சாலமோன் அரசரின் நீதிமொழிகள் தொடர்ச்சி...
161. விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கோ அவரது மடமையே போதிய தண்டனையாகும்.
162. விவேகமுள்ளவரின் மனம் அவருடைய பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.
163. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.
164. ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழி போன்று தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு வழிநடத்தும் பாதையாகிவிடக் கூடும்.
165. உழைப்பவருடைய பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.
166. பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்பு போன்றது அவரது நாக்கு.
167. கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவார்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்து விடுவர்.
168. வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.
169. கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக்கொண்டிருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.
170. நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.
171. வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.
172. மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால் திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் இறைவனே.
173. சண்டை நடக்கும் வீட்டில் விருந்துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு உண்பதே மேல்.
174. முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்டவனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர்களோடு உரிமை சொத்தில் பங்கு பெறுவான்.
175.வெள்ளியை உலைக்கலமும் பொன்னை புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் இறைவன்.
176. தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலாய் கேட்பான்.
177. ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரைப் படைத்த இறைவனையே இகழ்கிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்கு தப்பமாட்டார்.
178. முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்களது தந்தையே.
179. பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சு அரசனுக்கு பொருந்தவே பொருந்தாது.
180. கைக் கூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போல் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்..
இனியும் வரும்...
161. விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கோ அவரது மடமையே போதிய தண்டனையாகும்.
162. விவேகமுள்ளவரின் மனம் அவருடைய பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.
163. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.
164. ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழி போன்று தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு வழிநடத்தும் பாதையாகிவிடக் கூடும்.
165. உழைப்பவருடைய பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.
166. பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்பு போன்றது அவரது நாக்கு.
167. கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவார்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்து விடுவர்.
168. வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.
169. கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக்கொண்டிருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.
170. நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.
171. வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.
172. மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால் திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் இறைவனே.
173. சண்டை நடக்கும் வீட்டில் விருந்துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு உண்பதே மேல்.
174. முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்டவனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர்களோடு உரிமை சொத்தில் பங்கு பெறுவான்.
175.வெள்ளியை உலைக்கலமும் பொன்னை புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் இறைவன்.
176. தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலாய் கேட்பான்.
177. ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரைப் படைத்த இறைவனையே இகழ்கிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்கு தப்பமாட்டார்.
178. முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்களது தந்தையே.
179. பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சு அரசனுக்கு பொருந்தவே பொருந்தாது.
180. கைக் கூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போல் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்..
இனியும் வரும்...