&lt;br/&gt;சமுதாயத்தின் அடிமட்டத்தில் வறுமையில் உழலும் குடும்பத்திலிருந்து வந்த எத்தனையோ இளைஞர், இளைஞிகள் உலகில் எவரும் கனவிலும் நினைத்துப் பார்க்கவியலாத சாதனைகள¨ நிகழ்த்தியிருப்பதை சமீப காலமாக பல பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;சாதனைகளைப் படைப்பதற்கு நாம் பெரியவர்களாக, அதாவது மெத்தப் படித்த மேதைகளாகவோ, அல்லது செல்வாக்குள்ளவர்களாகவோ அல்லது செல்வாக்குள்ளவர்களை பரிச்சயமுள்ளவர்களவோ இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல என்பதை இவை நிரூபித்துள்ளன.&lt;br/&gt;&lt;br/&gt;சாதனைகளைப் படைக்க நம்முடைய சமுதாய மற்றும் பொருளாதார நிலை ஒரு பொருட்டே இல்லை. &lt;br/&gt;&lt;br/&gt;சாதனைகளைப் படைக்க அதை படைக்க வேண்டுமென்ற எண்ணம், நம்மால் அதை அடைய முடியும் என்ற ஒரு முழுமையான ஈடுபாடு இருந்தாலே போதும்.&lt;br/&gt;&lt;br/&gt;சாதனைகள் நம் காலடியில் வந்து விழும் என்பது நிச்சயம்!&lt;br/&gt;&lt;br/&gt;சாதனைகள் படைக்க சந்திரனை எட்டிப் பிடிக்க வேண்டுமென்பதில்லை. &lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மால் எட்ட முடியாதவற்றை எட்டிப்பிடிப்பதும் சாதனைதான்.&lt;br/&gt;&lt;br/&gt;சாதனை படைப்போர் புது சரித்திரத்தையே எழுதுபவர்கள் என்பதை மறக்கலாகாது..&lt;br/&gt;&lt;br/&gt;வாருங்கள். புது சாதனை படைப்போம், புது சரித்திரம் எழுதுவோம்!!&lt;br/&gt;&lt;br/&gt;****&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116642648930392997?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116642648930392997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_18.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116642648930392997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116642648930392997'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_18.html' title='சாதனை படைப்போம்!!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116616057539226153</id><published>2006-12-15T10:59:00.000+05:30</published><updated>2006-12-15T11:08:32.126+05:30</updated><title type='text'>குழந்தைகளாய் மீண்டும் பிறப்போம்!</title><content type='html'>‘பிறர் மீது நம்பிக்கை வைப்பது, முழுமையான, எந்த நிபந்தனைகளும் இல்லாத அன்பு, மற்றும் மகிழ்ச்சி இவைகளில் குழைந்தகைளைப் போலவும் அனுபவம், பிறர் சிநேகம் மற்றும் விவேகம் இவற்றில் பெரியவர்களாகவும் இருப்போம்.’&lt;br/&gt;&lt;br/&gt;நமக்கு பல உருவங்கள் உண்டு.&lt;br/&gt;&lt;br/&gt;என்னுடைய குடும்பத்தினருக்கு பாசமுள்ள தலைவனாக, என் நண்பர்களுக்கு நல்லதொரு நண்பனாக, என்னுடைய அலுவலகத்தில் எனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு நல்ல பொறுப்புள்ள அதிகாரியாக, என் சக அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையுள்ளவனாக, என்னுடைய மேலதிகாரிகளுக்கு நல்ல பணிவுள்ள ஊழியனாக, சமுதாயத்தில் சட்டத்தைக் கடைபிடிக்கும் நல்ல குடிமகனாக என பல உருவங்கள், பல முகங்கள் எனக்கு இருக்கின்றன. &lt;br/&gt;&lt;br/&gt;இது நம் எல்லோருக்கும் பொருந்தும்.&lt;br/&gt;&lt;br/&gt;நேரம், காலம், இடம் இவற்றிற்கேற்றார்போல் நம்முடைய நடத்தை, பேச்சு, குணாதிசயங்கள் ஆகியவை மாற வேண்டும். &lt;br/&gt;&lt;br/&gt;இல்லையேல் ஆங்கிலத்தில் சொல்வதுபோல சமுதாயத்தில் நாம் ஒரு misfit ஆகக் கருதப்பட்டுவிடுவோம். &lt;br/&gt;&lt;br/&gt;நான் என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன், நான் செல்கின்ற பாதையில்தான் செல்வேன் என்று பிடிவாதத்துடன் செயல்பட்டால் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் பிரச்சினைதான்.&lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய குழந்தைகளைப் பாருங்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;எந்த சூழலுக்கும் சட்டென்று தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியைப் போல தங்களை flexible ஆக வைத்துக்கொள்வது குழந்தைகளுக்கு கைவந்த கலை.&lt;br/&gt;&lt;br/&gt;அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது?&lt;br/&gt;&lt;br/&gt;தங்களை சுற்றியுள்ள் எவரையும் எளிதில் நம்பிவிடும் வெள்ளை மனம், எந்த எதிர்பார்ப்புமில்லாத அன்பு, தொட்டதற்கெல்லாம் மகிழ்ச்சியடையும் உள்ளம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என தரம் பிரிக்கத் தெரியாத பார்வை இவைதான் குழந்தைகள் தங்களை எந்த சூழலிலும் ஒன்றிப்போய்விட உதவுகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;நாம் வளர்ந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் சமயங்களிலெல்லாம் நானா, நானா இப்படியெல்லாம் இருந்தேன் என்றும் அந்த நாள் மீண்டும் திரும்பி வராதா என்றும் ஏங்குகிறோமே, ஏன்? &lt;br/&gt;&lt;br/&gt;அந்த நாட்களில் நாம் எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தோம் என்பதால்தானே..&lt;br/&gt;&lt;br/&gt;நாம் கடந்து வந்த பாதையில் நாம் சந்தித்த நபர்கள், நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான, கசப்பான அனுபவங்கள், வெற்றி தோல்விகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்.. &lt;br/&gt;&lt;br/&gt;இவற்றிலிருந்து நாம் கற்று தெளிந்தது என்ன?&lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய நிழல் மீதே அவநம்பிக்கை, நம் உடன்பிறப்புகளின் மீதே பொறாமை, ஏன், நம்மில் சிலருக்கு நம்முடைய பிறப்புகளிடமே பொறாமை, எதிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் அபார திறமை.&lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய கடந்த கால அனுபவங்கள் நம்மை எதையும் மன முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளும் முழு மனிதர்களாக மாற்றியிருக்கிறதா? நம்முடைய குழந்தைப் பருவத்து குணங்களை இழந்துவிடாமல் இப்போதும் கொண்டிருக்கிறோமா?&lt;br/&gt;&lt;br/&gt;நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்..&lt;br/&gt;&lt;br/&gt;****&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116616057539226153?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116616057539226153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_15.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116616057539226153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116616057539226153'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_15.html' title='குழந்தைகளாய் மீண்டும் பிறப்போம்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116607348214868354</id><published>2006-12-14T10:39:00.000+05:30</published><updated>2006-12-14T11:13:08.163+05:30</updated><title type='text'>ஆக்கபூர்வமான அறிவு!</title><content type='html'>‘அறிவை (Knowledge) வளர்த்துக்கொள்வது நம்முடைய நோக்கத்தை அடைய உதவும் பாதை மட்டுமே. அதுவே நம்முடைய நோக்கமல்ல. நோக்கம் இல்லாத அறிவு அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதையாகவும் மாறிவிடக்கூடும்’&lt;br /&gt;&lt;br /&gt;மனித படைப்பிலே மிகவும் அற்புதமானது மனிதனுடைய மூளை.&lt;br /&gt;&lt;br /&gt;அது நம் எல்லோருக்குமே பொதுவானது, அதாவது அளவைப் பொருத்தவரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் மனிதர்கள் ஒன்று சேர்ந்து சாதிப்பதைவிட பன்மடங்கு ஒரு இயந்திர மனிதனால் (Robot) சாதித்துவிட முடியும் என்பதை மனிதன் நிரூபித்திருக்கிறான். ஏனெனில் அதன் கர்த்தா மனிதன்!&lt;br /&gt;&lt;br /&gt;மனித மூளையில் இத்தனை விஷயத்தைத்தான் சேமித்து வைக்க முடியும் என்ற எல்லையை இதுவரை எவரும் கண்டறிந்ததில்லை. இத்தனை கிலோ பைட்ஸ் விவரங்களை மட்டுமே சேமித்து வைக்க முடியும் என்ற எவ்வித எல்லையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதன் சேகரித்து வைக்கும் இத்தகைய அறிவு (விஷய ஞானம்) மட்டுமே ஒரு மனிதனை அறிவாளியாக்கிவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆக்கபூர்வமான விஞ்ஞானிக்கு நிகராக விஷய ஞானமுள்ள தீவிரவாதியையும் இன்றைய  உலகில் நம்மால் ஒருசேர பார்க்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பாதுக்காப்புகள் நிறைந்த மென்பொருளை ஒரு ஆக்கபூர்வமான மென்பொருள் பொறியாளன் கண்டுபிடித்தாலும் அடுத்த நிமிடமே அதை ஊடுருவி நாசப்படுத்தக்கூடிய கிருமியையும் கண்டுபிடித்துவிடுகிறான் அவனுக்கு நிகரான அல்லது அவனை விடவும் விஷய ஞானமுள்ள, ஆற்றல்படைத்த வேறொரு  பொறியாளன்!&lt;br /&gt;&lt;br /&gt;இருவருமே ஒரே அளவுள்ள மூளையைக் கொண்டவர்கள்தான். ஒருவேளை ஒரே பல்கலைக்கழகத்தில் ஏன் ஒரே ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களாகக் கூட இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் சேகரித்து வைத்த சேமிப்பை அது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அல்லது இவை இரண்டையும் பெருமளவில் ஈட்டக் கூடிய விஷய ஞானமாக இருந்தாலும் அதை எந்த நோக்கத்திற்கு பயன்படுத்துகிறான் என்பதில்தான் மனிதன் வேறுபடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏவுகணை தயாரிப்பில் பயிற்சி பெறும் ஒரு ஆக்கபூர்வமான விஞ்ஞானி தன்னுடைய விஷய ஞானத்தை தன் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படுத்துகிறார் என்றால் அதே விஷய ஞானத்தை ஒரு தீவிரவாதி அழிவுக்கு பயன்படுத்துகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கபூர்வமான நோக்கம் இல்லாத அறிவு அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு கருவி, ஒரு பாதை என்பதில் சந்தேகமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவை வளர்ப்போம். அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116607348214868354?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116607348214868354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_14.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116607348214868354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116607348214868354'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_14.html' title='ஆக்கபூர்வமான அறிவு!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116590353914975649</id><published>2006-12-12T11:35:00.000+05:30</published><updated>2006-12-12T11:35:39.503+05:30</updated><title type='text'>உதவி கோருவது யாசகம் அல்ல!</title><content type='html'>‘பிறருதவி என்பது ஒருவழிப்பாதையல்ல’ &lt;br/&gt;&lt;br/&gt;நாம் செயல்படுத்த நினைத்ததை செயல்படுத்த இயலாமல் தடங்கலையோ, தாமதங்களையோ எதிர்கொள்ளும் நேரங்களில் மற்றவர் உதவியை நாடுவதில் தயக்கம் காட்டலாகாது.&lt;br/&gt;&lt;br/&gt;நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது. &lt;br/&gt;&lt;br/&gt;சிலர் சிறுவயது முதலே நினைவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். சிறிது நேரம் படித்தாலே போதும். அப்படியே மனதில் பதிந்துவிடும். படித்தவற்றை அப்படியே தேர்வில் எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுவிடுவர்.&lt;br/&gt;&lt;br/&gt;வேறு சிலருக்கு படித்ததையே மீண்டும், மீண்டும் படித்தால்தான் நினைவில் நிற்கும். &lt;br/&gt;&lt;br/&gt;இன்னும் சிலருக்கு எத்தனை முறை படித்தாலும் நினைவில் நிற்கவே நிற்காது.&lt;br/&gt;&lt;br/&gt;இது மாணவப் பருவத்தில்.&lt;br/&gt;&lt;br/&gt;படிப்பு முடிந்து ஒரு அலுவலில் அமர்ந்தாயிற்று.&lt;br/&gt;&lt;br/&gt;சிலர் தங்களுடைய அலுவல்களில் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடுவார்கள். &lt;br/&gt;&lt;br/&gt;அவர்களுக்கு நிகரான அறிவாற்றலும் செயல்திறனும் இருந்தும் சிலருக்கு எத்தனை கடினமாக முயற்சி செய்தாலும் வெற்றி கிடைப்பது அரிதாக இருக்கும். பல தோல்விகளுக்குப் பிறகே வெற்றிக்கனியை அவர்கள் அடையமுடிகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;இன்னும் சிலருக்கோ எத்தனை முயன்றாலும் தாங்கள் நினைத்ததை அடைய முடியாமல் தோல்வியிலேயே முடிவதுண்டு.&lt;br/&gt;&lt;br/&gt;இத்தகைய சூழலில் நம்மில் பலரும் இருந்திருக்க வாய்ப்புண்டு.&lt;br/&gt;&lt;br/&gt;முதல் சாரார், அதாவது முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடுபவர்களுடைய அணுகு முறையைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய வெற்றியின் ரகசியம் நமக்கு தெரியவரும்.&lt;br/&gt;&lt;br/&gt;எந்த ஒரு காரியத்திலும் நாம் ஈடுபடுவதற்கு முன் அதை முழுமையாக செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து தேவைப்பட்டால் நம்முடைய சக அலுவலர்களுடைய உதவியை நாடிப் பெற்றால் வெற்றி நிச்சயம்.&lt;br/&gt;&lt;br/&gt;உதவி கோருவதை யாசகம் என்று கருதுபவர்களும் மற்றவர்களிடம் உதவி கேட்டு சென்றால் அவர்களும் பிறகு நம்மிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்களே என்றும் கருதுபவர்களுமே தங்களுடைய முயற்சிகளில் தேக்கத்தையும், தோல்விகளையும் சந்திக்கிறார்கள் என்பதை நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.&lt;br/&gt;&lt;br/&gt;உதவி கேட்டு நிற்பது நம்முடைய கையாலாகாத்தனத்தை மற்றவர்களுக்கு காட்டிவிடுமே என்று ஒருபோதும் சிந்திக்கலாகாது.&lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் ஒன்று. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் மட்டுமே நமக்கு தேவைப்படும் நேரத்தில் மற்றவர்கள் நம்முடைய துணைக்கு வர தயாராயிருப்பார்கள்!&lt;br/&gt;&lt;br/&gt;பிறருதவியைக் கோருவதென்பது ஒரு வழிப்பாதையல்ல என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.&lt;br/&gt;&lt;br/&gt;நாம் செய்யும் உதவி நமக்கு தேவைப்படும்போது கேட்காமலே திரும்பி வரும்!&lt;br/&gt;&lt;br/&gt;*******&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116590353914975649?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116590353914975649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116590353914975649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116590353914975649'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_12.html' title='உதவி கோருவது யாசகம் அல்ல!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116538596252458503</id><published>2006-12-06T11:49:00.000+05:30</published><updated>2006-12-10T06:15:28.166+05:30</updated><title type='text'>குழந்தைக் குறும்பு!</title><content type='html'>நம்முடைய குழந்தைகளிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;பல சமயங்களில் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போய்விடுவது சகஜம்.&lt;br/&gt;&lt;br/&gt;உதாரணத்திற்கு சில:&lt;br/&gt;&lt;br/&gt;ஏழு வயது சிறுமி தன்னுடைய தாயின் தலைமுடியில் சில நரைத்திருப்பதைப் பார்க்கிறாள். &lt;br/&gt;&lt;br/&gt;‘என்னம்மா சில முடிங்க மட்டும் நரைச்சிருக்கு?’ &lt;br/&gt;&lt;br/&gt;‘நீ வம்பு பண்ணும்போதெல்லாம் என்னோட தலைமுடியில ஒன்னு நரைச்சிருது.. அம்மா முடி நரைக்காம இருக்கணும்னா நீ நல்ல பிள்ளையா இருக்கணும்.’&lt;br/&gt;&lt;br/&gt;சிறுமி சிறிது நேரம் தன்னுடைய தாயின் பதிலை அசைபோடுகிறாள். ‘ஓ! அதான் பாட்டியோட தலை சுத்தமா நரைச்சிருச்சா?’&lt;br/&gt;&lt;br/&gt;***&lt;br/&gt;&lt;br/&gt;டீச்சர்: திமிங்கிலம் பார்ப்பதற்கு பெரிசா இருந்தாலும் அதோட தொண்டை மிகவும் குறுகலானது. ஆகவே அது நம்மை விழுங்காது.&lt;br/&gt;&lt;br/&gt;சிறுமி: டீச்சர்,&amp;nbsp;&amp;nbsp;ஜோனாவை திமிங்கிலம் முழுங்கி வயித்துக்குள்ள மூனு நாள் வச்சிருந்து வெளியே துப்பிருச்சாமே.. எங்க சண்டே பைபிள் க்ளாஸ்ல சொல்லியிருக்காங்க.&lt;br/&gt;&lt;br/&gt;டீச்சர்: (எரிச்சலுடன்): அதெல்லாம் இருக்காது. &lt;br/&gt;&lt;br/&gt;சிறுமி: அப்படியா? நா மோட்சத்துக்கு போறப்போ அவரையே கேக்கப் போறேன்.&lt;br/&gt;&lt;br/&gt;டீச்சர்: அவர் நரகத்துக்கு போயிருந்தா?&lt;br/&gt;&lt;br/&gt;சிறுமி: அப்ப நீங்க கேளுங்க.&lt;br/&gt;&lt;br/&gt;****&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு LKG வகுப்பில் சிறுமிகள் மும்முரமாக வரைந்துக்கொண்டிருக்கின்றனர். &lt;br/&gt;&lt;br/&gt;டீச்சர்: என்னம்மா வரையறே?&lt;br/&gt;&lt;br/&gt;சிறுமி: கடவுள்!&lt;br/&gt;&lt;br/&gt;டீச்சர்: யாருக்குமே கடவுள் எப்படி இருப்பாருன்னு தெரியாதே.&lt;br/&gt;&lt;br/&gt;சிறுமி: இன்னும் ஒரு நிமிஷத்துல தெரிஞ்சுரும்.&lt;br/&gt;&lt;br/&gt;****&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு வகுப்பிலுள்ள சிறுமிகளின் கூட்டு புகைப்படத்தின் (Group Photo) நகலை வாங்குவதற்கு அவர்களைத் தூண்டும் நோக்கத்துடன்:&lt;br/&gt;&lt;br/&gt;டீச்சர்: நீங்க வளர்ந்து பெரியவங்களானதுக்கப்புறம் இதுலருக்கற ஒவ்வொருத்தரையா காமிச்சி இது மீனா.. இப்ப இவ பெரிய டாக்டர். இது லீனா இது பெரிய வக்கீல்னு சொல்லலாமீல்ல?’&lt;br/&gt;&lt;br/&gt;வகுப்பின் பின்னாலிருந்து ஒரு சின்ன குரல்: இது எங்க டீச்சர். செத்துப் போய்ட்டாங்க. இப்படியும் சொல்லலாம்.&lt;br/&gt;&lt;br/&gt;******&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு வகுப்பில் ரத்த ஓட்டத்தைப் பற்றிய பாடம் நடத்தும்..&lt;br/&gt;&lt;br/&gt;டீச்சர்: இங்க பாருங்க.. நா தலைகீழா நிக்கப் போறேன். என் உடம்புலருக்கற ரத்தம் முழுசும் என் தலையில இறங்கி முகம் முழுசும் சிவக்கப் போவுது.&lt;br/&gt;&lt;br/&gt;சிறுமிகள்: ஆமாம் டீச்சர்!&lt;br/&gt;&lt;br/&gt;டீச்சர்: இப்ப சொல்லுங்க. நாம நேரா நிக்கறப்போ ஏன் ரத்தம் முழுசும் காலுக்குள்ள இறங்க மாட்டேங்குது?&lt;br/&gt;&lt;br/&gt;சிறுமி: ஏன்னா ஒங்க கால்ங்க காலியாயில்லையே!&lt;br/&gt;&lt;br/&gt;******&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு வகுப்பிலுள்ள குழந்தைகள் உணவகம் ஒன்றில் வரிசையில் நிற்கின்றன. அவர்களை அழைத்துச் சென்ற கன்னியர்களுள் ஒருவர்..&lt;br/&gt;&lt;br/&gt;பிள்ளைங்களா.. இங்கருக்கற ஆப்பிள்கள்ல ஆளுக்கு ஒன்னுதான் எடுக்கணும்.. கடவுள் பாத்துக்கிட்டிருக்கார். மறந்துராதீங்க.&lt;br/&gt;&lt;br/&gt;உணவகத்தின் மறுகோடியில் ஒரு இடத்தில் சாக்லேட் வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் சிறுமி அவசரமாக எழுதி வைத்திருந்த வாக்கியம்: ‘எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம். ஏன்னா கடவுள் அங்க ஆப்பிள பாத்துக்கிட்டிருக்கார்.’&lt;br/&gt;&lt;br/&gt;***&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116538596252458503?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116538596252458503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_06.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116538596252458503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116538596252458503'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_06.html' title='குழந்தைக் குறும்பு!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116521132451755990</id><published>2006-12-04T11:18:00.000+05:30</published><updated>2006-12-04T11:18:46.013+05:30</updated><title type='text'>மகிழ்ச்சியும் உற்சாகமும்..</title><content type='html'>‘நாம் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டுமென்றால் அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும் நம்முடைய நடவடிக்கைகள். அப்போதுதான் நாமும் உண்மையில் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கவியலும்.’&lt;br/&gt;&lt;br/&gt;நான் உள்ளூர உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு நம்முடைய கிரிக்கெட் வீரர்கள் தலையைத் தொங்க போட்டுக்கொண்டு மைதானத்தில் காட்சியளிப்பதைப் போல நடந்தால் யார் அதை நம்புவார்கள்?&lt;br/&gt;&lt;br/&gt;அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பது எத்தனை உண்மை!&lt;br/&gt;&lt;br/&gt;மகிழ்ச்சி உள்ளத்தில் இருந்தால் அது நிச்சயம் நம்முடைய பிரகாசமான முகத்தில் தெரியும்.&lt;br/&gt;&lt;br/&gt;துக்கத்தை வேண்டுமானாலும் மறைத்துவிடலாம். ஆனால் மகிழ்ச்சியை நம்மால் மறைக்க முடியாது.&lt;br/&gt;&lt;br/&gt;துக்கம் பகிரப் பகிர குறையும்.. மாறாக மகிழ்ச்சி பலுகிப் பெருகும்.&lt;br/&gt;&lt;br/&gt;மற்றவர்களுடன் நம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள அதை நம்முடைய முகத்தைத் தவிர வேறு எதில் காட்டமுடியும்?&lt;br/&gt;&lt;br/&gt;உற்சாகமும் அப்படித்தான். அது ஒரு தொற்று நோய் போல என்றாலும் மிகையாகாது.&lt;br/&gt;&lt;br/&gt;நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அனைவரையும் நம்முடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும், பாதிக்கும்.. &lt;br/&gt;&lt;br/&gt;நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அதுபோலத்தான் நாமும் ஒரு நாள் ஆவோம் என்பது உண்மைதானே..&lt;br/&gt;&lt;br/&gt;நான் இன்று செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியடையப் போகிறேன் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;நம்மையுமறியாமலே நாம் இன்று செய்யவிருக்கும் ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ஈடுபடுவோம்.&lt;br/&gt;&lt;br/&gt;உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் நாம் செய்யும் எந்த ஒரு செயலாவது தோல்வியில் முடியுமா?&lt;br/&gt;&lt;br/&gt;வெற்றியில் முடியும் எந்த ஒரு செயலும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்காது இருக்கவியலுமா?&lt;br/&gt;&lt;br/&gt;ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையான, மகிழ்ச்சியான, உற்சாகமான சிந்தனைகளுடன் துவக்குவோமானால் அந்த நாள் மிக மகிழ்ச்சியான நாளாக முடியும் என்பதில் சந்தேகமேயில்லை..&lt;br/&gt;&lt;br/&gt;இது நான் என் அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை..&lt;br/&gt;&lt;br/&gt;என்னுடைய அலுவலக அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புவோர் என் உலகத்திற்கு வருமாறு அழைக்கிறேன்: http://ennulagam.blogspot.com/2006/12/ii-1.html&lt;br/&gt;&lt;br/&gt;***&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116521132451755990?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116521132451755990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_04.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116521132451755990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116521132451755990'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_04.html' title='மகிழ்ச்சியும் உற்சாகமும்..'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116495096124250365</id><published>2006-12-01T10:59:00.000+05:30</published><updated>2006-12-01T13:02:32.926+05:30</updated><title type='text'>முயற்சி திருவினையாக்கும்!</title><content type='html'>‘நாம் எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்த முயற்சி செய்தால் மட்டுமே அது நம்மால் இயலுமா, இயலாதா என்பது நமக்கே தெரியவரும்.’&lt;br/&gt;&lt;br/&gt;இயலாமை என்று ஒன்றும் இல்லை.&lt;br/&gt;&lt;br/&gt;பள்ளிப் பயிலும் சிறுவனுக்கு இரு சக்கர சைக்கிள் ஓட்டுவது மலைப்பாகத்தான் தோன்றுகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் தந்தையின் உதவியுடன் தட்டுத் தடுமாறி பயிலும்போது பலமுறை விழுந்து, சிறாய்ப்புக் காயங்களுக்கு ஆளாகி நாளடைவில் சில்லென்று காற்று முகத்தில் வீச தன்னுடைய நண்பர்கள் முன்னிலையில் ஹாண்டில்பாரிலிருந்த கைகளையும் எடுத்துவிட்டு ஜாலவித்தைக் காட்டுகையில் மனதில் தோன்றும் மகிழ்ச்சி! &lt;br/&gt;&lt;br/&gt;அதற்கு ஈடு இணை உண்டா என்ன?&lt;br/&gt;&lt;br/&gt;அதை செயல்படுத்த அச்சிறுவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் சந்திக்க வேண்டிய தோல்விகளையும் வேதனைகளையும் முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்திருந்தால் அவனால் அதில் இறங்கியிருக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே..&lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் நம்முடைய வயதும் படிப்பும் அளித்திருக்கும் இந்த&amp;nbsp;&amp;nbsp;அனுபவம் சில சமயங்களில் நம்மால் எந்த ஒரு விஷயத்திலும் இறங்குவதற்கு முன்பு அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்து அதில் நம்மை இறங்கவிடாமலே செய்துவிடுகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;எழுந்து நடந்தால் விழுந்துவிடுவேன் என்று பத்து மாத பாலகனுக்கு தெரியாததால்தானே பல முறை விழுந்தும் எழுந்து நடப்பதில் குறியாயிருக்கிறது?&lt;br/&gt;&lt;br/&gt;அதுபோன்ற மனநிலையுடன்தான் நாமும் ஒவ்வொரு விஷயத்திலும் இறங்குகையில் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு விஷயத்தை செயல்படுத்த முனைகையில் அது நம்மால் முடியுமா, முடியாதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதில் தவறில்லைதான்.&lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் முடியாது என்று நம்முடைய உள்ளுணர்வு கூறுமானால் அதை உடனே ஏற்றுக்கொண்டு நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வரலாகாது.&lt;br/&gt;&lt;br/&gt;ஏன் முடியாது என்ற எதிர்கேள்வியையும் நம்மை நாமே கேட்டு அதற்கு நம்முடைய பகுத்தறிவு கூறும் காரணங்கள் என்னென்ன என்பதை அமர்ந்து ஆராய்ந்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பதைக் கண்டுணரவேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;அப்போதுதான் நம்முடைய முயற்சி வெற்றியைத் தரும்..&lt;br/&gt;&lt;br/&gt;சரி.. அப்படியே நம்முடைய முயற்சி தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் மீண்டும் அமர்ந்து நம்முடைய முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பதை அலசி ஆராய தயக்கம் காட்டக்கூடாது.&lt;br/&gt;&lt;br/&gt;இன்றைய தோல்வியில் நாளைய வெற்றி உதயமாகலாம் அல்லவா?&lt;br/&gt;&lt;br/&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116495096124250365?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116495096124250365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116495096124250365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116495096124250365'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post.html' title='முயற்சி திருவினையாக்கும்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116477754739353323</id><published>2006-11-29T10:49:00.000+05:30</published><updated>2006-12-01T10:46:17.993+05:30</updated><title type='text'>நம்முடைய அனுபவங்கள்!</title><content type='html'>‘நம்முடைய ஒவ்வொரு அனுபவமும் நம்மை வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றது என்பதை மறக்கலாகாது’&lt;br/&gt;&lt;br/&gt;நெடுஞ்சாலை ஓரங்களில் காணப்படும் மைல் கற்களைப் போன்றவைதான் நம்முடைய அனுபவங்களும். &lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய வாழ்க்கையும் ஒருவகையில் ஒரு நெடுந்தூரப் பயணம்தானே!&lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய நெடுந்தூரப் பயணங்களில் சாலையில் ஒவ்வொரு மைல் கல்லையும் கடக்கும் போது நாம் அடையவிருக்கும் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கின்ற உவகை நம்மை மேலும் உற்சாகப் படுத்துகிறது அல்லவா?&lt;br/&gt;&lt;br/&gt;இது ஒரு பார்வை. &lt;br/&gt;&lt;br/&gt;ஆனால் சிலருக்கோ ச்சே.. இன்னும் இத்தனை தூரம் பயணம் செய்ய வேண்டுமா? எப்போதுதான் இப்பயணம் முடிவுக்கு வருமோ என்றும் தோன்றக்கூடும்.&lt;br/&gt;&lt;br/&gt;இதுவும் ஒரு பார்வைதான்.&lt;br/&gt;&lt;br/&gt;அதுபோலவேதான் நம்முடைய அனுபவங்களும். &lt;br/&gt;&lt;br/&gt;அது வெற்றியில் முடிந்தாலும் தோல்வியில் முடிந்தாலும் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை வலுவிழக்கச் செய்யலாகாது. மாறாக நம்முடைய மன உறுதியை மேலும் வலுவுள்ளதாக்கி நம்முடைய நெடு நோக்கு பார்வையை மேலும் கூர்மையானதாக்க வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;என்னுடைய வாழ்க்கையில் நான் இதை அனுபவித்து அறிந்ததால்தான் என்னால் இத்தனை உறுதியாகக் கூற முடிகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;என்னுடைய ஐம்பதாவது வயதில் என்னுடைய வங்கியின் புதிதாகத் துவக்கப்பட்ட கணினி இலாக்காவை தலைமையேற்று நடத்த நியமிக்கப்பட்ட போது எனக்கு மிகவும் மலைப்பாக இருந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;நானோ வெறும் காமர்ஸ் பட்டம் பெற்று முழுக்க முழுக்க வங்கி அதிகாரியாக சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் பணிபுரிந்தவன். நானாக ஒரு கணினியை வாங்கி அத்துடன் கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கி எனக்கு நானே ஆசிரியனாக இருந்து அதை ஒருவாறு இயக்க அறிந்திருந்தவன். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே என்றுதான் இருந்தது என் சிந்தனை அப்போது.&lt;br/&gt;&lt;br/&gt;ஆரம்பகாலத்தில் நான் சந்தித்தது எல்லாமே கசப்பான அனுபவங்களதான். என்னால் புரிந்துக்கொள்ள முடியாததெல்லாம் தவறானவை என்று எண்ணம் கொண்டிருந்த மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த முயன்று சோர்ந்துபோயிருக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே சுமார் முப்பது இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுத்து எனக்குக் கீழே பணிக்கு அமர்த்தியபோது அவர்களுக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்றுக்கூட என்னால் தீர்மானிக்க முடியவில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;பிறகு என்னுடன் முன்பு கிளைகளில் பணியாற்றிய இளம் வங்கி அதிகாரிகளுள் சிலபேரை திரட்டி அவர்களுடன் பல வாரங்கள் அமர்ந்து எங்களுடைய வங்கியிலுள்ள நிர்வாக அலுவலகங்களுடைய தினசரி செயல்பாட்டை கணினி மயமாக்குவதென தீர்மானித்து வாரங்கள், மாதங்களாக சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு ப்ராஜக்ட் திட்டத்தை முழுமையாக தயாரிக்க முடிந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;இதோ ஐந்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. &lt;br/&gt;&lt;br/&gt;துவக்கத்தில் முப்பது பொறியாளர்களுடன் துவக்கப்பட்ட என்னுடைய இலாக்கா இன்று சுமார் நூறு பேர் கொண்ட இலாக்காவாக, என்னுடைய வங்கியின் மென்பொருள் தேவையில் அறுபது விழுக்காடு வரை நாங்களாக வடிவமைத்து தயாரித்து அளிக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் என்னுடன் இணைந்து பணிபுரிந்த என்னுடைய இளயை நண்பர்கள துவக்கக் காலத்தில் அவர்களுக்கு கிடைத்த ஏமாற்றங்களையும், சோதனைகளையும் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டதுதான் காரணம். &lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய முயற்சிகள் வெற்றிபெறும் சமயங்களில் அளவு கடந்த மகிழ்ச்சியில் தலைகால் தெரியாமல் ஆடுவதும் தோல்வியுறும் சமயங்களில் அதல பாதாளத்துக்கு சென்றுவிடுவதும் நல்லதல்ல.&lt;br/&gt;&lt;br/&gt;நம்முடைய அனுபவங்கள் நமக்கு பாடமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அப்போதுதான அவை நம்மை வலுவுள்ளவர்களாக்கும்.&lt;br/&gt;&lt;br/&gt;****&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116477754739353323?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116477754739353323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_29.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116477754739353323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116477754739353323'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_29.html' title='நம்முடைய அனுபவங்கள்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116468968139142761</id><published>2006-11-28T10:24:00.000+05:30</published><updated>2006-11-28T10:24:41.633+05:30</updated><title type='text'>காதலில் நம்பிக்கை அவசியம்!</title><content type='html'>‘காதலும்&amp;nbsp;&amp;nbsp;நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.’&lt;br/&gt;&lt;br/&gt;காதல் என்பது காதலனுக்கும் காதலிக்கும் இடையில் உள்ளது மட்டுமல்ல.&lt;br/&gt;&lt;br/&gt;கணவன், மனைவி, தந்தை, மகன்/மகள், நண்பர்கள் என எல்லா உறவுக்குமே காதல் பாலமாக அமைகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;அத்தகைய காதலால் உருவாகும் நட்புக்கும், உறவுக்கும் பரஸ்பர நம்பிக்கை அடித்தளமாக அமைய வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;நம்பிக்கையில்லாத நட்பும் உறவும் வெறும் மேலோட்டமான, உடல் சம்பந்தப்பட்ட, செயற்கையான, உள் நோக்கம் கொண்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது.&lt;br/&gt;&lt;br/&gt;மேலை நாடுகளில் ஏன் நம் இந்தியாவிலும் கூட சமீப காலமாக திருமண உறவுகளில் விரிசல் ஏற்பட முதன்மைக் காரணமாக இருப்பது இந்த நம்பிக்கையற்றத்தனம்தான் என்றால் மிகையாகாது.&lt;br/&gt;&lt;br/&gt;பைபிளில் வருகின்ற ஒரு வாக்கியத்தை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.&lt;br/&gt;&lt;br/&gt;‘மலையை அசைக்கவல்ல நம்பிக்கை இருந்தும் உன்னிடம் அன்பில்லையென்றால் பயனில்லை..’&lt;br/&gt;&lt;br/&gt;இது எதைக் காட்டுகிறது?&lt;br/&gt;&lt;br/&gt;‘உன் மீது நான் அன்பு கொண்டிருக்கிறேன். ஆனால் உன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ எனக்கு துரோகம் செய்கிறாய் என்று நினைக்கிறேன்.’ என்று காதலன் தன் காதலியிடமோ அல்லது கணவன் தன் மனைவியிடமோ கூறினால் அந்த உறவு நிலைத்திருக்க முடியுமா?&lt;br/&gt;&lt;br/&gt;அந்த உறவில் காதல், அன்பு இருக்கத்தான் முடியுமா?&lt;br/&gt;&lt;br/&gt;நான் உன்மீது வைத்திருக்கும் காதல் முழுமையானது ஆனால் நம்பிக்கை? அது சந்தர்ப்ப சூழலைப் பொறுத்தது. அப்படியென்றால் அந்த காதலும் அதே சூழலைப் பொறுத்ததுதான் என்று பொருளாகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;நட்பிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம்.&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு குடும்பத்தில் அமைதியும், சமாதானமும், சந்தோஷமும் நிலைத்து நிற்க குடும்பத்தினரிடையில் பரஸ்பர நம்பிக்கை எந்த அளவுக்கு அவசியமோ அதே போன்ற ஏன் அதற்கும் மேலான அளவு நம்பிக்கை ஒரு நிறுவனம் சிறப்பாக பரிணமிக்க அவசியமாகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;தனக்குக் கீழே பணிபுரிகிறவர்களுக்கு தேவைப்படும் அதிகாரத்தை வழங்க அவர்களுடைய தலைவருக்கு அவர்கள் மீது முழு நம்பிக்கை மிக, மிக அவசியமல்லவா?&lt;br/&gt;&lt;br/&gt;அவர்களை நம்பாமல் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்துக்கொள்ளும் அதிகாரிக்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் விசுவாசத்துடன் உழைப்பார்கள் என்று நாம் அனுபவித்து உணர்ந்ததுதானே?&lt;br/&gt;&lt;br/&gt;‘இந்த காலத்து ஆண் பிள்ளைகளை நம்ப முடியாது. அதனால அவனுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கறதுக்குள்ள அவன் சம்பாத்தியத்துல நமக்குன்னு தேவையானத சேர்த்து வச்சிக்கணும்.’ என்று சிந்திக்கும் பல பெற்றோர்களை திருமணம் முடிந்தவுடன் கைவிட்டு விட்டு செல்லும் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன்.&lt;br/&gt;&lt;br/&gt;‘நான் இப்படி செய்வேன்னு நினைச்சித்தான இதுவரைக்கும் நான் சம்பாதிச்சு குடுத்தத சேர்த்து வச்சிக்கிட்டீங்க? இப்ப அதையே வச்சிக்கிட்டு சந்தோஷமா இருங்க.. நான் எதுக்கு?’ என்று மகன் கேட்டால் அது நியாயந்தானே?&lt;br/&gt;&lt;br/&gt;காகித மலர்களில் வாசத்தை எதிர்ப்பார்த்துப் பயனில்லை..&lt;br/&gt;&lt;br/&gt;நம்பிக்கையில்லாத உறவுகளும் நாளடைவில் கசங்கி கிழியத்தான் செய்யும்..&lt;br/&gt;&lt;br/&gt;*******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116468968139142761?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116468968139142761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116468968139142761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116468968139142761'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_28.html' title='காதலில் நம்பிக்கை அவசியம்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116460382210176329</id><published>2006-11-27T10:33:00.000+05:30</published><updated>2006-11-27T10:33:42.916+05:30</updated><title type='text'>மற்றவர்களைப் பற்றி நம் கருத்து</title><content type='html'>‘மற்றவர்களைப் பற்றி நாம் என்ன நினைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. நம்மைப் பற்றி அவர்கள் நல்லவிதமாய் நினைக்கவேண்டுமெனில் நாம் அவர்களைப் பற்றி அதே முறையில் நினைக்கவேண்டும்.’&lt;br/&gt;&lt;br/&gt;தினை விதைப்பவன் தினையையும் வினை விதைப்பவன் வினையையும் அறுப்பான் என்பது பண்டைய மொழி.&lt;br/&gt;&lt;br/&gt;நீ எந்த அளவையால் அளக்கிறாயா அதை அளவையால்தான் உனக்கும் அளக்கப்படும் என்கிறது பைபிள்.&lt;br/&gt;&lt;br/&gt;இதை எல்லா சமயங்களுமே வலியுறுத்துவதை நாம் பார்க்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;நான் நல்லவன் என்பது எத்தனை உண்மையோ அதே போன்றுதான் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களும் என்பதை நாம் பல நேரங்களில் உணர்வதில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;நான் மட்டுமே நல்லவன் என்கின்ற மனப்போக்கு நம்மில் பலரிடமும் உள்ளதை நம்முடைய அன்றாட வாழ்விலே பார்க்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;பிறரை அவர்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கப்படும் வரை அவர்கள் தீயவர்களே என்ற கண்ணோட்டமும் நம்மில் பலரிடமும் காணப்படுகிறது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.&lt;br/&gt;&lt;br/&gt;The Law treats everyone innocent until proved otherwise. But the law enforcing authorities think otherwise. They feel everyone is guilty until proved otherwise. &lt;br/&gt;&lt;br/&gt;சட்டத்தின் பார்வையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதிகளே.. ஆனால் அச்சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடைய பார்வையோ இதற்கு நேர் எதிரானது. அவர்களைப் பொருத்தவரை எல்லோரும் குற்றவாளிகளே அவர்கள் நிரபராதிகள் என நிரூபிக்கப்படும்வரை.&lt;br/&gt;&lt;br/&gt;நம்மில் பலரும் பல சமயங்களில் இவ்வாறே நினைக்கிறோம், நடக்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;ஏழை என்றால் அவன் கள்வன், பணம்படைத்தவன் களவில் ஈடுபடமாட்டான் என்பது நாமாகவே கற்பித்துக்கொள்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;களங்கமில்லா மனதுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களை, நம்மைச் சார்ந்திருப்பவர்களைக் காணக் கூடிய மனப்பக்குவம் வரவேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;நண்பர்களை, உறவுகளை அவர்களுடைய எல்லா குற்றங்குறைகளுடன் ஏற்றுக்கொள்ள நம்மை நாமே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;எதையும் எதிர்பார்க்காத நட்பிலும் உறவிலும் எவ்வித ஏமாற்றங்களும், அபிப்பிராய பேதங்களும் இருப்பதில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;அப்படிப்பட்ட நட்பும், உறவுமே தலைமுறைக்கும் நீடித்திருக்கும்.&lt;br/&gt;&lt;br/&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116460382210176329?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116460382210176329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116460382210176329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116460382210176329'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_27.html' title='மற்றவர்களைப் பற்றி நம் கருத்து'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116434420675658215</id><published>2006-11-24T10:26:00.000+05:30</published><updated>2006-11-25T11:51:27.300+05:30</updated><title type='text'>Differently abled!</title><content type='html'>சிங்கத்திற்கு வாலாய் இருப்பதைவிட எலிக்கு தலையாய் இருப்பது மேல்.&lt;br/&gt;&lt;br/&gt;என்னுடைய இளைய மகள் சுமார் மூன்று மாத காலமாக சென்னையிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார்.&lt;br/&gt;&lt;br/&gt;அந்நிறுவனத்தில் அவளுக்கு கிடைத்த சில அனுபவங்கள் அவளுடைய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.&lt;br/&gt;&lt;br/&gt;எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் அவள் இப்போதெல்லாம் கோபப்படுவதைக் கட்டுப்படுத்த&amp;nbsp;&amp;nbsp;முயல்வது நன்றாகவே தெரிகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;எனக்கு அது இல்லை இது இல்லை என்று சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் சோர்ந்து போகும் அவள் இப்போதெல்லாம் தனக்கு இருப்பதே அதிகம் என்று சிந்திக்க துவங்கியிருப்பதும் தெரிகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;ஏன்? அப்படியென்ன அனுபவங்கள் என்னுடைய மகளை மாற்றியிருக்க முடியும்?&lt;br/&gt;&lt;br/&gt;அவள் பணியாற்றிய அந்த நிறுவனத்தின் சிறப்பம்சம் அங்கு பணிபுரியும் ஊழியர்களில் சுமார் முப்பத்து விழுக்காடு உடல் ஊனமுற்றவர்கள். &lt;br/&gt;&lt;br/&gt;ஆங்கிலத்தில் முன்பெல்லாம் Disabled என்று குறிப்பிடப்பட்ட இவர்களை சமீப காலமாக மிகவும் பொருத்தமாக Differently abled என்று சொல்கிறார்கள்!&lt;br/&gt;&lt;br/&gt;ஆம். உடலில் சில ஊனங்களை இவர்களுக்கு கொடுத்த இறைவன் அதனை ஈடுகட்டும் விதமாக அபிரிமிதமான ஆற்றலை அள்ளிக் கொடுத்திருக்கிறான் என்றால் மிகையாகாது.&lt;br/&gt;&lt;br/&gt;அவர்களுடன் சேர்ந்து பழகி, பணியாற்றிய என்னுடைய மகளுடைய அனுபவம்தான் அவளை பெருமளவு மாற்றியிருக்கிறது!&lt;br/&gt;&lt;br/&gt;அந்நிறுவனத்திற்கு நானும் பலமுறை சென்றிருக்கிறேன். துவக்கத்தில் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இத்தகையோர் பலரைப் பார்த்து சற்றே கலக்கமுற்ற எனக்கு இப்போது பழகிப் போனது. &lt;br/&gt;&lt;br/&gt;‘அவங்க நம்ம கிட்டருந்து எதிர்பார்க்கிறது அனுதாபத்தையில்லப்பா.. சமமான ட்ரீட்மெண்ட்ட.’ என்பாள் என் மகள்.&lt;br/&gt;&lt;br/&gt;உண்மைதான். அங்கீகாரத்தையுமல்ல. சமமான, தோழமையான நட்பை.&lt;br/&gt;&lt;br/&gt;‘அவங்களோடல்லாம் நம்மள கம்பேர் பண்ணவே முடியாதுப்பா. அவ்வளவு ஷார்ப் அவங்க. கைவிரல்கள வச்சிக்கிட்டு அவங்களுக்குள்ள பேசி, சிரிச்சி, எங்க எல்லாரையும் கலாய்க்கிறப்ப ஆச்சரியமா இருக்கும்ப்பா..’ என்றாள் இன்னொரு நாள்..&lt;br/&gt;&lt;br/&gt;உண்மைதான்.. தங்களுடைய நிலையை ஒரு குறையாக நினைக்காமல் அதையே ஒரு வலுவாக மாற்றிக்கொண்டவர்கள் அவர்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;மென்பொருளில் அடிப்படை படிப்பு இல்லாத இத்தகையோர் பலரையும் பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு தேவையான பயிற்சியும் கொடுத்து நல்லதொரு வாழ்க்கையை கொடுத்துள்ள அந்நிறுவனத் தலைவரை எத்தனை போற்றினாலும் தகும்.&lt;br/&gt;&lt;br/&gt;அந்நிறுவனத்திலிருந்த ஒருவர் வேறொரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் கூடுதல் ஊதியத்தில் வேலை கிடைத்து சென்று சில நாட்களிலேயே அங்கிருக்க விரும்பாமல் திரும்பி வந்தபோதும் எந்த வருத்தமுமில்லாமல் மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது?&lt;br/&gt;&lt;br/&gt;அப்படித் திரும்பி வந்தவர் கூறிய வார்த்தைகள்தான் இன்றைய சிந்தனையின் கரு: சிங்கத்திற்கு வாலாய் இருப்பதை விட எலிக்கு தலையாய் இருப்பது மேல்!&lt;br/&gt;&lt;br/&gt;உண்மைதானே?&lt;br/&gt;&lt;br/&gt;அந்நிறுவனத்தில் நம்முடைய தமிழ்மண நண்பர் ஒருவரும் பணியாற்றுகிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116434420675658215?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116434420675658215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/differently-abled.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116434420675658215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116434420675658215'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/differently-abled.html' title='Differently abled!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116426091344731842</id><published>2006-11-23T11:16:00.000+05:30</published><updated>2006-11-23T11:18:33.466+05:30</updated><title type='text'>வாழ்க்கை லட்சியம்!</title><content type='html'>&lt;strong&gt;‘புலரும் ஒவ்வொரு பொழுதும் நாம் இழந்துவிட்டதை மீண்டும் அடைய ஒரு புது வாய்ப்பு!’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லட்சியங்களும் இருக்கும்!!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிலருக்கு லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மூன்று வயது சிறுவனை அவனுடைய தாய் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். சிறுவன் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்ததும், ‘அம்மா நான் பெரியவனானதும் கண் டாக்டராகப் போகிறேன்.’ என்கிறான். தாய் தன் மகனுடைய லட்சியத்தை செவியுற்று மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். வருகின்ற வழியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்துவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடக்கையில் மகன், ‘அம்மா நான் பெரியவனானதும் கண்டக்டராகப் போகிறேன்.’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய வயதும் அனுபவமும் அதிகரிக்க, அதிகரிக்க, நம்முடைய பார்வையின் கோணமும், ஆழமும் மாறத்தான் செய்கின்றன. இல்லையென்று சொல்வதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த மாற்றம் நம்முடைய வாழ்க்கையின் போக்கை அடியோடு புரட்டிப் போட்டுவிட நாம் அனுமதிக்கலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;கள்வனைப் பார்த்து கள்வனைப் போலானால் என்ன என்றும் காவலனைப் பார்த்து காவலானானால் என்ன என்றும் நினைத்தால் அது ஒன்றுக்கொன்று முரணான பார்வையாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய லட்சியம் ஒன்றே ஒன்றுதான்..&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவென்பதைக் குறித்த காலத்தில் கணித்துக்கொண்டு அந்த இலக்கை நோக்கியே நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நகர்வும் அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சியத்தையடைய நாம் வகுத்திருக்கும் பாதைகள் மாறலாம், ஆனால் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய தவறான பாதையால், அணுகு முறையால் தோல்விகளை, சரிவுகளைச் சந்திக்க நேரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம்முடைய லட்சியப்பயணத்தில் சோர்வோ, தயக்கங்களோ அல்லது தடுமாற்றங்களோ இருக்கலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இல்லையேல் நாளை, நாளையில்லையேல் மறுநாள்..&lt;br /&gt;&lt;br /&gt;புலரும் ஒவ்வொரு பொழுதும் நமக்கு புதுப்புது வாய்ப்புகளை ஏற்படுத்தும் யுகங்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;புலரும் ஒவ்வொரு நாளும் எப்படி மடிகிறதோ அதுபோன்றே தோல்விகளும், சரிவுகளும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சரிவு முடிவடையும் இடத்திலிருந்து மற்றொரு உயர்வு ஆரம்பமாகிறது என்பதையும் மறக்கலாகாது..&lt;br /&gt;&lt;br /&gt;புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116426091344731842?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116426091344731842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116426091344731842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116426091344731842'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_23.html' title='வாழ்க்கை லட்சியம்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116408606504672120</id><published>2006-11-21T10:36:00.000+05:30</published><updated>2006-11-21T11:11:40.623+05:30</updated><title type='text'>வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்!</title><content type='html'>&lt;strong&gt;‘உலகில் வல்லவர்களும் நல்லவர்களும் வாய் மூடி மெளனியாக இருப்பதால்தான் வாய்ச் சவடால் பேர்வழிகளும் தீயவர்களும் பலுகிப் பெருகி வருகிறார்கள்.’&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இது இருபத்தியோரு நூற்றாண்டின் நிதர்சனம் என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நம் நாட்டுக்கு மட்டும் பொருத்தமானதல்ல. அகில உலகத்துக்கும் மிகவும் பொருத்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது இப்போதெல்லாம் பரவலாகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வெளிவரும் திரைப்படங்களும் இத்தகையோரைத்தானே வெளிச்சமிட்டு காட்டுகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய அலுவலகங்களிலும், சமுதாயத்திலும் இத்தகையோரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பலுகிக்கொண்டே போகிறது என்றாலும் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும், அழுகின்ற குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும் என்பது பண்டைய மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நம்மைப் பற்றி, நம்முடைய அறிவாற்றலைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி நாம்தான் எடுத்துரைக்க வேண்டும், அதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதும்&lt;br /&gt;நமக்கு தேவையுள்ளதை நாம்தான் கேட்டுப் பெறவேண்டும் நாம் வாய் மூடி மவுனியாக இருந்தால் நம்முடைய தேவைகளை அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தெரியாமலே போய்விடும் என்பதும்தான் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்விரண்டு பழமொழிகளையும் நன்றாக புரிந்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் நம்முடைய முன்னோர் எண்ணியிருந்த வல்லவர்களும், நல்லவர்களும் அல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக வாய்ச்சவடால் பேர்வழிகளும் தீயவர்களும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாயுள்ள பிள்ளை என்பவன் இன்று உரக்க பேசுபவன் என்றும், தீய வார்த்தகைளை சரமாரியாக உதிர்ப்பவன் என்றும், கைகளில் வாளுடனும், பட்டாக்கத்தியுடனும், உருண்டு திரண்ட சவுக்கு தடிகளுடனும் சாலைகளிலும் சந்தைகளிலும் உலா வருபவன் என்றும் உருபெற்றிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுகின்ற குழந்தை என்பவன் இன்று என்ன நல்லது செய்தாலும் போறாது என்ற பேராசை மனப்பான்மையுடன் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அலைகின்றவனாய் மாறியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு மனப்பாண்மைக் கொண்டவர்களால் நல்ல திறமை படைத்த, நல்ல மனம் படைத்த வல்லவர்கள், நல்லவர்கள் இன்று சமுதாயத்தில் அடையாளம் தெரியாமல் மறைந்துப் போயிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தைகையோரை இணங்கண்டு வெளிக்கொண்டுவருவதே இன்றைய இளைய சமுதாயத்தின் தலையாயப் பணியாயிருக்க வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் வீடும், நாடும் ஏன் இவ்வுலகமே உயர்வு பெறும்!&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116408606504672120?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116408606504672120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_21.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116408606504672120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116408606504672120'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_21.html' title='வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116399865105744357</id><published>2006-11-20T10:25:00.000+05:30</published><updated>2006-11-20T10:27:31.073+05:30</updated><title type='text'>நம்மால் முடியும்!</title><content type='html'>&lt;strong&gt;‘நம்மில் பலருடைய வாழ்விலும் ‘முடிக்க முடிந்தது’ என்பதை விட ‘முடித்திருக்க முடியும்’ என்பதுதான் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறது.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;என்னுடைய வாழ்க்கையையும் திரும்பிப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய தகுதிக்கும், திறமைக்கும் உட்பட்ட பல காரியங்களிலும் கூட, அதாவது அவற்றை வெற்றிகரமாக முடிக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் எனக்கு கிடைத்தும் கூட ஏதோ ஒரு காரணத்திற்காக  அவற்றைத் தவற விட்டிருப்பது இப்போது தெளிவாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்று அலசிப் பார்ப்பதை விட அப்படிப்பட்ட சூழலில் நான் இனி என்ன செய்யப் போகிறேன் என்று சிந்திப்பதுதான் இனி அப்படியொரு நிலமை ஏற்படாமலிருக்க சிறந்த வழி என்று எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் also ran, என்பார்களே அதுபோல ஒரு ஓட்டப் பந்தயத்தில் எட்டு பேர் கலந்துக்கொண்டாலும் ஒருவரால் மட்டுமே முதலில் வந்து கோப்பையைத் தட்டிச் செல்ல முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று. Could have run என்பவர்களை விட Also ran என்பவர்கள் எவ்வளவோ மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்க முடியும் என்பவர்கள் வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள். நானும் ஓடினேன், அல்லது நானும் முயற்சி செய்தேன் என்பவர்கள் குறைந்த பட்சம் இறுதி போட்டியில் கலந்துக் கொண்டார்கள் என்பதாவது உண்மை..&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய வாழ்க்கையையும் திரும்பிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கக் கூடிய எத்தனைச் சந்தர்ப்பங்களை நம்முடைய தவறுகளால், அல்லது ஆணவத்தால், அல்லது அளவுகடந்த நம்பிக்கையால் தவற விட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய விளையாட்டு வீரர்களை, குறிப்பாக நம்முடைய கிரிக்கெட் அணியைக் குறித்து சொல்லக் கேட்டிருக்கிறோம்.. Capable of snatching defeat from the jaws of success என்று..&lt;br /&gt;&lt;br /&gt;எளிதில் வெற்றிப் பெறக் கூடிய பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தோல்வியைத் தழுவ என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;அளவுகடந்த தன்னம்பிக்கையினாலா, ஆணவத்தாலா அல்லது மனித இயல்பான தவறுகளாலா?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவேன் அல்லது வெற்றி பெற்றே தீருவேன் என்ற உறுதியான முடிவுடன் அதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றிற்கெல்லாம் நம்மை நாமே தயாரித்துக்கொண்டு ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்..&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய கடந்த கால தோல்விகளுக்கு காரணமாயிருந்தவை எவை என்பதை ஆராய்ந்து அவற்றை நம்மால் இயன்றவரைத் தவிர்த்தாலே போதும் எதிர்வரும் காலத்தில் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி உறுதி!&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116399865105744357?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116399865105744357/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116399865105744357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116399865105744357'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_20.html' title='நம்மால் முடியும்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116382590255641605</id><published>2006-11-18T10:27:00.000+05:30</published><updated>2006-11-18T22:41:42.133+05:30</updated><title type='text'>அழியா செல்வம்!</title><content type='html'>‘உலகின் மிகப் பெரிய செல்வந்தனும் ஏழைதான்.. உள்ளத்தில் அன்பு இல்லாவிட்டால்...’&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் செல்வங்கள் உறவைத் தருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே புதிய உறவுகளை ஏற்படுத்தினாலும் அவை நிலைத்து நிற்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை பணம் போனால் பந்துக்களும் பறந்துபோகும் என்பதும்.&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தால் ஏற்படும் பந்தம் பணம் இருக்கும்வரைதான். பாசத்தால் ஏற்படும் பந்தமோ பத்து தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;‘நீ உலகையே தனதாக்கிக் கொண்டாலும் உன் ஆன்மாவை இழந்துவிட்டால் என்ன பயன்?’ என்றார் கிறித்துவ புனிதர் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மாவையே இழந்துவிடுவதென்றால் அன்பு இல்லாத, பாவ சிந்தனைகள் நிறைந்த உள்ளம்.. அது இருந்தென்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆணவம் பிடித்த மனிதனிடத்தில் அன்பை எப்படி எதிர்பார்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;பிறருடைய வெற்றியைச் சகித்துக்கொள்ள இயலாத ஒரு மனிதனிடத்தில் அன்பை எப்படி எதிர்பார்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;பணம் பாதாளம்வரை பாயும் என்பது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு இல்லாத பணம் படைத்த மனிதன் மரணத்திற்குப் பிறகு செல்லும் இடமும் பாதாளம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த அன்னைத் திரேசா ஏழை எளியவர்கள் மீது மாளா அன்பு கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய ஆசிரமத்தைத் துவங்கிய சமயத்தில் அவரிடம் பணம் இருக்கவில்லை, நிம்மதியாக வசிக்க இடம் இருக்கவில்லை. ஆனால் அவருடைய உள்ளத்தில் அன்பு நிறைந்து வழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அன்புதான் கொல்கொத்தா வணிகர்கள், செல்வந்தர்கள் ஏன் அவருடைய அலுவலிலே இடைஞ்சலாயிருந்தவர்களுடைய கடின மனதையும் கரைத்தது..&lt;br /&gt;&lt;br /&gt;பொருளில்லார்க்கு இல்லை இவ்வையகம் என்றான் வள்ளுவன்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அன்பில்லார்க்கு இல்லை சொர்க்கம், மறுவாழ்வு!&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் நிரந்தர உண்மை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116382590255641605?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116382590255641605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116382590255641605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116382590255641605'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_18.html' title='அழியா செல்வம்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116374204744107227</id><published>2006-11-17T11:06:00.000+05:30</published><updated>2006-11-17T11:10:48.806+05:30</updated><title type='text'>உங்க தயவை விரும்பவில்லை=உதவி!</title><content type='html'>&lt;strong&gt;‘மகிழ்ச்சியோடு நாம் பிறருக்கு செய்யும் உதவி நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையிலிருந்து திரும்பி நம்மிடமே வந்து சேரும்.’&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த அவசர உலகத்தில் நம்முடைய தேவைகளையே பூர்த்தி செய்ய நமக்கு அவகாசம் இல்லாதபோது பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;இது நம்மில் பலரும் கேட்கும் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே சமயம் நமக்கு தேவை என்று தோன்றும்போது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் யாராயிருந்தாலும் உதவி கேட்க தயங்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயங்களில் நாம் உதவி கோரும் நபர் தன்னுடைய இயலாமையை பணிவுடன் தெரிவித்தாலும் அதை நாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுமுதல் அவரை நம்முடைய ஜன்ம விரோதியாக பாவிக்கத் துவங்கிவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மனித இயல்புதான். இல்லையென்று மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது நம்முடைய சமுதாயத்தில் நான் மிகச் சாதாரணமாக காணும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களில் ஒரே குடியிருப்பில் வசிக்கும் பல நூறு குடும்பங்கள் தனித்தனி தீவுகளாக வசிப்பதைப் பார்த்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தற்போது வசிக்கும் குடியிருப்பிலும் இதே நிலைதான். இந்தியாவிலுள்ள சகல மொழி பேசுபவர்களும் இங்கு வசிக்கின்றோம். நான் புதிதாக குடியேறிய சமயத்தில் நான் வசிக்கும் தளத்தில்  குடியிருந்தவர்களிடம் நானாக வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போதும் என்னை ஏதோ அயல் கிரகத்திலிருந்து வந்தவனைப் போன்று பார்த்தவர்கள்தான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துப் பேசினால் எங்கே உதவி கேட்டு வந்து நிற்பாரோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி செய்பவர்கள் தங்களுக்கும் பிறருடைய உதவி தேவைப்படும் காலம் ஒன்று வரும் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த ஒருவருக்கு ஒரு நாள் விடியற்காலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு கையும் காலும் செயலிழந்துப் போனது. வீட்டில் மனைவியும் அவரும் மட்டுமே. ஒரேயொரு மகள். அண்டை மாநிலத்தில் பணிபுரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய மனைவியே அண்டையில் யாரிடமும் உதவி கோராமல் அப்போலோ மருத்துவமனைக்கு தொலைப்பேசி செய்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் சயரன் ஒலியுடன் வாசலில் வந்து நின்றபோதுதான் குடியிருப்பிலிருந்த பலருக்கும் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ மனை ஊழியர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட்டுச் செல்வதை அடுத்த குடியிருப்பில் குடியிருந்தவர்கள் முதல் ஜன்னல் வழியாக பார்த்தவாறு நின்றிருந்தனரே தவிர யாரும் வெளியில் வந்து என்ன ஏது என்று விசாரிக்க முன் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைச் சந்திக்க நானும் என் மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோதுதான் தெரிந்தது அவருடைய மனைவி, கணவன் வலியால் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்ன பாடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏன் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்துவிட்டீர்கள்?’ என்றேன். அதற்கு ‘எதுக்கு சார்? கேட்டாலும் யாரும் உதவி பண்ண வரமாட்டாங்கன்னு தெரியும். அதான் எதுக்குன்னு விட்டுட்டோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நீண்ட கால நண்பர், சென்னை வாசி ஒருமுறை வேடிக்கையாகக் கூறினார். ‘சார் இங்க நீங்களா போய் உதவி செஞ்சாக் கூட ஏத்துக்கமாட்டாங்க. இவன் எதுக்கோ அடி போடறான்னு நினைப்பாங்க. இங்க உதவிங்கற வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம்  இருக்கு.  அதாவது &lt;strong&gt;உ&lt;/strong&gt;ங்க &lt;strong&gt;த&lt;/strong&gt;யவை &lt;strong&gt;வி&lt;/strong&gt;ரும்பவில்லை! அதனால நம்ம வேலைய பாத்துக்கிட்டு போறதுதான் சேஃப்.’&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை பாருங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116374204744107227?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116374204744107227/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116374204744107227'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116374204744107227'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_17.html' title='உங்க தயவை விரும்பவில்லை=உதவி!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116366119967979990</id><published>2006-11-16T12:42:00.000+05:30</published><updated>2006-11-16T14:12:17.236+05:30</updated><title type='text'>புகழ்ச்சியும் இகழ்ச்சியும்!</title><content type='html'>‘நம்மில் பலரும் புகழில் மட்டுமே பங்குகொள்ள விரும்புகிறோம்.. இகழ்வில் அல்ல.’&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு செயலிலும் தனி நபராக ஈடுபடுவதைவிட ஒரு குழுவாக பலருடன் இணைந்து ஈடுபடுவது சற்று சிரமம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தனியாக செயல்படுகையில் நம்முடைய மனதில் உருவகப்படுத்தியிருப்பதை அப்படியே செயல் வடிவில் கொண்டு வந்துவிட இயலும். சற்று சிரமம்தான் என்றாலும் அதே குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில விஷயங்களில் அது இயலாமற் போய்விடுகிறது. குறிப்பாக நம்முடைய அலுவலகங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழ்நிலைகளில் குழுவாக செயல்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலவிதமான பின்னணிகளிலிருந்து வரும் பலதரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட நபர்கள் அடங்கியுள்ள எந்த குழுவிலும் கருத்து பேதங்கள் இருக்கத்தான் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழுவினருக்கு முன்னேயுள்ள இலக்கை அடைவதுதான் அனைவருடைய நோக்கமாக இருந்தாலும் அவர்களுடைய  சிந்தனைகள், செயல்பாடுகளில் ஒற்றுமை அல்லது ஒருமித்த கருத்து இருப்பது அபூர்வம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;குழுவின் ஒட்டுமொத்த செயல்பாடு தோல்வியுறும் நேரத்தில் அதற்கு பொறுப்பேற்க யாருமே முன்வராததை பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே குழுவிலுள்ள வெகு சிலருடைய உழைப்பால் கிடைக்கும் வெற்றியில் பங்குக்கொள்ள குழுவிலுள்ள அனைவருமே முண்டியடிப்பதையும் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியில் பங்குபெற விரும்பாத எவருக்கும் வெற்றியில் பங்குபெற உரிமையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடமைகள் இல்லாத பொறுப்புகள் இருக்க முடியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதுபோலவே தோல்விகளில்லாத வெற்றிகளும் இல்லை என்பதும் சத்தியமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அடையும் வெற்றி நம்முடைய உழைப்பால் மட்டும் கிடைத்ததல்ல என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமோ இல்லையோ நாம் அடையும் தோல்விகளுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்திருத்தல் மிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகளால் வரும் இகழ்வை தாங்கிக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே புகழ் தரும் பெருமையில் மயங்கிவிடமாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் நம்மைப் புகழும்போது விண்ணுக்கு உயராமலும் இகழப்படும்போது பாதாளம் அளவுக்கு சரியாமலும் இருக்கக் கூடிய வலுவான மனப்பக்குவமும் தன்னால் நமக்கு வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நினைவில்கொள்வோம்!&lt;br /&gt;&lt;br /&gt;If we want a share of the fame, we have got to be willing to take a share of the blame as well!&lt;br /&gt;******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116366119967979990?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116366119967979990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_16.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116366119967979990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116366119967979990'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_16.html' title='புகழ்ச்சியும் இகழ்ச்சியும்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116356598321977208</id><published>2006-11-15T10:14:00.000+05:30</published><updated>2006-11-16T13:18:44.913+05:30</updated><title type='text'>இளைய தலைமுறை!</title><content type='html'>&lt;strong&gt;‘நம்முடைய குழந்தைகளுக்கு முன்பு நாம் நல்லது செய்தாலும், தீயது செய்தாலும் அது அவர்களுடைய மனதில் ஆழமாய் பதிந்துவிடும்.’&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எல்லா தலைமுறையினருமே அவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறையினரைக் குறை கூறுவதிலேயே முனைப்பாயிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்னுடைய தாத்தா, தந்தை என்னுடைய தலைமுறையினரிடம் கண்ட அதே குற்றத்தையே நானும் இப்போது என்னுடைய மக்களிடத்தில் காண்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இனி வரும் எல்லாத் தலைமுறையினரும் பாடும் பாட்டாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்கு காரணம் யார் என்பதை நாம் அனைவருமே மறந்துபோகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய பெற்றோர்கள் நம்முடைய இளம் பருவத்தில் நம் கண்ணெதிரே பேசிய பேச்சு, செய்த செய்கைகள் இவைகளைத்தானே நாமும் நம்முடைய பிள்ளைகளுக்கும் எதிரில் பேசுகிறோம், செய்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய பெற்றோர்கள் பேசிய பேச்சும், செய்த செய்கைகளும் நல்லவைகளாய் இருந்திருந்தால் நாமும் நல்லதையே பேசி, நல்லதையே செய்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையே நம்முடைய பிள்ளைகளும் கடைப்பிடித்திருப்பார்கள். நாமும் நம்முடைய பெற்றோர்கள் செய்த தவறுகளையே செய்துவிட்டு நம்முடைய இளைய தலைமுறையனரை மட்டும் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று குறை காணுவதில் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏசு வாழ்ந்த காலத்தில் ஒருமுறை தன்னைக் காண வந்த இளஞ்சிறார்களை சீடர்கள் தடுத்து நிறுத்துவதைப் பார்த்து இவ்வாறு கூறுவார். ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் மோட்ச ராச்சியம் இத்தகையோரதே..’ மேலும் ‘இச்சிறார்களுக்கு யாரேனும் இடைஞ்சலாயிருந்தால் (அதாவது அவர்கள் வழிதவறிச் செல்ல காரணமாயிருந்தால்) அவர்களுடைய கழுத்தில் இயந்திரக் கல்லைக் கட்டி நடுக்கடலில் தள்ளவேண்டும்’ என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்..&lt;br /&gt;&lt;br /&gt;மாசு, மருவற்ற இளம் உள்ளங்களில் தவறான சிந்தனைகளை விதைப்பது அவர்களுக்கு விஷத்தை ஊட்டுவதற்கு சமம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய பெற்றோர்களுக்கு அவர்களுடைய வயதான காலத்தில் நாம் செய்வது: அது நல்லதாக இருந்தாலும் சரி, தீயதாக இருந்தாலும் சரி அதையேத்தான் நம்முடைய பிள்ளைகளும் நமக்குச் செய்வார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவெ இன்று முதல் நம்முடைய பிள்ளைகளுக்கு முன்பு நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116356598321977208?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116356598321977208/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_15.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116356598321977208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116356598321977208'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_15.html' title='இளைய தலைமுறை!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116348089660111722</id><published>2006-11-14T10:37:00.000+05:30</published><updated>2006-11-15T10:32:07.636+05:30</updated><title type='text'>நம்மால் பிறருக்கு ஏற்படும் பிரச்சினைகள்</title><content type='html'>‘நாம் பிறருடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு நாமே காரணமாக இல்லாமல் இருக்க வேண்டும்.’&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினைகளில் இரு வகை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று நமக்கு நாமே உண்டாக்கிக்கொள்ளும் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களுடைய நலன் இவற்றால் பாதிக்கப்படாதவரை இத்தகைய பிரச்சினைகளால் நமக்கு மட்டுமே தொல்லைகள், துன்பங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் உண்டாக்கப்படும் பிரச்சினைகளுக்கு நாமேதான் தீர்வு காண வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரண்டாவது வகை பிரச்சினை மற்றவர்களால் ஏற்படுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பிரச்சினைகளை நம்முடைய அலுவலகத்திலும் சரி குடும்ப வாழ்க்கையிலும் சரி அன்றாடம் சந்திக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தில் மனைவியால், மக்களால் ஏன் சில சமயங்களில் நம்முடைய பெற்றோர்களாலும்..&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒங்க வேலைய பார்த்துக்கிட்டு இருக்காம ஏம்மா அவ கிட்ட போய் வாய குடுத்து வாங்கிக் கட்டிக்கிறீங்க? இதுனால ஒங்களுக்கு மட்டுமா டென்ஷன், எனக்குந்தான்.. ஒங்க ரெண்டு பேரோட சண்டையால ஆஃபீசுக்கு போனாக் கூட எதுலயும் கவனம் செலுத்த முடியமாட்டேங்குது..’&lt;br /&gt;&lt;br /&gt;இது தினந்தோறும் காலை நேரங்களில் ஏறத்தாழ எல்லா கூட்டுக் குடும்பங்களிலும் கேட்கக்கூடிய வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டேய்.. காலேஜுக்கு போனமா வந்தமான்னு இல்லாம என்னடா இது தினம் ஒரு பிரச்சினைய வீட்டுக்கு கொண்டுவரே.. இருக்கற தொல்லை போறாதுன்னு ஒங்க பிரின்சிக்கிட்ட வேற வந்து நிக்கணுமாக்கும்?’&lt;br /&gt;&lt;br /&gt;இது தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் எல்லா தகப்பன்களுக்கும் அடிக்கும் லெக்சர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏங்க ஒங்கக்கிட்ட எத்தன தரம் சொல்லியிருக்கேன். மத்தவங்க விஷயத்துல தலையிடாதீங்கன்னு.. ஒங்களால எனக்குதான் கெட்ட பேர்.’ இது மனைவியர் கணவன்மாருக்கு கொடுக்கும் டோஸ்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நாம் எல்லோருமே சில நேரங்களில் மற்றவர்களுக்கு பிரச்சினைகளாகவே இருக்கிறோம்..&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளாவது பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அலுவலகங்களில் ஏற்படும் போட்டி பொறாமைகளால் ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்தும் பிரச்சினைகள் இருக்கிறதே..&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;அது சில சமயங்களில் மிகவும் மோசமான விளைவுகளையும், பாதிப்புகளையும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திவிடுவதை பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய அலுவலக அனுபவத்தில் ஒரு சிலருடைய வக்கிரமங்களால் பலரும் தங்களுடைய நிம்மதியை இழந்து தவிப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் நம்மால் இயன்றவரை தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் இயன்றவரை மற்ற எவருக்கும் பிரச்சினையாக இல்லாமலிருக்க இன்று முதல் முயற்சி செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116348089660111722?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116348089660111722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_14.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116348089660111722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116348089660111722'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_14.html' title='நம்மால் பிறருக்கு ஏற்படும் பிரச்சினைகள்'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116339396879066243</id><published>2006-11-13T10:27:00.000+05:30</published><updated>2006-11-14T10:37:09.933+05:30</updated><title type='text'>நம்முடைய கடமையைச் செய்வோம்!</title><content type='html'>‘நாம் தினமும் ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை வழிபடவேண்டும் என்று இல்லை. அதை எந்த மதமும் வலியுறுத்துவதுமில்லை!’&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் ஒரு முறை தன்னை அன்றாடம் அழைக்கும் பக்தன் ஒருவனை சந்திப்பதென முடிவு செய்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பக்தனோ அன்று இரவு முழுவதும் கண்விழித்து பணியாற்ற வேண்டிய இரவு ஷிப்ட்டில் படு பிசியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் அவன் முன்னால் நின்று பார்த்தார், பக்கத்தில் நின்று பார்த்தார், பின்புறம் நின்று பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹுஹும்.. பக்தன் தன்னுடைய கர்மமே கண்ணாயிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கு மிகவும் ஏமாற்றமாகிப் போனது. அவனுக்கு மறைவாய் இருந்தபோது தன்னை அன்றாடம் அழைத்தவன் அருகில் வந்து நின்றும் கண்டுக்கொள்ள மாட்டேனென்கிறானே என்று நொந்துபோனார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அவன் ஓய்வாய் இருக்கையில் தன்னை அழைப்பான் போலிருக்கிறது என்று நினைத்தவாறு விண்ணகம் திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் விண்ணகம் சென்றடையும் வழியிலேயே பகதனின் அழைப்பு வந்தது. ‘என்ன?’ என்றார் இறைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சாரி சாமி.. நீங்க பக்கத்துல வந்து நின்னப்போ நா ரொம்ப பிசியா இருந்தேன்.. இப்பத்தான் ஓய்வு கிடைத்தது.’ என்றான் பக்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கு வியப்பு. ‘என்ன நான் பக்கத்தில் வந்து நின்றதைப் பார்த்தாயா?’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நான் உங்களைப் பார்த்தேன் என்பதும் ஆனால் உங்களிடம் நின்று பேசக்கூட முடியாமல் நான் வேலையில் கவனமாயிருந்தேன் என்றும் உமக்கு தெரியுமே.. பிறகு ஏன் என்னை கேட்கிறீர்?’&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் சிரித்தார். ‘உண்மைதான்.. உன்னைக் குறை கூற விரும்பவில்லை.. உன்னுடைய அலுவலில் கடமையே கண்ணாக இருப்பதன் மூலம் என்னுடன் உரையாடிக்கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன்னை சோதிக்கவே இப்படி கேட்டேன்.’&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்..&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய அனுதின அலுவல்களை, நம்முடைய கடமைகளை சரிவர செயலாற்றுவதன் மூலமாகவே நம்மால் இறைவனுடன் உரையாட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக நம்முடைய கடமைகளை புறக்கணித்துவிட்டு அனுதினமும் ஆலயத்தில் அமர்ந்து இறைவனே, இறைவனே என்று கூவுயழைப்பதில் இறைவனுக்கே விருப்பமில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்முடைய முன்னோர்கள்  கூறியிருப்பது இதைக் குறித்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே, கடவுளே என்று கூறுபவனெல்லாம் இறையரசில் நுழைந்துவிட மாட்டான் என்று உறுதியாக உங்களுக்கு கூறுகிறேன் என்று ஏசு கூறியதாக பைபிளிலும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிறித்துவ மதம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே இதைத்தான் வலியுறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116339396879066243?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116339396879066243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_13.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116339396879066243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116339396879066243'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_13.html' title='நம்முடைய கடமையைச் செய்வோம்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116322165169291335</id><published>2006-11-11T10:36:00.000+05:30</published><updated>2006-11-12T07:46:56.263+05:30</updated><title type='text'>தவறுகள்!</title><content type='html'>‘வாழ்க்கையில் நாம் அவ்வப்போது செய்யும் தவறுகள் நமக்கு பாடம் கற்பிப்பதுடன் மற்றவர்களுடைய தவறுகளையும் பொறுத்துக்கொள்ள உதவுகிறது.’&lt;br /&gt;&lt;br /&gt;தவறு செய்வது மனித இயல்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதுடன் மீண்டும் அதே தவறுகளை செய்யாமல் இருப்பதை இயல்பாக்கிக் கொள்வது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;தவறு செய்வது மனித இயல்பு என்பதை நாம் உணர்ந்துவிட்டால் போதும் பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்பது எளிதாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளிலும் இதைக் குறித்து ஒரு வாசகம் வருகிறது. ‘உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தை மறந்துவிட்டு உன் அயலான் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்க்காதே.’&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதானே..&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய தவறுகளால் நமக்கு ஏற்படும் இழப்பைத் தாங்கிக்கொள்வது நமக்கு எளிதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே பிறருடைய தவற்றால் என்றால் மட்டும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் மனித இயல்புதான். அப்படி நினைக்காமல் இருப்பதற்கு மிகுந்த மனப்பக்குவம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;அது போகப் போக, நம்முடைய வாழ்நாளில் கிடைக்கும் அனுபவங்களே நம்மை அத்தகைய பக்குவத்துக்கு இட்டுச் செல்லக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய மனப்பக்குவமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் அத்தனை விரிசல்களுக்கும் இத்தகைய மனப்பக்குவம் இல்லாமலிருப்பதே காரணம் என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பண்டைய காலத்து சொல் இப்போதும், இந்த 21ம் நூற்றாண்டிலும் பொருத்தமாக இருப்பதுதான் வேதனை, வெட்கக் கேடு.&lt;br /&gt;&lt;br /&gt;சுருங்கிக் கிடக்கும் நம்முடைய மனதை விசாலப்படுத்தி பிறருடைய தவறுகளைப் பொருத்துக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் பெற என்ன செய்ய வேண்டும் என்று நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திப்போமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116322165169291335?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116322165169291335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_11.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116322165169291335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116322165169291335'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_11.html' title='தவறுகள்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116313503050892980</id><published>2006-11-10T10:33:00.000+05:30</published><updated>2006-11-10T12:18:00.450+05:30</updated><title type='text'>இறுதி தீர்ப்பு</title><content type='html'>&lt;span style="font-family:Arial;"&gt;‘இன்று உங்களுடைய வாழ்நாளின் இறுதி நாள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த இருபத்தி நாலு மணி நேரத்தில் என்னவெல்லாம் செய்வீர்கள்?’&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பங்குகொண்ட ஒரு மனித வள மேம்பாட்டு கருத்தரங்கில் கேட்கப்பட்ட கேள்வி இது.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;அரங்கத்தில் என்னுடன் இருந்தவர்கள் வங்கித் துறையின் உயர் அதிகாரிகள். &lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;பலரும் பணியிலிருந்து ஓய்வு பெறும் தருவாயில் இருந்தவர்கள்.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;அவர்களில் பலர் அளித்த பதில்கள் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தன.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;ஒருவர் சொன்ன பதில் மட்டும் என் மனதில் அப்படியே பதிந்துபோனது.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;‘என்னுடைய முப்பதாண்டு கால அலுவலக வாழ்க்கையில் நான் எத்தனையோ நண்பர்களால் நிந்திக்கப்பட்டிருக்கிறேன். அவர்களையெல்லாம் மனமுவந்து மன்னிக்கிறேன். அதுபோன்றே நானும் பலரை நிந்தித்திருக்கலாம். அவர்களிடமெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குற்ற உணர்வு இல்லாத மனதுடன் இன்றைய நாளை முடித்திடுவதே என்னுடைய இறுதி விருப்பம்.’&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;மறப்பதும் மன்னிப்பதும் இறை இயல்பு என்பது உண்மைதான். ஆனால் அதை மனிதன் செயல்படுத்துகையில் இறைவனாகிறான்.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;உலக அழிவு என்பது நம் ஒவ்வொருவருடைய இறுதி நாளையே குறிக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;கிறிஸ்த்துவ சமயத்தில் இறுதி தீர்ப்பு உண்டு என்ற நம்பிக்கை உள்ளது.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;நாம் மரித்தவுடன் இறைவன் சன்னதியில் நிறுத்தப்பட்டு நம்முடைய வாழ்நாளிலே செய்த நல்லவை, தீயவை யாவும் அலசப்பட்டு தீர்ப்பிடப்படுவோம் என்று கிறிஸ்த்துவர்கள் நம்புகிறார்கள்.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;உன் வாழ்நாளில் உனக்கு தீங்கிழைத்த யாரையுமே நீ மன்னிக்க தயாராக இருக்கவில்லையே. நான் மட்டும் உன்னை எதற்கு மன்னிக்க வேண்டும் என்று இறைவன் கேட்கும் பட்சத்தில் நம்முடைய பதில் என்னவாயிருக்கும்?&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;********&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt; &lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116313503050892980?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116313503050892980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_10.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116313503050892980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116313503050892980'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_10.html' title='இறுதி தீர்ப்பு'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116304964881830408</id><published>2006-11-09T10:49:00.000+05:30</published><updated>2006-11-09T13:59:30.976+05:30</updated><title type='text'>தீர்வுகள்!</title><content type='html'>&lt;strong&gt;‘பிரச்சினைகளின் தீவிரம் நம்மை பாரமாய் அழுத்தும் சமயங்களில் எத்தனை முயன்றும் தீர்வு கிடைக்கவில்லையா? கவலைப்படுவதை விட்டு விட்டு சற்றே எட்ட நின்று அதை மற்றவர்களுடைய கண்ணோட்டத்தில் காண முயலவேண்டும். அதுவரை நம்முடைய அறிவுக்கு எட்டாத தீர்வு சட்டென்று நம் முன்னே தென்பட வாய்ப்புள்ளது.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;என்னுடைய அலுவலக வாழ்விலே பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயங்களில் எத்தனை முயன்றும் சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லையென்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என்ற நினைப்பிலேயே பிரச்சினைகளை மேலும் தீவிரப் படுத்தியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை வாழ்க்கையும் கவலைகளும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை இப்போது நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“துவக்கத்தில் சவாலாக தென்படும் பிரச்சினைகளே இறுதியில் நம்முடைய திறமையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன. தீர்வு காண முடியாத பிரச்சினைகள் என்று உலகில் ஒன்றுமே இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;நம் கண்முன்னே நிற்கும் பிரச்சினைகளை விட்டு சற்று நேரம் விலகியிருந்து பிரச்சினைகளை மட்டும் பாராமல் அதனுடன் தொடர்புடையவைகளை ஒரு விரிந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை நம்முடைய சிந்தனைக்கு புலப்படாதிருந்த தீர்வு நம் முன்னேயே இருப்பதை காண முடியும்..” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரச்சினையை தீர்க்க இயலாத சில தீர்வுகள் வேறு சில பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துவிடுவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அமெரிக்க நிறுவனம் பிரித்தெடுக்க முடியாத பசையை (Adhesive) உருவாக்க பல கோடி டாலர்களை செலவழித்து தோல்வியடைந்ததாம். அதாவது எத்தனை முயன்றும் பசை ஒட்டாமல் பிரிந்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் சட்டென்று இதையே நாம் ஒரு புதிய கண்டுபிடிப்பாக மாற்றலாமே என்றாராம். அப்படி தோன்றியதுதான் நாம் அன்றாடம் அலுவலகங்களில் உபயோகிக்கும் சதுர வடிவ மஞ்சள் நிற ஸ்டிக்கர்கள் (Sticker Pads).&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நம்முடைய ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கும் உரமிடுவதுதான் பிரச்சினைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை நாளடைவில் போரடித்துவிடும்..&lt;br /&gt;&lt;br /&gt;உடனடி தீர்வு (Instant solution) என்று எதுவுமில்லை. அதுபோலவே தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கிடைக்கும் வெற்றியளிக்கும் மகிழ்ச்சியை விட நம்முடைய ஆக்க பூர்வமான சிந்தனைகளைத் தூண்டிவிட்டு அதன் பயனாக நாம் அடையும் வெற்றி தரும் மகிழ்ச்சி கூடுதல் நிறைவை அளிப்பதுடன் அது நிரந்தரமானதும் கூட..&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116304964881830408?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116304964881830408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_09.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116304964881830408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116304964881830408'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_09.html' title='தீர்வுகள்!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116296355877111465</id><published>2006-11-08T10:53:00.000+05:30</published><updated>2006-11-10T10:34:14.790+05:30</updated><title type='text'>அன்பு எங்கே?</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;‘அன்பு ஒரு மந்திரக்கோலைப் போன்றது. அது திறவாத வாசல்களையும் திறக்கவல்லது. காது கேளாதவர்களும் ரசிக்கக் கூடிய இசை, முடவர்களையும் நடனமாட தூண்டும் தாளம், பார்வையிழந்தவர்களுக்கும் தெரியும் சூரிய உதயம்!’&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அன்பு என்பது நாம் மனத்தளவில் உணரக்கூடிய ஒன்று..&lt;br /&gt;&lt;br /&gt;அன்பில்லாதவர்க்கு இல்லை இவ்வையகம்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;மாணவ பருவத்தில் இதை பள்ளி வகுப்புகளில் கேட்டு, கேட்டு நம்முடைய மனம் மரத்துப் போனதாலோ என்னவோ அதன் உள்ளர்த்தம் என்ன என்பதே மறந்துப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் உடலில் மனம் என்பதே எங்கிருக்கிறதென்று தெரியாதபோது அதில் சுரக்கும் அன்பை எப்படி உணர்வது என்று கேட்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான அன்பு  என்பதே அரிதாகிப் போயிவிட்ட இக்காலத்தில் அதைப் பற்றி பேசுவது கூட ஒரு வீண் வேலை என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;Domestic violence Act நடைமுறைக்கு வந்த வெகு சில நாட்களிலேயே நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில் ஒரு கணவருக்கெதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி..&lt;br /&gt;&lt;br /&gt;இதில் விசித்திரம் என்னவென்றால் கிறித்துவர்கள் தங்களுக்கு முன்மாதிரியாக வரித்திருக்கிற சூசை-மரி (Joseph &amp; Mary) என்ற  தம்பதியரின் பெயரைத்தான் இவர்களுக்கும் சூடியிருக்கிறார்கள் இவர்களுடைய பெற்றோர்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு அழுக்காறு கொள்ளாது, ஆணவம் கொள்ளாது, தன்னலம் பேணாது, பிறர் குறை காணாது என்று சிறுபருவ முதலே பைபிளின் வார்த்தைகளைக் கேட்டு, கேட்டு வளர்ந்த பாரம்பரியத்திலிருந்து வந்த தம்பதியரே இச்சட்டத்தின் கீழ் தங்களுடைய தாம்பத்திய சச்சரவை தீர்க்க முனைந்திருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நாட்களில் ஆவேசத்தில் கணவனை சுட்டுக்கொன்ற பெண் காவல் நிலையத்தில் சரண் என்ற செய்தி!&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் எதைக் காட்டுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு இல்லாமல் போனதைத்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு மூன்றெழுத்து, காதல் மூன்றெழுத்து, நட்பு மூன்றெழுத்து என்று கலைஞர் அவர்கள் ஒரு விழாவில் அடுக்கிக் கொண்டே சென்றது நினைவுக்கு வருகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அடுக்கு மொழி பேச்சைக் கேட்கும்போது அரங்கமே கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு முடிந்து வீடு திரும்புகையில் கேட்டது மறந்துபோகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;மறதியும் மூன்றெழுத்துதானே..&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19861113-116296355877111465?l=vedhagamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vedhagamam.blogspot.com/feeds/116296355877111465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_08.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116296355877111465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19861113/posts/default/116296355877111465'/><link rel='alternate' type='text/html' href='http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_08.html' title='அன்பு எங்கே?'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19861113.post-116287525038324502</id><published>2006-11-07T10:24:00.000+05:30</published><updated>2006-11-07T10:24:10.553+05:30</updated><title type='text'>நான், நீ, நாம்..</title><content type='html'>&lt;span style="font-family:Arial;"&gt;‘நீ, நான், நாம்.. தன்னலம், பிறர்நலம், நம்நலம்.. இதில் எது முக்கியம் என்றால்? எல்லாமேதான்..’&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;தன்னலம் கருதாது பிறர்நலம் பேண்.. அதுவே உண்மையான மகிழ்ச்சிக்கு வழி.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;இது நம் முதியோர் நமக்கு கற்றுத் தந்த பாடம்.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;ஆனால் இதை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிப்பது அத்தனை எளிதல்ல.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;அதற்கு ஒரு தேர்ந்த மனமுதிர்வு, பக்குவம் வேண்டும்.&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Arial;"&gt;ஆனால் இதற்கு மாற்றாக நம் எல்லோருடைய நலம் என்று சிந்தித்துப் பாருங்கள்..&lt;/span&gt;&lt;br/&gt;&lt;span style="font-family:Aria
