‘நம்முடைய முகம் எப்போதும் ஒளியை நோக்கியே இருக்க வேண்டும். அப்போதுதான் இருள் நம்மை சூழ்ந்துக் கொள்ளாது’
எந்த ஒரு பொருளுமே ஒளியே நோக்கி இருக்கும்போது அது பிரகாசிக்கின்றது.
இருள் சூழ்ந்திருக்கும் எந்த ஒரு பொருளும் அது வைரமேயானாலும் இருண்டு, களையிழந்துதான் காணப்படும்.
இது நமக்கும் பொருந்தும்.
அதனால்தானோ என்னவோ புகைப்பட நிலையங்களில் கண்கள் கூசும் விளக்கொளியை பயன்படுத்துகின்றனர்.
நம்முடைய புறத்தோற்றத்தைக் குறித்து மட்டும் நான் கூற வரவில்லை.
நம்முடைய பார்வையும், நோக்கமும், குறிக்கோளும் ஒளியை அதாவது, முன்னேற்றத்தை நோக்கியே இருக்க வேண்டும்.
இன்னும் குறிப்பாக கூறவேண்டுமானால் நம்முடைய எதிர்கால பார்வை எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் (Positive Thoughts) இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு விஷயத்திலும் நம்மால் வெற்றிபெற முடியும்.
ஒரு வெள்ளைப் பலகையின் மையத்தில் இருக்கும் கரும்புள்ளி நேர்மறையான, நம்பிக்கையான எண்ணங்களுடன் பார்ப்பவர்களுக்கு புலப்படாது. மாறாக அதைச் சுற்றிலும் இருக்கும் வெள்ளை நிறமே தெரிகிறது.
ஆனால் எதிர்மறையான எண்ணங்களுடன் (Negative Thoughts) பார்ப்பவர்களுக்கு அக்கரும்புள்ளியே பூதாகரமாக தெரிகிறது.
மிகக் குறுகலான பாதையும் விசாலமானதாக நம்முடைய மனக் கண்களுக்கு தெரிகிறதென்றால் அது நம்முடைய நேர்மறையான எண்ணங்களின் தூண்டுதலால்தான்.
எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க இத்தகைய எண்ணங்கள் மிகவும் அவசியம்.
இன்று சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் தலைவர்கள் பலரும் இத்தகைய குறுகலான பாதையில் பயணம் செய்தவர்களே.
அதற்கு மிக நல்ல உதாரணம் நம்முடைய ஜனாதிபதி திரு. கலாம் அவர்கள்.
அவர் மாணவர்கள் மத்தியில் ஆற்றும் ஒவ்வொரு உரையிலும் இதை வலியுறுத்தி வருவதைப் பார்க்கிறோம்.
பைபிளிலும் இதைக் குறித்து ஒரு சொல் வருகிறது. ஏசு தன்னுடைய சீடர்களிடத்திலும் தன்னுடைய போதனைகளைக் கேட்க வரும் கூட்டத்தினரிடையிலும், ‘நீங்கள் ஒளியின் மக்களாக இருங்கள்’ என்று கூறுகிறார்.
ஆம் நண்பர்களே, அவநம்பிக்கை என்னும் அந்தகாரம் நம்மை சூழ்ந்துக்கொள்ள ஒருபோதும் நாம் இடந்தரலாகாது.
நம்முடைய பார்வை ஒளியை நோக்கியே இருக்கட்டும். அப்போதுதான் நாம் மட்டுமல்ல நம்முடைய பார்வையும், நோக்கமும் மற்றவர்களுக்கு நன்றாக தெரியும்.
நாம் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய நேர்மறையான எண்ணங்கள் என்ற ஒளி நம்மை வழிநடத்த வேண்டும்.
நம்முடைய இலக்கை நோக்கி செல்லும் நம்முடைய பயணம் இலகுவாக அமைய இந்த ஒளி நமக்கு மிகவும் அவசியம்.
****
Friday, October 27, 2006
Thursday, October 26, 2006
பதவியும் பொறுப்பும்
‘மறதி இல்லாத மனிதன் எப்படி இருக்க முடியாதோ அதுபோல பொறுப்புகளும், கடமைகளும் இல்லாத சுதந்திரமும் இருக்க முடியாது’
மறதி என்பது மனித இயல்புகளுள் ஒன்று.
எத்தனை படித்த மேதாவிக்கும், மாநிலத்திலேயே தேர்வில் முதலாவதாக வரும் மாணவனுக்கும் கூட மறதி என்பது மிகவும் சகஜம்.
மனதில் இருத்திக்கொள்ள தேவையில்லாதவற்றை சேமித்து வைத்துக் கொள்ள தேவையில்லை என்பதை நம்முடைய மூளையே தீர்மானித்துவிடுவதுதான் இதற்குக் காரணம்..
இது மனித இயல்பு. இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடு இல்லை.
மறதி இல்லாத மனிதன் இவ்வுலகில் இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை, நிதர்சனம்!
அதுபோலத்தான் பொறுப்புகள் இல்லாத சுதந்திரம் அல்லது அதிகாரமும்.
நம்மில் பலருக்கும் சுதந்திரமாக செயல்பட நம்முடைய பெற்றோரும் மேலதிகாரிகளும் அனுமதிப்பதில்லையே என்ற தங்கம் உள்ளது.
ஆனால் அந்த சுதந்திரத்தை தகுந்த வழியில் அதாவது ஆக்கபூர்வமாக செயல்படுத்த நம்மால் முடியுமா அல்லது அதன் விளைவாக நாம் செயல்படுத்த வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தேவையான தகுதிகள் நம்மிடம் உள்ளனவா என்பதை ஆராய தவறிவிடுகிறோம்.
‘என்ன பெரிய மேனேஜர் பதவி. எங்கிட்ட விட்டா இவர விட பிரமாதமா இந்த பிராஞ்ச மேனேஜ் செஞ்சிருப்பேன்.’ இது நான் குமாஸ்தாவாகவும், கடை நிலை அதிகாரியாகவும் இருந்த நேரத்தில் மனதில் நினைத்துக் கொள்வதுமட்டுமல்லாமல் என்னுடைய மேலாளரின் முதுகுக்குப் பின்னால் பேசிய பொறுப்பில்லா பேச்சு.
ஆனால் நானே ஒரு கிளைக்கு மேலாளரான பிறகுதான் தெரிந்தது அந்த பதவியின் பொறுப்பும், கடமைகளும்.
தனக்கு வந்தாத்தான் தெரியும் தலவலியும், திருகுவலியும் என்பார்கள்..
அதுபோல்தான் அதிகாரமும், சுதந்திரமும்..
இவை கிடைக்கின்றவரை கிடைக்காதா என்று ஏக்கம் இருக்கும்.
கிடைத்தபிறகு அவற்றுடன் வரும் பொறுப்புகளும், கடமைகளும் நம்மில் பலருக்கும் தாங்கவொண்ணா பாரமாக தோன்றும்.
ஆகவே நம் பெற்றோர்களை, அதிகாரத்திலிருப்பவர்களைக் குறை கூற முயல்வதற்கு முன் நமக்கு அதற்குண்டான தகுதி இருக்கிறதா என்பதை ஆராய்வோம்..
சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் கேட்கும் நமக்கு அதனுடன் வரும் பொறுப்புகளையும், கடமைகளையும் சரிவர செயலாற்றும் தகுதியும் நமக்கு இருக்கிறதா என்பதையும் ஆராய்வோம்..
பதவி என்பது தூரத்து பச்சை. தொலைவிலிருந்து பார்ப்பதற்குத்தான் அழகாக இருக்கும். அருகில் சென்றால்தான் தெரியும் அது ஒரு முள் இருக்கை என்பது.
****
மறதி என்பது மனித இயல்புகளுள் ஒன்று.
எத்தனை படித்த மேதாவிக்கும், மாநிலத்திலேயே தேர்வில் முதலாவதாக வரும் மாணவனுக்கும் கூட மறதி என்பது மிகவும் சகஜம்.
மனதில் இருத்திக்கொள்ள தேவையில்லாதவற்றை சேமித்து வைத்துக் கொள்ள தேவையில்லை என்பதை நம்முடைய மூளையே தீர்மானித்துவிடுவதுதான் இதற்குக் காரணம்..
இது மனித இயல்பு. இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடு இல்லை.
மறதி இல்லாத மனிதன் இவ்வுலகில் இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை, நிதர்சனம்!
அதுபோலத்தான் பொறுப்புகள் இல்லாத சுதந்திரம் அல்லது அதிகாரமும்.
நம்மில் பலருக்கும் சுதந்திரமாக செயல்பட நம்முடைய பெற்றோரும் மேலதிகாரிகளும் அனுமதிப்பதில்லையே என்ற தங்கம் உள்ளது.
ஆனால் அந்த சுதந்திரத்தை தகுந்த வழியில் அதாவது ஆக்கபூர்வமாக செயல்படுத்த நம்மால் முடியுமா அல்லது அதன் விளைவாக நாம் செயல்படுத்த வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தேவையான தகுதிகள் நம்மிடம் உள்ளனவா என்பதை ஆராய தவறிவிடுகிறோம்.
‘என்ன பெரிய மேனேஜர் பதவி. எங்கிட்ட விட்டா இவர விட பிரமாதமா இந்த பிராஞ்ச மேனேஜ் செஞ்சிருப்பேன்.’ இது நான் குமாஸ்தாவாகவும், கடை நிலை அதிகாரியாகவும் இருந்த நேரத்தில் மனதில் நினைத்துக் கொள்வதுமட்டுமல்லாமல் என்னுடைய மேலாளரின் முதுகுக்குப் பின்னால் பேசிய பொறுப்பில்லா பேச்சு.
ஆனால் நானே ஒரு கிளைக்கு மேலாளரான பிறகுதான் தெரிந்தது அந்த பதவியின் பொறுப்பும், கடமைகளும்.
தனக்கு வந்தாத்தான் தெரியும் தலவலியும், திருகுவலியும் என்பார்கள்..
அதுபோல்தான் அதிகாரமும், சுதந்திரமும்..
இவை கிடைக்கின்றவரை கிடைக்காதா என்று ஏக்கம் இருக்கும்.
கிடைத்தபிறகு அவற்றுடன் வரும் பொறுப்புகளும், கடமைகளும் நம்மில் பலருக்கும் தாங்கவொண்ணா பாரமாக தோன்றும்.
ஆகவே நம் பெற்றோர்களை, அதிகாரத்திலிருப்பவர்களைக் குறை கூற முயல்வதற்கு முன் நமக்கு அதற்குண்டான தகுதி இருக்கிறதா என்பதை ஆராய்வோம்..
சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் கேட்கும் நமக்கு அதனுடன் வரும் பொறுப்புகளையும், கடமைகளையும் சரிவர செயலாற்றும் தகுதியும் நமக்கு இருக்கிறதா என்பதையும் ஆராய்வோம்..
பதவி என்பது தூரத்து பச்சை. தொலைவிலிருந்து பார்ப்பதற்குத்தான் அழகாக இருக்கும். அருகில் சென்றால்தான் தெரியும் அது ஒரு முள் இருக்கை என்பது.
****
Monday, October 23, 2006
நேற்றைய விரோதி இன்றைய நண்பன்!
‘நம்முடைய எதிரிகளை வெற்றிகொள்ள சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதுதான்’
இது நம்முடைய அரசியல்வாதிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடங்களுள் ஒன்று.
முக்கியமாக, நம்முடைய தமிழக அரசியல்வாதிகளிடத்தில் சமீப காலமாக மிக சகஜமாக காணப்படும் ஒன்று இக்குணம்.
கடந்த ஐந்து வருட காலத்தில்தான் எத்தனை கூட்டணிகளையும் பிரிவுகளையும் கண்டிருக்கிறோம்?
நேற்றைய எதிரி இன்றைய நண்பன். இன்றைய நண்பன் நாளைய எதிரி. என் எதிரியின் எதிரி என் நண்பன்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று ‘ஜெ’ மட்டுமல்ல மு.கவும் பல நேரங்களில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.
அரசியல்வாதிகளைப் போல் ‘இன்றைய நண்பன் நாளைய எதிரி’ அல்லது ‘என் எதிரியின் எதிரி என் நண்பன்’ என்றெல்லாம் நாம் கருதத் தேவையில்லை..
ஆனால் ‘நேற்றைய எதிரி இன்றைய நண்பன்’. இது நமக்கு தேவையான ஒன்று.
பைபிளில் ஒரு கூற்று வருகிறது. ‘உன்னைவிட பலசாலியான எதிரியுடன் மோத செல்லும் வழியில் உன்னுடைய பலம் என்ன பலஹீனம் என்ன என்பதை எண்ணிப் பார். அவனை வெற்றிக்கொள்ள முடியுமானால் முன்னேறு. இல்லையேல் அவனிடம் சமாதானமாகிவிடு.’
இது இன்றைக்கு மட்டுமல்ல. இவ்வுலகம் உள்ளவரை பொருந்தும்.
ஆனால் எவரும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல.. நிரந்தர எதிரியும் அல்ல, என்பதும் உண்மைதான்.
நம்முடைய கருத்துக்கு மாற்று கருத்து நிச்சயம் இருக்கும் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்திருந்தாலே போதும், பாதி பிரச்சினை தீர்ந்தமாதிரிதான்.
என்னுடன் ஒத்துப்போகாதவரெல்லாம் எனக்கு எதிரானவர் என்ற கருத்துள்ளவருக்கே எதிரிகள் இருப்பர்.
கருத்து வேற்றுமைகள் உறவுகளை முறிக்கத் தேவையில்லை என்று மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே போதும், இத்தகைய அர்த்தமற்ற விரோத மனப்பான்மை அறவே அகன்றுபோய்விடும்.
வாழும் காலம் சொற்பமே. இதில் நம்மால் முடிந்தவரை நண்பர்களையும் உறவுகளையும் சம்பாதித்துக் கொள்ளாமல் விரோத மனப்பான்மையை மனதில் வளர்த்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை, லாபமும் இல்லை..
மனதை விசாலமாக வைத்துக்கொள்வோம்.
நட்பும், உறவும் மலர வழி வகுப்போம்.
****
இது நம்முடைய அரசியல்வாதிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடங்களுள் ஒன்று.
முக்கியமாக, நம்முடைய தமிழக அரசியல்வாதிகளிடத்தில் சமீப காலமாக மிக சகஜமாக காணப்படும் ஒன்று இக்குணம்.
கடந்த ஐந்து வருட காலத்தில்தான் எத்தனை கூட்டணிகளையும் பிரிவுகளையும் கண்டிருக்கிறோம்?
நேற்றைய எதிரி இன்றைய நண்பன். இன்றைய நண்பன் நாளைய எதிரி. என் எதிரியின் எதிரி என் நண்பன்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று ‘ஜெ’ மட்டுமல்ல மு.கவும் பல நேரங்களில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.
அரசியல்வாதிகளைப் போல் ‘இன்றைய நண்பன் நாளைய எதிரி’ அல்லது ‘என் எதிரியின் எதிரி என் நண்பன்’ என்றெல்லாம் நாம் கருதத் தேவையில்லை..
ஆனால் ‘நேற்றைய எதிரி இன்றைய நண்பன்’. இது நமக்கு தேவையான ஒன்று.
பைபிளில் ஒரு கூற்று வருகிறது. ‘உன்னைவிட பலசாலியான எதிரியுடன் மோத செல்லும் வழியில் உன்னுடைய பலம் என்ன பலஹீனம் என்ன என்பதை எண்ணிப் பார். அவனை வெற்றிக்கொள்ள முடியுமானால் முன்னேறு. இல்லையேல் அவனிடம் சமாதானமாகிவிடு.’
இது இன்றைக்கு மட்டுமல்ல. இவ்வுலகம் உள்ளவரை பொருந்தும்.
ஆனால் எவரும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல.. நிரந்தர எதிரியும் அல்ல, என்பதும் உண்மைதான்.
நம்முடைய கருத்துக்கு மாற்று கருத்து நிச்சயம் இருக்கும் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்திருந்தாலே போதும், பாதி பிரச்சினை தீர்ந்தமாதிரிதான்.
என்னுடன் ஒத்துப்போகாதவரெல்லாம் எனக்கு எதிரானவர் என்ற கருத்துள்ளவருக்கே எதிரிகள் இருப்பர்.
கருத்து வேற்றுமைகள் உறவுகளை முறிக்கத் தேவையில்லை என்று மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே போதும், இத்தகைய அர்த்தமற்ற விரோத மனப்பான்மை அறவே அகன்றுபோய்விடும்.
வாழும் காலம் சொற்பமே. இதில் நம்மால் முடிந்தவரை நண்பர்களையும் உறவுகளையும் சம்பாதித்துக் கொள்ளாமல் விரோத மனப்பான்மையை மனதில் வளர்த்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை, லாபமும் இல்லை..
மனதை விசாலமாக வைத்துக்கொள்வோம்.
நட்பும், உறவும் மலர வழி வகுப்போம்.
****
Sunday, October 22, 2006
உண்மைத் தலைவன் யார்/
ஞாயிற்றுக் கிழமைகளில் கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் என்பதைக் கேட்டிருப்பீர்கள்.
திருப்பலியின் நடுவில் இரண்டு வாசகங்களும், அதற்குப் பிறகு நற்செய்தியும் (Gospel) வாசிக்கப்படும்.
இன்றைய இரு வாசகங்களும், நற்செய்தியும் நமக்கு இன்றும் பொருத்தமானதாக எனக்கு தோன்றவே அதை உங்களிடமும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகம் மாற்கு (St.Mark) என்ற சுவிசேஷகர் எழுதிய சுவிசேஷம் 10ம் அதிகாரத்திலிருந்து 35முதல் 45வது வசனம் முடிய பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் சுருக்கம்:
ஒரு நாள் ஏசு தன் சீடர்களுடம் அமர்ந்திருக்கையில் யாக்கோபும் (Jacob) யோவானும் (John) அவரையணுகி, ‘நீர் அரியணையில் அமர்ந்திருக்கையில் எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துக் கொள்ள எங்களுக்கு அருளும்’ என்றனர்.
மறுமொழியாக ஏசு இவ்வாறு கூறுகிறார்.
‘உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் முதலில் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் நான் தொண்டு ஏற்பதற்கன்று தொண்டு ஆற்றவே வந்தேன்.’
ஏசு கூறிய இறையரசை அவருடன் பல நாட்கள் தங்கியிருந்த சீடர்களே புரிந்துக்கொள்ளவில்லை. அவர் ஏதோ இவ்வுலகில் ஒரு பேரரசை நிறுவ பிறந்தவர் என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆகவேதான் அவருடைய வலக்கை மற்றும் இடக்கையாக இருந்து அந்த அரசின் அதிகாரத்தையும், வசதிகளையும் அனுபவிக்க தங்களுக்குள் போட்டியிட்டனர்.
ஏசு அன்று தன் சீடர்களுக்கு கூறிய அறிவுரை இன்றும் நம் தலைவர்களுக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள்.
இன்றைய தலைவர்கள் தேர்தல் நேரத்தில் வீதி வீதியாக கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் கும்பிட்ட கரங்களுடன் வலம் வரவும் வீடு வீடாக சென்று நம் காலைத் தொட்டு வணங்கவும் தங்களுக்குள் போட்டிப் போடுவதென்ன..
தேர்தல் முடிந்து பதவியில் அமர்ந்ததும் தங்களை உதவி கேட்டு நாடி வருபவர்களிடம் காட்டும் அலட்சியமும், ஆணவமுமென்ன..
நான் உங்கள் தொண்டன் என்று தேர்தல் அறிக்கையில் அறைகூவல் இடுபவர்கள் தேர்தல் முடிந்ததும் தங்களுக்கென அடியாட்களை வைத்துக் கொண்டு வலம் வருவதென்ன..
‘பதவிகள் பணிபுரியவே’ என்று அன்று ஏசு தம் சீடர்களுக்குச் சொன்ன அறிவுரை இத்தகைய பதவி வெறி பிடித்து அலையும் நம்முடைய இன்றைய தலைவர்களுக்கும் சேர்த்துத்தான் என்று இப்போது தோன்றுகிறது..
ஏன் அரசியல் தலைவர்களைச் சொல்கிறீர்கள்?
நம் குடும்பங்களில் என்ன நடக்கிறது?
நாந்தான் வீட்டுக்கு தலைவன், என் சொல்படிதான் எல்லாமே நடக்க வேண்டும் என்று நம்மில் எத்தனைபேர் நினைக்கிறோம்..
இல்லத்தரசி என்பவர் உண்மையிலேயே அரசியைப் போல்தான் நடத்தப்படுகிறாரா?
நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது!
*******
திருப்பலியின் நடுவில் இரண்டு வாசகங்களும், அதற்குப் பிறகு நற்செய்தியும் (Gospel) வாசிக்கப்படும்.
இன்றைய இரு வாசகங்களும், நற்செய்தியும் நமக்கு இன்றும் பொருத்தமானதாக எனக்கு தோன்றவே அதை உங்களிடமும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகம் மாற்கு (St.Mark) என்ற சுவிசேஷகர் எழுதிய சுவிசேஷம் 10ம் அதிகாரத்திலிருந்து 35முதல் 45வது வசனம் முடிய பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் சுருக்கம்:
ஒரு நாள் ஏசு தன் சீடர்களுடம் அமர்ந்திருக்கையில் யாக்கோபும் (Jacob) யோவானும் (John) அவரையணுகி, ‘நீர் அரியணையில் அமர்ந்திருக்கையில் எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துக் கொள்ள எங்களுக்கு அருளும்’ என்றனர்.
மறுமொழியாக ஏசு இவ்வாறு கூறுகிறார்.
‘உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் முதலில் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் நான் தொண்டு ஏற்பதற்கன்று தொண்டு ஆற்றவே வந்தேன்.’
ஏசு கூறிய இறையரசை அவருடன் பல நாட்கள் தங்கியிருந்த சீடர்களே புரிந்துக்கொள்ளவில்லை. அவர் ஏதோ இவ்வுலகில் ஒரு பேரரசை நிறுவ பிறந்தவர் என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆகவேதான் அவருடைய வலக்கை மற்றும் இடக்கையாக இருந்து அந்த அரசின் அதிகாரத்தையும், வசதிகளையும் அனுபவிக்க தங்களுக்குள் போட்டியிட்டனர்.
ஏசு அன்று தன் சீடர்களுக்கு கூறிய அறிவுரை இன்றும் நம் தலைவர்களுக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள்.
இன்றைய தலைவர்கள் தேர்தல் நேரத்தில் வீதி வீதியாக கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் கும்பிட்ட கரங்களுடன் வலம் வரவும் வீடு வீடாக சென்று நம் காலைத் தொட்டு வணங்கவும் தங்களுக்குள் போட்டிப் போடுவதென்ன..
தேர்தல் முடிந்து பதவியில் அமர்ந்ததும் தங்களை உதவி கேட்டு நாடி வருபவர்களிடம் காட்டும் அலட்சியமும், ஆணவமுமென்ன..
நான் உங்கள் தொண்டன் என்று தேர்தல் அறிக்கையில் அறைகூவல் இடுபவர்கள் தேர்தல் முடிந்ததும் தங்களுக்கென அடியாட்களை வைத்துக் கொண்டு வலம் வருவதென்ன..
‘பதவிகள் பணிபுரியவே’ என்று அன்று ஏசு தம் சீடர்களுக்குச் சொன்ன அறிவுரை இத்தகைய பதவி வெறி பிடித்து அலையும் நம்முடைய இன்றைய தலைவர்களுக்கும் சேர்த்துத்தான் என்று இப்போது தோன்றுகிறது..
ஏன் அரசியல் தலைவர்களைச் சொல்கிறீர்கள்?
நம் குடும்பங்களில் என்ன நடக்கிறது?
நாந்தான் வீட்டுக்கு தலைவன், என் சொல்படிதான் எல்லாமே நடக்க வேண்டும் என்று நம்மில் எத்தனைபேர் நினைக்கிறோம்..
இல்லத்தரசி என்பவர் உண்மையிலேயே அரசியைப் போல்தான் நடத்தப்படுகிறாரா?
நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது!
*******
Friday, October 20, 2006
அன்பு செய்வோம்.
“அன்பு என்பது ஒரு வழி பாதையல்ல. இரும்புப் பெட்டகத்திற்குள் வைத்து பூட்டி வைக்க வேண்டிய புதையலும் அல்ல.”
அன்பு ஒரு வணிகப் பொருளும் அல்ல. காசு கொடுத்து வாங்குவதற்கு.
அன்பை அன்பால் மட்டுமே வாங்க முடியும், பெற முடியும்.
ஒருதலைக் காதலைப் போன்ற துன்பம் தரக்கூடிய துன்பம் உலகில் வேறொன்றும் இல்லை.
நான் அன்பு பிறரை அன்பு செய்கிறேன் என்று என்னுடைய மனதில் பூட்டி வைத்திருந்தால் போறாது. அதை வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவர் இப்படித்தான்.
தன் மனைவி மக்களிடத்தில் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் அவர் இல்லாத நேரத்தில் ஒரு நாள் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
அவருடைய மனைவி என்னிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்.
‘ஏங்க அவரோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொல்றீங்க. நீங்களாச்சும் அவர்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?’ என்றார் எடுத்த எடுப்பில்.
நான் வியப்புடன், ‘ஏன், என்ன செஞ்சார்?’ என்றேன்.
அவர் சலிப்புடன் பேச ஆரம்பிக்க அவருடைய இரண்டு பிள்ளைகளும் (ஒரு ஆண், ஒரு பெண்) சேர்ந்துக்கொண்டனர்.
‘அவர கல்யாணம் செஞ்ச நாள்லருந்து அவர் மூஞ்சில சிரிப்பையே பார்த்ததில்லீங்க. எப்ப பார்த்தாலும் கடுவன் பூன கணக்கா மூஞ்ச வச்சிக்கிட்டு. சரிங்க.. என்னையத்தான் பிடிக்கலன்னு வச்சிக்குவம். எம் பிள்ளைங்க என்ன பாவம்க செஞ்சாங்க, இவருக்கு பிள்ளைங்களா வந்து பொறந்ததத் தவிர? அவர் ஆஃபீஸ்லயும் அப்படித்தான் இருப்பாரா?’
எனக்கு எப்படி சொல்லி விளக்குவதென தெரியவில்லை. என்னுடைய நண்பர் அலுவலகத்திலும் அப்படித்தான் இருப்பார். யாரையும் நெருங்க விடமாட்டார். கண்டிப்பு, கறார் பேர்வழி என்று அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும்.
ஆனால் அவருடன் நெருங்கிய என்னைப் போன்ற நண்பர்கள் சிலருக்கே தெரியும் அவர் எத்தனை பூஞ்சை மனதுடையவர், தனக்கு வேண்டியவர்கள் மீது எத்தனை அன்பும் பாசம் வைத்திருப்பவர் என்று.
ஆம் அன்பு என்பது இரும்பு பெட்டகத்தில் பூட்டி வைக்க வேண்டிய புதையல் அல்ல.
அது ஒரு மணம் வீசும் மலரைப் போல.
நாம் பிறர் மீது அன்பு செய்கிறோம் என்பது நம்மால் அன்பு செய்யப்படுபவர்களுக்கு தெரியவேண்டும்.
நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்..
நீங்கள் உலகை அன்பு செய்தால் உலகம் உங்களை அன்பு செய்யும்.
மாறாக நீங்கள் உலகை வெறுத்தால் உலகம் உங்களை நிச்சயம் வெறுத்து ஒதுக்கிவிடும்..
காசா, பணமா?
அன்பு கொடுக்க, கொடுக்க குறைந்துப் போகக்கூடிய செல்வமும் இல்லை. மாறாக நீங்கள் கொடுப்பதற்கு பண்மடங்கு அது உங்களிடமே திரும்பி வரும்.. வட்டியும், முதலுமாய்.. ஏன் போனசும் சேர்த்து.
தீபத் திருநாளாம் இந்நாள் முதல்..
நாம் அன்பு செய்வோம்.. அதை பிறர் அறியும் வண்ணம் வெளியில் காட்டவும் செய்வோம்..
என்னுடைய சக வலைப்பதிவாள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஜோசப்
அன்பு ஒரு வணிகப் பொருளும் அல்ல. காசு கொடுத்து வாங்குவதற்கு.
அன்பை அன்பால் மட்டுமே வாங்க முடியும், பெற முடியும்.
ஒருதலைக் காதலைப் போன்ற துன்பம் தரக்கூடிய துன்பம் உலகில் வேறொன்றும் இல்லை.
நான் அன்பு பிறரை அன்பு செய்கிறேன் என்று என்னுடைய மனதில் பூட்டி வைத்திருந்தால் போறாது. அதை வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவர் இப்படித்தான்.
தன் மனைவி மக்களிடத்தில் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் அவர் இல்லாத நேரத்தில் ஒரு நாள் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
அவருடைய மனைவி என்னிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்.
‘ஏங்க அவரோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொல்றீங்க. நீங்களாச்சும் அவர்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?’ என்றார் எடுத்த எடுப்பில்.
நான் வியப்புடன், ‘ஏன், என்ன செஞ்சார்?’ என்றேன்.
அவர் சலிப்புடன் பேச ஆரம்பிக்க அவருடைய இரண்டு பிள்ளைகளும் (ஒரு ஆண், ஒரு பெண்) சேர்ந்துக்கொண்டனர்.
‘அவர கல்யாணம் செஞ்ச நாள்லருந்து அவர் மூஞ்சில சிரிப்பையே பார்த்ததில்லீங்க. எப்ப பார்த்தாலும் கடுவன் பூன கணக்கா மூஞ்ச வச்சிக்கிட்டு. சரிங்க.. என்னையத்தான் பிடிக்கலன்னு வச்சிக்குவம். எம் பிள்ளைங்க என்ன பாவம்க செஞ்சாங்க, இவருக்கு பிள்ளைங்களா வந்து பொறந்ததத் தவிர? அவர் ஆஃபீஸ்லயும் அப்படித்தான் இருப்பாரா?’
எனக்கு எப்படி சொல்லி விளக்குவதென தெரியவில்லை. என்னுடைய நண்பர் அலுவலகத்திலும் அப்படித்தான் இருப்பார். யாரையும் நெருங்க விடமாட்டார். கண்டிப்பு, கறார் பேர்வழி என்று அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும்.
ஆனால் அவருடன் நெருங்கிய என்னைப் போன்ற நண்பர்கள் சிலருக்கே தெரியும் அவர் எத்தனை பூஞ்சை மனதுடையவர், தனக்கு வேண்டியவர்கள் மீது எத்தனை அன்பும் பாசம் வைத்திருப்பவர் என்று.
ஆம் அன்பு என்பது இரும்பு பெட்டகத்தில் பூட்டி வைக்க வேண்டிய புதையல் அல்ல.
அது ஒரு மணம் வீசும் மலரைப் போல.
நாம் பிறர் மீது அன்பு செய்கிறோம் என்பது நம்மால் அன்பு செய்யப்படுபவர்களுக்கு தெரியவேண்டும்.
நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்..
நீங்கள் உலகை அன்பு செய்தால் உலகம் உங்களை அன்பு செய்யும்.
மாறாக நீங்கள் உலகை வெறுத்தால் உலகம் உங்களை நிச்சயம் வெறுத்து ஒதுக்கிவிடும்..
காசா, பணமா?
அன்பு கொடுக்க, கொடுக்க குறைந்துப் போகக்கூடிய செல்வமும் இல்லை. மாறாக நீங்கள் கொடுப்பதற்கு பண்மடங்கு அது உங்களிடமே திரும்பி வரும்.. வட்டியும், முதலுமாய்.. ஏன் போனசும் சேர்த்து.
தீபத் திருநாளாம் இந்நாள் முதல்..
நாம் அன்பு செய்வோம்.. அதை பிறர் அறியும் வண்ணம் வெளியில் காட்டவும் செய்வோம்..
என்னுடைய சக வலைப்பதிவாள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஜோசப்
Wednesday, October 18, 2006
பிரார்த்தனையும் கோரிக்கையும்
‘பிரார்த்தனை. அதன் வலிமையை உலகெங்குமுள்ள கோடானு கோடி மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பிரார்த்தனையில் வலிமையை நாம் பரீட்சித்து பார்க்க வேண்டாமா? காசா, பணமா?’
பிரார்த்தனை என்றவுடனே அது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே செய்கிற வேலை. அது மூட நம்பிக்கையை தூண்டுகிறது என்று நம்மில் சிலருக்கு தோன்றுகிறது.
ஆனால் பிரார்த்தனை என்ற சொல்லுக்கு 'நம்பிக்கையுடனான கோரிக்கை' என்றும் கூறுகின்றன அகராதிகள்.
‘சார்.. என் மனைவிக்கு சென்னையில வேல கிடைச்சிருக்கு. அதனால எனக்கும் சென்னைக்கே மாற்றம் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும். ஒங்களால செய்ய முடியுங்கற நம்பிக்கையிலதான் கேக்கேன் சார், ப்ளீஸ்.’
இது நம்மில் பலரும் நம்முடைய உயர் அதிகாரிகளிடத்தில் வைக்கும் கோரிக்கை.
இதுவும் ஒருவகை பிரார்த்தனைதான்.
நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட சில காரியங்கள் நடைபெற பிறருடைய அதாவது, அதை செய்து முடிக்கக் கூடிய சக்தி அல்லது திறன் படைத்தவர்களுடைய உதவியைக் கேட்பது.
அதில் தவறு இருக்கிறதா என்ன?
அதுபோல்தான் இறைவன் முன் வைக்கும் பிரார்த்தனையும்.
இறைவன் என்றால் ஒரு சக்தி. கண்ணுக்கு தெரியாத, என் அறிவுக்கு எட்டாத ஒரு சக்திவாய்ந்த சக்தி என்று வைத்துக் கொள்வோம்.
அநத சக்திக்கு ஏசு என்றோ, புத்தர் என்றோ அல்லது ராமர் என்றோ, விநாயகர் என்றோ உருவம் கொடுக்க விரும்புவர்கள் கொடுத்துக்கொண்டு தங்களுடைய கோரிக்கையை முன்வைப்பதில் மட்டும் என்ன தவறு? அதை மட்டும் ஏன் மூட நம்பிக்கை என்று நின¨க்கிறோம்?
இறைவன் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.
ஆனால் நம்பிக்கையுடன் வைக்கும் எந்த கோரிக்கையும் நிச்சயம் நமக்கு கிடைக்கும்.
அதற்காக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பவர் ‘சாமி எனக்கு நாளைக்கே ஒரு ஓப்பல் ஆஸ்ட்ரா கார் வேணும்’ என்று கேட்டால் கிடைக்குமா என்று வாதாட வராதீர்கள்.
‘சரி நமக்கு என்ன தேவை என்று இறைவனுக்கு தெரியுமே பிறகெதற்கு கேட்பது?’ என்றும் வாதாடாதீர்கள்.
எனக்கு மாற்றம் தேவை என்று என்னுடைய சேர்மனுக்கும் தெரிந்துதானிருந்தது. ஆனால் அதை நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். நான் கேட்டால் எங்கே கிடைக்கப் போகிறதென்ற என்ற அவநம்பிக்கையில் நான்கு வருடம் கேட்காதிருந்தேன்.
ஒரு நாள் திடீரென்று தோன்றியது, காசா, பணமா? கேட்டுத்தான் பார்ப்போமே என்று கேட்டேன்.
‘அப்படியா? சரி, நேரம் வரும்போது நிச்சயம் ஒங்க ரிக்வெஸ்ட்ட எச்.ஆர். கமிட்டியில வைக்கறேன்.. சரின்னு சொன்னா.. செஞ்சிரலாம் என்றார் என் சேர்மன். அடுத்த கமிட்டி கூட்டத்திலேயே என்னுடைய மாற்றத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.
இதோ.. நான் சென்னையில் என் மனைவி மக்களுடன்..
‘கதவு தட்டுனாத்தான் திறக்கும்.. உள்ள வேலையா இருக்கறவங்களுக்கு நீங்க வெளிய நிக்கறீங்கன்னு ஜோஸ்யமா தெரியும்?’
அதுபோல்தான் நம்முடைய பிரார்த்தனையும்.
‘கிடைத்துவிட்டதென்ற விசுவாசத்துடன் நீங்கள் எதைக் கேட்டாலும் வானகத்திலுள்ள என் தந்தை உங்களுக்கு அருள்வார்.’ என்றார் ஏசுபிரான்.
கிடைக்குமா கிடைக்காதா என்ற அவநம்பிக்கையுடன் வைக்கும் எந்த கோரிக்கையும் நிறைவேறாதல்லவா?
ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.. அதாவது, நாம் கேட்பது கிடைத்துவிட்டதென்ற நம்பிக்கையுடன்..
******
பிரார்த்தனை என்றவுடனே அது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே செய்கிற வேலை. அது மூட நம்பிக்கையை தூண்டுகிறது என்று நம்மில் சிலருக்கு தோன்றுகிறது.
ஆனால் பிரார்த்தனை என்ற சொல்லுக்கு 'நம்பிக்கையுடனான கோரிக்கை' என்றும் கூறுகின்றன அகராதிகள்.
‘சார்.. என் மனைவிக்கு சென்னையில வேல கிடைச்சிருக்கு. அதனால எனக்கும் சென்னைக்கே மாற்றம் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும். ஒங்களால செய்ய முடியுங்கற நம்பிக்கையிலதான் கேக்கேன் சார், ப்ளீஸ்.’
இது நம்மில் பலரும் நம்முடைய உயர் அதிகாரிகளிடத்தில் வைக்கும் கோரிக்கை.
இதுவும் ஒருவகை பிரார்த்தனைதான்.
நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட சில காரியங்கள் நடைபெற பிறருடைய அதாவது, அதை செய்து முடிக்கக் கூடிய சக்தி அல்லது திறன் படைத்தவர்களுடைய உதவியைக் கேட்பது.
அதில் தவறு இருக்கிறதா என்ன?
அதுபோல்தான் இறைவன் முன் வைக்கும் பிரார்த்தனையும்.
இறைவன் என்றால் ஒரு சக்தி. கண்ணுக்கு தெரியாத, என் அறிவுக்கு எட்டாத ஒரு சக்திவாய்ந்த சக்தி என்று வைத்துக் கொள்வோம்.
அநத சக்திக்கு ஏசு என்றோ, புத்தர் என்றோ அல்லது ராமர் என்றோ, விநாயகர் என்றோ உருவம் கொடுக்க விரும்புவர்கள் கொடுத்துக்கொண்டு தங்களுடைய கோரிக்கையை முன்வைப்பதில் மட்டும் என்ன தவறு? அதை மட்டும் ஏன் மூட நம்பிக்கை என்று நின¨க்கிறோம்?
இறைவன் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.
ஆனால் நம்பிக்கையுடன் வைக்கும் எந்த கோரிக்கையும் நிச்சயம் நமக்கு கிடைக்கும்.
அதற்காக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பவர் ‘சாமி எனக்கு நாளைக்கே ஒரு ஓப்பல் ஆஸ்ட்ரா கார் வேணும்’ என்று கேட்டால் கிடைக்குமா என்று வாதாட வராதீர்கள்.
‘சரி நமக்கு என்ன தேவை என்று இறைவனுக்கு தெரியுமே பிறகெதற்கு கேட்பது?’ என்றும் வாதாடாதீர்கள்.
எனக்கு மாற்றம் தேவை என்று என்னுடைய சேர்மனுக்கும் தெரிந்துதானிருந்தது. ஆனால் அதை நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். நான் கேட்டால் எங்கே கிடைக்கப் போகிறதென்ற என்ற அவநம்பிக்கையில் நான்கு வருடம் கேட்காதிருந்தேன்.
ஒரு நாள் திடீரென்று தோன்றியது, காசா, பணமா? கேட்டுத்தான் பார்ப்போமே என்று கேட்டேன்.
‘அப்படியா? சரி, நேரம் வரும்போது நிச்சயம் ஒங்க ரிக்வெஸ்ட்ட எச்.ஆர். கமிட்டியில வைக்கறேன்.. சரின்னு சொன்னா.. செஞ்சிரலாம் என்றார் என் சேர்மன். அடுத்த கமிட்டி கூட்டத்திலேயே என்னுடைய மாற்றத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.
இதோ.. நான் சென்னையில் என் மனைவி மக்களுடன்..
‘கதவு தட்டுனாத்தான் திறக்கும்.. உள்ள வேலையா இருக்கறவங்களுக்கு நீங்க வெளிய நிக்கறீங்கன்னு ஜோஸ்யமா தெரியும்?’
அதுபோல்தான் நம்முடைய பிரார்த்தனையும்.
‘கிடைத்துவிட்டதென்ற விசுவாசத்துடன் நீங்கள் எதைக் கேட்டாலும் வானகத்திலுள்ள என் தந்தை உங்களுக்கு அருள்வார்.’ என்றார் ஏசுபிரான்.
கிடைக்குமா கிடைக்காதா என்ற அவநம்பிக்கையுடன் வைக்கும் எந்த கோரிக்கையும் நிறைவேறாதல்லவா?
ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.. அதாவது, நாம் கேட்பது கிடைத்துவிட்டதென்ற நம்பிக்கையுடன்..
******
Tuesday, October 17, 2006
செல்வம்
‘நம்மில் சிலர் திரண்ட செல்வத்துக்கு அதிபதிகளாக உள்ளோம். நம்மில் பலருடைய செல்வமோ நமக்கு அதிபதியாக உள்ளது.’
ஒரு நாள் ஏசுபிரான் மக்களிடையே போதித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு வாலிபன் அவரை அணுகி ‘போதகரே நான் கடவுளுக்கு உகந்தவனாக ஆவலாய் உள்ளேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றி வினவினான்.
‘நீ கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடி. மீட்பு பெறுவாய்.’ என்றார் ஏசு.
அந்த இளைஞன் மறுமொழியாக, ‘போதகரே நான் கடவுளுடைய கட்டளைகள் யாவற்றையும் சிறுவயது முதலே கடைபிடித்து வருகிறேன்..’ என்றான்.
அந்த இளைஞன் ஒரு பெரும் செல்வந்தன் என்பதை ஏசு அறிந்திருந்தார். ஆகவே, ‘நீ போய் உன் செல்வத்தை விற்று வறியவர்களுக்குக் கொடு. பிறகு என்னை வந்து பின்செல்’ என்றார்.
இளைஞன் வாடிய முகத்தோடு திரும்பிச் சென்றான்.
ஏசு கூறியதன் பொருள் செல்வந்தர் எவரும் சொர்க்கத்தையடைய முடியாதென்றோ அல்லது செல்வந்தர்கள் இறைவனுக்கு உகந்தவர்களாக இருக்க் முடியாதென்rறோ பொருள் அல்ல.
செல்வந்தர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள்தான். செல்வத்துக்கு அடிமையாகிப் போனவர்கள் அல்ல.
நம்மில் பலருக்கும் நம்முடைய உடல் மற்றும் ஆத்ம நலனைவிட நம்மிட ஆஸ்திகள்தான் முக்கியமாகத் தெரிகிறது..
இளம் வயதில் நேரம் காலம் பாராமல் உழைக்கிறோம். எதற்கு? கூடிய மட்டும் செல்வம் சேர்ப்பதற்கு.
ஆனால் அதை ஆற அமர்ந்து அனுபவிக்கும் வயதில் நோய்க்கும் மருந்துக்குமே நம்முடைய செல்வம் கரைந்து போகிறது.
செல்வம் தேவைதான். ஆனால் அது நம்முடைய தேவைக்குள் இருக்க வேண்டும்.
நாம் எத்தனை செல்வந்தர்களாகவோ, செல்வாக்குள்ளவர்களாகவோ இருப்பினும் இறுதியில்நமக்கு கிடைக்கப்போவதென்னவோ ஆறடி நிலம்தான்.
அதை உணர்ந்திருந்தாலே போறும், குறைகள் தீரும், கவலைகள் மாறும், குழம்பிய மனதில் அமைதி வந்தேகும்..
***
ஒரு நாள் ஏசுபிரான் மக்களிடையே போதித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு வாலிபன் அவரை அணுகி ‘போதகரே நான் கடவுளுக்கு உகந்தவனாக ஆவலாய் உள்ளேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றி வினவினான்.
‘நீ கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடி. மீட்பு பெறுவாய்.’ என்றார் ஏசு.
அந்த இளைஞன் மறுமொழியாக, ‘போதகரே நான் கடவுளுடைய கட்டளைகள் யாவற்றையும் சிறுவயது முதலே கடைபிடித்து வருகிறேன்..’ என்றான்.
அந்த இளைஞன் ஒரு பெரும் செல்வந்தன் என்பதை ஏசு அறிந்திருந்தார். ஆகவே, ‘நீ போய் உன் செல்வத்தை விற்று வறியவர்களுக்குக் கொடு. பிறகு என்னை வந்து பின்செல்’ என்றார்.
இளைஞன் வாடிய முகத்தோடு திரும்பிச் சென்றான்.
ஏசு கூறியதன் பொருள் செல்வந்தர் எவரும் சொர்க்கத்தையடைய முடியாதென்றோ அல்லது செல்வந்தர்கள் இறைவனுக்கு உகந்தவர்களாக இருக்க் முடியாதென்rறோ பொருள் அல்ல.
செல்வந்தர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள்தான். செல்வத்துக்கு அடிமையாகிப் போனவர்கள் அல்ல.
நம்மில் பலருக்கும் நம்முடைய உடல் மற்றும் ஆத்ம நலனைவிட நம்மிட ஆஸ்திகள்தான் முக்கியமாகத் தெரிகிறது..
இளம் வயதில் நேரம் காலம் பாராமல் உழைக்கிறோம். எதற்கு? கூடிய மட்டும் செல்வம் சேர்ப்பதற்கு.
ஆனால் அதை ஆற அமர்ந்து அனுபவிக்கும் வயதில் நோய்க்கும் மருந்துக்குமே நம்முடைய செல்வம் கரைந்து போகிறது.
செல்வம் தேவைதான். ஆனால் அது நம்முடைய தேவைக்குள் இருக்க வேண்டும்.
நாம் எத்தனை செல்வந்தர்களாகவோ, செல்வாக்குள்ளவர்களாகவோ இருப்பினும் இறுதியில்நமக்கு கிடைக்கப்போவதென்னவோ ஆறடி நிலம்தான்.
அதை உணர்ந்திருந்தாலே போறும், குறைகள் தீரும், கவலைகள் மாறும், குழம்பிய மனதில் அமைதி வந்தேகும்..
***
Monday, October 16, 2006
இடைஞ்சல்கள்
“விஞ்ஞானம் எந்த அளவு முன்னேறியிருந்தாலும் வீசும் சூறாவளி காற்று, பேய் மழை, கண்களைக் கூசவைக்கும் மின்னல், நடுங்க வைக்கும் இடி என்ற இயற்கைச் சீற்றங்களை தடுக்க முடிவதில்லை. ஆனால் அது இவற்றின் அழிவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது.”
அதுபோல்தான் நம் வாழ்விலும்.
சில சமயங்களில் நமக்கு ஏற்படும் சோதனைகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றிற்கு காரணம் என்னவென்பது நமக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது.
‘நான் எவ்வளவோ கவனமாகத்தானே செயல்பட்டேன்.. பிறகெப்படி?’ என்ற மாய்ந்து போகிறோம்.
காரணத்தை அல்லது காரணகர்த்தாவைத் தேடி அலைகிறோம்..
நமக்கு தோல்வியின் தாக்கத்தைவிட நான் இதை எதிர்பார்க்காமல் போனேனே என்ற அங்கலாய்ப்பே அதிகமாகிறது.
புயல், மழை, இடி, மின்னல். இவற்றிற்கு காரணங்களைத் தேடி அலைந்தால்.. இறைவனையல்லாது யாரை குற்றம் சொல்வது?
இயற்கையின் சீற்றத்திற்கு காரணகர்த்தா இறைவந்தானே? அவராக பார்த்து வீசியது போதும், பெய்தது போதும் என்று நினைக்கும்வரை (இதற்கும் இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வாதாடுவர்களுடன் வாதாடி பலனில்லை) பொறுத்திருக்க வேண்டியதுதான்.
ஆட்டத்தை துவக்கியவந்தானே முடிக்க வேண்டும்?
அதுபோல்தான் நம்முடைய வாழ்விலும்..
நம்மால் ஓரளவுக்குத்தான் கவனமாக இருக்க முடியும்.
சாலையில் நாம் எவ்வளவு கவனமாக வாகனத்தை செலுத்தினாலும், பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் நாம் நடந்து சென்றாலும் சில சமயங்களில் விபத்துகளில் சிக்கிக்கொள்வதில்லையா?
நடக்கும் விபத்து பிறருடைய கவனக்குறைவாலும் ஏற்படலாம் அல்லவா?
அதுபோல்தான் நம்முடைய வாழ்விலும்..
நம்மால் இயன்ற அளவு கவனமாக, உண்மையாக இருப்போம், முழு மனதுடன் உழைப்போம். நல்லவற்றையே நினைப்போம்.
அதன் பிறகும் ஏற்படும் தோல்விகளை, ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை நமக்களிக்கும்படி இறைவனை வேண்டுவோம்..
இறைவனின் அருள் நமக்கு இருக்கும் வரை இத்தகைய தாற்காலிக இடைஞ்சல்களை நம்மால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு மழைக்கு பின்னாலும் வானவில் உண்டுதானே..
***
அதுபோல்தான் நம் வாழ்விலும்.
சில சமயங்களில் நமக்கு ஏற்படும் சோதனைகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றிற்கு காரணம் என்னவென்பது நமக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது.
‘நான் எவ்வளவோ கவனமாகத்தானே செயல்பட்டேன்.. பிறகெப்படி?’ என்ற மாய்ந்து போகிறோம்.
காரணத்தை அல்லது காரணகர்த்தாவைத் தேடி அலைகிறோம்..
நமக்கு தோல்வியின் தாக்கத்தைவிட நான் இதை எதிர்பார்க்காமல் போனேனே என்ற அங்கலாய்ப்பே அதிகமாகிறது.
புயல், மழை, இடி, மின்னல். இவற்றிற்கு காரணங்களைத் தேடி அலைந்தால்.. இறைவனையல்லாது யாரை குற்றம் சொல்வது?
இயற்கையின் சீற்றத்திற்கு காரணகர்த்தா இறைவந்தானே? அவராக பார்த்து வீசியது போதும், பெய்தது போதும் என்று நினைக்கும்வரை (இதற்கும் இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வாதாடுவர்களுடன் வாதாடி பலனில்லை) பொறுத்திருக்க வேண்டியதுதான்.
ஆட்டத்தை துவக்கியவந்தானே முடிக்க வேண்டும்?
அதுபோல்தான் நம்முடைய வாழ்விலும்..
நம்மால் ஓரளவுக்குத்தான் கவனமாக இருக்க முடியும்.
சாலையில் நாம் எவ்வளவு கவனமாக வாகனத்தை செலுத்தினாலும், பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் நாம் நடந்து சென்றாலும் சில சமயங்களில் விபத்துகளில் சிக்கிக்கொள்வதில்லையா?
நடக்கும் விபத்து பிறருடைய கவனக்குறைவாலும் ஏற்படலாம் அல்லவா?
அதுபோல்தான் நம்முடைய வாழ்விலும்..
நம்மால் இயன்ற அளவு கவனமாக, உண்மையாக இருப்போம், முழு மனதுடன் உழைப்போம். நல்லவற்றையே நினைப்போம்.
அதன் பிறகும் ஏற்படும் தோல்விகளை, ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை நமக்களிக்கும்படி இறைவனை வேண்டுவோம்..
இறைவனின் அருள் நமக்கு இருக்கும் வரை இத்தகைய தாற்காலிக இடைஞ்சல்களை நம்மால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு மழைக்கு பின்னாலும் வானவில் உண்டுதானே..
***
Thursday, October 12, 2006
சந்தேகம்.
“எந்த ஒரு விஷயத்திலும் நிதானித்து முடிவெடுங்கள். ஏனெனில் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது அந்தக்காலம். இப்போதெல்லாம் இரண்டென்ன, மூன்று, நான்கு என பல கோணங்கள் இருக்க வாய்ப்புள்ளது.”
தனி நபர் உறவுகள் பாதிக்கப்படுவதே சில்லறை விஷயங்களினால்தான் என்பதை நாம் எல்லோரும் அறிந்தே இருக்கிறோம்.
"மலைபோலருக்கற விஷயத்துல ரோட்ல போறவனையெல்லாம் நம்பிருவா. துரும்பு மாதிரி விஷயத்துல யாரையும் நம்பாம.."
"இவர் கூட முப்பது வருசமா குடும்பம் நடத்தற என்னெ நம்பாம.. அவன் சொன்னா, இவன் சொன்னான்னு.."
இது சாதாரணமாக நம் குடும்பங்களில் கேட்கும் புகார்.
கணவன்-மனைவி, தந்தை-மகன்/மகள், அலுவலகத்தில் பணியாளர்-மேலாளர் ஏன் நெருங்கிய நண்பர்கள் மத்தியிலும் உறவுகள் பாதிக்கப்படுவதே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பதால்தான் என்றால் மிகையாகாது.
சந்தேகம் என்பது ஒரு பிசாசு.
அது ஒரு குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ நுழைந்துவிட்டால் அதன் ஆதிக்கம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்குமே துக்கத்தை மட்டுமே அளித்துவிடுகிறது.
ஆகவே ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருடைய கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பாருங்கள்.
அதே சமயம் தனி மனித உறவுகளில் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமல்ல. சிலவற்றை கண்டும் காணாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
தீர ஆராய்ந்த பிறகும் சந்தேகம் இருப்பின் அதன் சாதகத்தை சம்பந்தப்பட்டவருக்கு தாருங்கள். கிரிக்கெட் ஆட்டத்திலும் கூட the benefit of doubt should be given to the batsman என்பார்கள்.
உங்களுடைய பெருந்தன்மை பாதிக்கப்படுவதிலிருந்து தப்பித்தவர்களால் பாராட்டப்படுவதுடன் அவர்களுடைய பார்வையில் உங்களுடைய மதிப்பு பண்மடங்கு உயரவும் வாய்ப்புள்ளது.
உறவும் நட்பும் ஏற்பட பல ஆண்டுகள் தேவை.. ஆனால் அறுத்தெறிவதற்கு ஒரு நொடி போதும்..
சிந்திப்போம்..
தனி நபர் உறவுகள் பாதிக்கப்படுவதே சில்லறை விஷயங்களினால்தான் என்பதை நாம் எல்லோரும் அறிந்தே இருக்கிறோம்.
"மலைபோலருக்கற விஷயத்துல ரோட்ல போறவனையெல்லாம் நம்பிருவா. துரும்பு மாதிரி விஷயத்துல யாரையும் நம்பாம.."
"இவர் கூட முப்பது வருசமா குடும்பம் நடத்தற என்னெ நம்பாம.. அவன் சொன்னா, இவன் சொன்னான்னு.."
இது சாதாரணமாக நம் குடும்பங்களில் கேட்கும் புகார்.
கணவன்-மனைவி, தந்தை-மகன்/மகள், அலுவலகத்தில் பணியாளர்-மேலாளர் ஏன் நெருங்கிய நண்பர்கள் மத்தியிலும் உறவுகள் பாதிக்கப்படுவதே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பதால்தான் என்றால் மிகையாகாது.
சந்தேகம் என்பது ஒரு பிசாசு.
அது ஒரு குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ நுழைந்துவிட்டால் அதன் ஆதிக்கம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்குமே துக்கத்தை மட்டுமே அளித்துவிடுகிறது.
ஆகவே ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருடைய கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பாருங்கள்.
அதே சமயம் தனி மனித உறவுகளில் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமல்ல. சிலவற்றை கண்டும் காணாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
தீர ஆராய்ந்த பிறகும் சந்தேகம் இருப்பின் அதன் சாதகத்தை சம்பந்தப்பட்டவருக்கு தாருங்கள். கிரிக்கெட் ஆட்டத்திலும் கூட the benefit of doubt should be given to the batsman என்பார்கள்.
உங்களுடைய பெருந்தன்மை பாதிக்கப்படுவதிலிருந்து தப்பித்தவர்களால் பாராட்டப்படுவதுடன் அவர்களுடைய பார்வையில் உங்களுடைய மதிப்பு பண்மடங்கு உயரவும் வாய்ப்புள்ளது.
உறவும் நட்பும் ஏற்பட பல ஆண்டுகள் தேவை.. ஆனால் அறுத்தெறிவதற்கு ஒரு நொடி போதும்..
சிந்திப்போம்..
Monday, October 09, 2006
புன்னகை!
“புன்னகை நம் முகத்திற்கு அழகூட்டுகிறது. அது மட்டுமா? நம் வயதையும் அல்லவா குறைத்து காட்டுகிறது! புன்னகை செய்ய முடியாத எதையும் அழகு சாதனங்களோ, அழகு கூடங்களோ செய்யாது”
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
உண்மைதான். முகத்தில் தெரியும் புன்னகை உள் மனதில் இருக்கும் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடி என்றால் மிகையாகாது.
பொறாமை, அகங்காரம், காமம் ஆகிய தீய குணங்கள் மண்டிக் கிடக்கும் உள்ளம் கொண்டவருடைய முகத்தில் எத்தனை பொன் நகையணிந்தாலும் புன்னகை தரக்கூடிய அழகு வரவே வராது.
பெண்களின் முகத்துக்கு மட்டுமே அழகூட்டுவதல்ல புன்னகை. குழந்தை முதல் வயோதிகர் வரை ஆணாயினும் பெண்ணாயினும் முகத்திற்கு அழகூட்டுவது புன்னகைதான்.
புன்னகையால் என்னென்ன பயன்?
1. புன்னகை பிறருடன் நமக்கிருக்கும் நட்பைக் காட்டுகிறது
2. புன்னகை புதிய நண்பர்களை நமக்கு தருகிறது
3. புன்னகை நம்முடைய அன்றைய நாளையே பிரகாசிக்கச் செய்கிறது 4. புன்னகை அத்துடன் நில்லாமல் நாம் அன்று சந்திக்கும் எல்லோருடைய நாளையும் பிரகாசிக்கச் செய்கிறது
5. புன்னகை நம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை மற்றவர் மனதில் விதைக்கிறது
6. புன்னகை நம் உள்ளத்திலிருக்கும் அமைதி, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய நல்ல உணர்வுகளுக்கு ஒரு வெளி அடையாளம்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
நாம் விரும்பும் பெண்ணோ, ஆணோ நம்முடைய விருப்பத்தை அங்கீகரிக்க காட்டும் அடையாளமே புன்னகைதானே!
காசில்லாமல் ஒரு நகை கிடைக்கிறதென்றால் அது புன்னகையைத் தவிர வேறென்ன?
அணிந்துக் கொள்வோம், வருகிறீர்களா?
***
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
உண்மைதான். முகத்தில் தெரியும் புன்னகை உள் மனதில் இருக்கும் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடி என்றால் மிகையாகாது.
பொறாமை, அகங்காரம், காமம் ஆகிய தீய குணங்கள் மண்டிக் கிடக்கும் உள்ளம் கொண்டவருடைய முகத்தில் எத்தனை பொன் நகையணிந்தாலும் புன்னகை தரக்கூடிய அழகு வரவே வராது.
பெண்களின் முகத்துக்கு மட்டுமே அழகூட்டுவதல்ல புன்னகை. குழந்தை முதல் வயோதிகர் வரை ஆணாயினும் பெண்ணாயினும் முகத்திற்கு அழகூட்டுவது புன்னகைதான்.
புன்னகையால் என்னென்ன பயன்?
1. புன்னகை பிறருடன் நமக்கிருக்கும் நட்பைக் காட்டுகிறது
2. புன்னகை புதிய நண்பர்களை நமக்கு தருகிறது
3. புன்னகை நம்முடைய அன்றைய நாளையே பிரகாசிக்கச் செய்கிறது 4. புன்னகை அத்துடன் நில்லாமல் நாம் அன்று சந்திக்கும் எல்லோருடைய நாளையும் பிரகாசிக்கச் செய்கிறது
5. புன்னகை நம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை மற்றவர் மனதில் விதைக்கிறது
6. புன்னகை நம் உள்ளத்திலிருக்கும் அமைதி, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய நல்ல உணர்வுகளுக்கு ஒரு வெளி அடையாளம்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
நாம் விரும்பும் பெண்ணோ, ஆணோ நம்முடைய விருப்பத்தை அங்கீகரிக்க காட்டும் அடையாளமே புன்னகைதானே!
காசில்லாமல் ஒரு நகை கிடைக்கிறதென்றால் அது புன்னகையைத் தவிர வேறென்ன?
அணிந்துக் கொள்வோம், வருகிறீர்களா?
***
Friday, October 06, 2006
சமுதாயத்தில் நம் பங்கு
“ஒரு இன்னிசைக் குழுவிலுள்ள கீ போர்ட் வாசிப்பவரிலிருந்து வயலின், தபேலா, புல்லாங்குழல் என எந்த ஒரு சிறிய கருவியை இயக்குபவரும் முக்கியம். ஒருவர் சுருதி மாறினால் கூட கச்சேரி களைகட்டாது.”
வாழ்க்கையிலும் அப்படித்தான்.
நம் குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி, ஒவ்வொரு அங்கத்தினரும் தன்னுடைய இடத்தை உணர்ந்திருத்தல் மிக, மிக அவசியம்.
நான் கடைக்குட்டிதானே என்று குடும்பத்திலும் ஒரு சிப்பாந்திதானே அல்லது நான் கழிப்பிடத்தைச் சுத்தப்படுத்தும் கடைநிலை ஊழியந்தானே என்று கருதி அலுவலகத்திலும் அசிரத்தையாக இருந்தால் குடும்பமும் அலுவலகமும் சீராக இயங்க இயலாமற் போய்விட வாய்ப்பிருக்கிறது.
நான் குமாஸ்தாவாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்த ஒரு கணக்காளர் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை முக்கியமாக கடைநிலை ஊழியரான சிப்பந்தி மற்றும் அலுவலகத்தை சுத்தம் செய்பவரை மிகவும் கேவலமாக நடத்துவார்.
எனக்கு மேலாளராக இருந்தவர் மிகவும் தங்கமானவர். அவர் இந்த கணக்காளருடைய பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து கேள்விப்பட்டும் சிலகாலம் பொறுத்து பார்த்தார். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. மேலாளருடைய அறிவுரையின்படி இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து அலுவலகத்தை சுத்தம் செய்பவரும் எங்களுடைய சிப்பந்தியும் முன்னறிவிப்பில்லாமல் விடுப்பில் சென்றனர்.
அலுவலகத்தை சுத்தம் செய்ய முடியாமல்போனது. எங்களைப் போன்ற குமாஸ்தாக்கள் பணியாற்ற தேவையான லெட்ஜர்கள், கோப்புகளை எடுத்து கொடுக்க சிப்பந்தியும் இல்லாமல் அலுவலகப் பணி ஸ்தம்பித்துபோனது.
அன்று மாலையே எங்களுடைய மேலாளர் எங்களையெல்லாம் கூட்டி இவ்வாறு கூறினார். ‘நான் லீவில போனாலும் பிராஞ்ச்ல பெரிசா எந்த ப்ராப்ளமும் வராது. என் வேலைய நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர் பாத்துக்குவார். ஆனா ஸ்வீப்பரோ, ஸ்கேவஞ்சரோ ஏன் நம்ம பியூனோ ஒரு நாள் வராட்டியும் ஆஃபீஸ் என்னாவும்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டோமில்ல? அதனால இங்கருக்கறவங்கள்ல யாருமே யாருக்கும் தாழ்ந்தவங்க இல்ல. இந்த ஆஃபீச பொறுத்தவரை நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரோல் இருக்கு. அத உணர்ந்து பொறுப்பா நடந்துக்கிட்டா எல்லாருக்குமே நல்லது.’
நேரிடையாக கணக்காளரை குறை கூறாமலே அவருக்கு உணர்த்தும் வகையில் மேலாளர் ப்ராக்டிக்கலாக செய்துக் காட்டியது அலுவலகத்திலிருந்த எல்லோருக்குமே பிடித்திருந்தது.
நம் குடும்பங்களிலும் குடும்பத் தலைவியரைப் பொருட்படுத்தாமல் இருக்கும் குடும்பத் தலைவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன்.
‘அவ என்ன சார் ஹவுஸ் வைஃப் தானே? வீட்ல சும்மாதான இருக்கா? செஞ்சா என்ன? நம்மள மாதிரியா?’ என்று மிகவும் அலட்சியத்துடன் தங்களுடைய மனைவியரைப் பற்றி கூறுவதையும் கேட்டிருக்கிறேன்.
வேறு சிலர், ‘வீட்லருக்கற பொம்பளைக்கு எதுக்கு சார் காஸ்ட்லி ட்ரெஸ்? சும்மா நூறு, நூத்தம்பது ரூபாய்க்குள்ள இருந்தா போறும்.’ என்பர்.
கடையிலிருப்பவர் தன்னைப் பற்றியோ அல்லது தன்னுடைய மனைவியைப் பற்றியோ என்ன நினைப்பார் என்பதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார்கள்.
இத்தகையவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாலும் கடைக்காரர் பார்வையிலும் மற்றவர்கள் பார்வையில் தரமிறங்கிப் போவதை அவர்கள் உணர்வதில்லை.
குடும்பம் ஒரு கோவில். தெய்வம் இல்லாத கோவில் வெறும் கட்டடம்தான். தெய்வம் மட்டுமிருந்தால் போதாது.. தெய்வத்தை வணங்க பக்தர்கள் இல்லையென்றால் எப்பேர்பட்ட கோவிலும் பராமரிக்க ஆளின்றி சிதைந்து போகும்.
This is a house. To make this a home we need people. என்ற வாக்கியத்தை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.
ஆம் நண்பர்களே.. நம்மில் ஒவ்வொருவருக்கும் நம் குடும்பத்திலும் இச்சமுதாயத்திலும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. அதை உணர்ந்து செயல்பட்டால் நம் குடும்பமும் சரி, நாம் வாழும் சமுதாயமும் சரி அமைதியான, மகிழ்ச்சியான பூங்காவாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
*******
வாழ்க்கையிலும் அப்படித்தான்.
நம் குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி, ஒவ்வொரு அங்கத்தினரும் தன்னுடைய இடத்தை உணர்ந்திருத்தல் மிக, மிக அவசியம்.
நான் கடைக்குட்டிதானே என்று குடும்பத்திலும் ஒரு சிப்பாந்திதானே அல்லது நான் கழிப்பிடத்தைச் சுத்தப்படுத்தும் கடைநிலை ஊழியந்தானே என்று கருதி அலுவலகத்திலும் அசிரத்தையாக இருந்தால் குடும்பமும் அலுவலகமும் சீராக இயங்க இயலாமற் போய்விட வாய்ப்பிருக்கிறது.
நான் குமாஸ்தாவாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்த ஒரு கணக்காளர் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை முக்கியமாக கடைநிலை ஊழியரான சிப்பந்தி மற்றும் அலுவலகத்தை சுத்தம் செய்பவரை மிகவும் கேவலமாக நடத்துவார்.
எனக்கு மேலாளராக இருந்தவர் மிகவும் தங்கமானவர். அவர் இந்த கணக்காளருடைய பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து கேள்விப்பட்டும் சிலகாலம் பொறுத்து பார்த்தார். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. மேலாளருடைய அறிவுரையின்படி இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து அலுவலகத்தை சுத்தம் செய்பவரும் எங்களுடைய சிப்பந்தியும் முன்னறிவிப்பில்லாமல் விடுப்பில் சென்றனர்.
அலுவலகத்தை சுத்தம் செய்ய முடியாமல்போனது. எங்களைப் போன்ற குமாஸ்தாக்கள் பணியாற்ற தேவையான லெட்ஜர்கள், கோப்புகளை எடுத்து கொடுக்க சிப்பந்தியும் இல்லாமல் அலுவலகப் பணி ஸ்தம்பித்துபோனது.
அன்று மாலையே எங்களுடைய மேலாளர் எங்களையெல்லாம் கூட்டி இவ்வாறு கூறினார். ‘நான் லீவில போனாலும் பிராஞ்ச்ல பெரிசா எந்த ப்ராப்ளமும் வராது. என் வேலைய நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர் பாத்துக்குவார். ஆனா ஸ்வீப்பரோ, ஸ்கேவஞ்சரோ ஏன் நம்ம பியூனோ ஒரு நாள் வராட்டியும் ஆஃபீஸ் என்னாவும்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டோமில்ல? அதனால இங்கருக்கறவங்கள்ல யாருமே யாருக்கும் தாழ்ந்தவங்க இல்ல. இந்த ஆஃபீச பொறுத்தவரை நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரோல் இருக்கு. அத உணர்ந்து பொறுப்பா நடந்துக்கிட்டா எல்லாருக்குமே நல்லது.’
நேரிடையாக கணக்காளரை குறை கூறாமலே அவருக்கு உணர்த்தும் வகையில் மேலாளர் ப்ராக்டிக்கலாக செய்துக் காட்டியது அலுவலகத்திலிருந்த எல்லோருக்குமே பிடித்திருந்தது.
நம் குடும்பங்களிலும் குடும்பத் தலைவியரைப் பொருட்படுத்தாமல் இருக்கும் குடும்பத் தலைவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன்.
‘அவ என்ன சார் ஹவுஸ் வைஃப் தானே? வீட்ல சும்மாதான இருக்கா? செஞ்சா என்ன? நம்மள மாதிரியா?’ என்று மிகவும் அலட்சியத்துடன் தங்களுடைய மனைவியரைப் பற்றி கூறுவதையும் கேட்டிருக்கிறேன்.
வேறு சிலர், ‘வீட்லருக்கற பொம்பளைக்கு எதுக்கு சார் காஸ்ட்லி ட்ரெஸ்? சும்மா நூறு, நூத்தம்பது ரூபாய்க்குள்ள இருந்தா போறும்.’ என்பர்.
கடையிலிருப்பவர் தன்னைப் பற்றியோ அல்லது தன்னுடைய மனைவியைப் பற்றியோ என்ன நினைப்பார் என்பதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார்கள்.
இத்தகையவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாலும் கடைக்காரர் பார்வையிலும் மற்றவர்கள் பார்வையில் தரமிறங்கிப் போவதை அவர்கள் உணர்வதில்லை.
குடும்பம் ஒரு கோவில். தெய்வம் இல்லாத கோவில் வெறும் கட்டடம்தான். தெய்வம் மட்டுமிருந்தால் போதாது.. தெய்வத்தை வணங்க பக்தர்கள் இல்லையென்றால் எப்பேர்பட்ட கோவிலும் பராமரிக்க ஆளின்றி சிதைந்து போகும்.
This is a house. To make this a home we need people. என்ற வாக்கியத்தை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.
ஆம் நண்பர்களே.. நம்மில் ஒவ்வொருவருக்கும் நம் குடும்பத்திலும் இச்சமுதாயத்திலும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. அதை உணர்ந்து செயல்பட்டால் நம் குடும்பமும் சரி, நாம் வாழும் சமுதாயமும் சரி அமைதியான, மகிழ்ச்சியான பூங்காவாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
*******
Thursday, October 05, 2006
நம்பிக்கையோடு இருங்கள்
“நமக்கு எல்லாமே சாதகமாக இருக்கும் சூழலில் இறைவன் மீது நம்பிக்கை வைத்திருப்பது பெரிய விஷயமல்ல.. ஆனால் நாம் பலவித இக்கட்டுகளிலும், இடைஞ்சல்களிலும் சிக்கித் திணறும் நேரத்திலும் இறை நம்பிக்கையை விடாதிருப்பதுதான் பெரிய விஷயம்.”
என்னுடைய இரு மக்களும் படித்து முடித்துவிட்டார்கள். ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. மற்றவளுக்கு வேலை கிடைத்துவிட்டது.
எனக்கு சென்னையிலேயே மாற்றம் கிடைத்து மனைவி பிள்ளைகளோட மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இந்த நேரத்தில் நான் இறைநம்பிக்கையைப் பற்றி எழுதுவது சுலபம். அது ஒரு பெரிய விஷயமல்ல..
ஆனால் நான் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்த இக்கட்டுகளையும், மன விசனங்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்..
கொச்சியில் நானும் என் மனைவியும். முக்கியமான ப்ராஜக்ட் ஒன்று பாதியில்.. முடியுமோ முடியாதோ என்ற ஒரு இக்கட்டான நிலையில். எங்களோடு இணைந்து ப்ராஜக்ட் செய்துக்கொண்டிருந்த மென்பொருள் நிறுவனம் மூடப்படும் சூழல்.. அதற்கு முழு பொறுப்பும் நான் தான் என்பதுபோன்ற மேலதிகாரிகளின் வசைபாடல்.
மூத்த மகள் சென்னையில் ஒரு ஹாஸ்டலில்.. படித்து முடித்து ஓராண்டாகியும் சரியான வேலை கிடைக்காமல் மனம் சோர்ந்து போயிருந்தாள்..
இளைய மகள் பள்ளி இறுதி வகுப்பில். தனியாக வேறொரு ஹாஸ்டலில்..
ஒரே ஊரிலிருந்தும் வாரம் ஒருமுறை மட்டும் சந்தித்து பேசிக்கொள்ளக் கூடிய சூழ்நிலை..
மனமும் உடலும் சோர்ந்துபோய் மாலையில் வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் ‘ரெண்டு பிள்ளைகளையும் தனியாக சென்னையில் விட்டுவிட்டு உங்களை நம்பி வந்தேனே என்னைச் சொல்லணும்.. என்னெ கொண்டுபோய் திரும்பி சென்னையிலயே விட்டுருங்க’ என்று நாள்தோறும் நச்சரிக்கும் மனைவி..
இத்தகைய சூழலில் இறைவன் என்றொருவர் இருக்கிறாரா என சலித்துப்போகும் சூழ்நிலையில் நான் இருந்தேன்.
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்றெல்லாம் பல முறை சிந்தித்திருக்கிறேன். இறைவனை நோக்கி கேட்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் என் மனதில் எழுந்து ஓசை இதுதான்.
‘நம்பிக்கையோடு இரு.. காலம் மாறும்.. உன் கவலைகள் யாவும் தீரும். நான் இருக்கிறேன்..’
ஆம் நண்பர்களே..
நம்பிக்கையோடு இருந்தேன். நாள் தவறாமல் இந்த துன்பங்களிலிருந்து எனக்கு விடுதலை தாரும் என்று பிரார்த்தித்தேன்..
என் நம்பிக்கை வீண் போகவில்லை..
அந்த நன்றியுணர்வோடுதான் இப்போதும் அந்த இறைவனுடைய மகிமையை என்னால் இயன்றவரை எடுத்துரைக்கிறேன்..
நாம் வணங்கும் தெய்வம் இதுதான் என்றில்லை..
தெய்வங்கள் கோடி இருக்கலாம்.
நம்பிக்கை ஒன்றுதான்..
எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் அதை மட்டும் இழந்துவிடாதீர்கள்..
தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் கைகோர்த்து செல்லவேண்டும்..
வெற்றி நிச்சயம்..
******
என்னுடைய இரு மக்களும் படித்து முடித்துவிட்டார்கள். ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. மற்றவளுக்கு வேலை கிடைத்துவிட்டது.
எனக்கு சென்னையிலேயே மாற்றம் கிடைத்து மனைவி பிள்ளைகளோட மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இந்த நேரத்தில் நான் இறைநம்பிக்கையைப் பற்றி எழுதுவது சுலபம். அது ஒரு பெரிய விஷயமல்ல..
ஆனால் நான் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்த இக்கட்டுகளையும், மன விசனங்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்..
கொச்சியில் நானும் என் மனைவியும். முக்கியமான ப்ராஜக்ட் ஒன்று பாதியில்.. முடியுமோ முடியாதோ என்ற ஒரு இக்கட்டான நிலையில். எங்களோடு இணைந்து ப்ராஜக்ட் செய்துக்கொண்டிருந்த மென்பொருள் நிறுவனம் மூடப்படும் சூழல்.. அதற்கு முழு பொறுப்பும் நான் தான் என்பதுபோன்ற மேலதிகாரிகளின் வசைபாடல்.
மூத்த மகள் சென்னையில் ஒரு ஹாஸ்டலில்.. படித்து முடித்து ஓராண்டாகியும் சரியான வேலை கிடைக்காமல் மனம் சோர்ந்து போயிருந்தாள்..
இளைய மகள் பள்ளி இறுதி வகுப்பில். தனியாக வேறொரு ஹாஸ்டலில்..
ஒரே ஊரிலிருந்தும் வாரம் ஒருமுறை மட்டும் சந்தித்து பேசிக்கொள்ளக் கூடிய சூழ்நிலை..
மனமும் உடலும் சோர்ந்துபோய் மாலையில் வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் ‘ரெண்டு பிள்ளைகளையும் தனியாக சென்னையில் விட்டுவிட்டு உங்களை நம்பி வந்தேனே என்னைச் சொல்லணும்.. என்னெ கொண்டுபோய் திரும்பி சென்னையிலயே விட்டுருங்க’ என்று நாள்தோறும் நச்சரிக்கும் மனைவி..
இத்தகைய சூழலில் இறைவன் என்றொருவர் இருக்கிறாரா என சலித்துப்போகும் சூழ்நிலையில் நான் இருந்தேன்.
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்றெல்லாம் பல முறை சிந்தித்திருக்கிறேன். இறைவனை நோக்கி கேட்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் என் மனதில் எழுந்து ஓசை இதுதான்.
‘நம்பிக்கையோடு இரு.. காலம் மாறும்.. உன் கவலைகள் யாவும் தீரும். நான் இருக்கிறேன்..’
ஆம் நண்பர்களே..
நம்பிக்கையோடு இருந்தேன். நாள் தவறாமல் இந்த துன்பங்களிலிருந்து எனக்கு விடுதலை தாரும் என்று பிரார்த்தித்தேன்..
என் நம்பிக்கை வீண் போகவில்லை..
அந்த நன்றியுணர்வோடுதான் இப்போதும் அந்த இறைவனுடைய மகிமையை என்னால் இயன்றவரை எடுத்துரைக்கிறேன்..
நாம் வணங்கும் தெய்வம் இதுதான் என்றில்லை..
தெய்வங்கள் கோடி இருக்கலாம்.
நம்பிக்கை ஒன்றுதான்..
எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் அதை மட்டும் இழந்துவிடாதீர்கள்..
தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் கைகோர்த்து செல்லவேண்டும்..
வெற்றி நிச்சயம்..
******
Wednesday, October 04, 2006
சந்தோஷம்
“மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய வாழ்க்கையின் மிகப் பெரிய பொக்கிஷம் சந்தோஷம்.”
சாதாரணமாகவே நம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்போது நம்முடைய பங்கு குறைந்துபோகும்.
சந்தோஷத்தைத் தவிர.
சந்தோஷம் பிறருடன் பகிர்ந்துக்கொள்ள, பகிர்ந்துக்கொள்ள பன்மடங்கு பெருகி அதை பகிர்ந்துக்கொள்ளும் எல்லோரையும் மகிழ்விக்கிறது.
"Laugh.. the World laughs with you.. Weep and you weep alone."
எத்தனை யதார்த்தமான உண்மை!
நம்முடைய எதிரிகளுக்கு வேண்டுமானால் நம்முடைய சந்தோஷம் சந்தோஷத்தை அளிக்காமல் இருக்கலாம்..
ஆனால் நமக்கு எந்த உறவும் இல்லாதவர்களும்கூட நம்முடைய சந்தோஷத்தில் பங்கு கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம், இல்லையா?
சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொள்ள நல்ல மனம் இருந்தால் போதும். அடுத்தவர்களுடைய வெற்றியை, அவர்களுடைய மகிழ்ச்சியைக் கண்டு வெதும்பாத மனம் இருந்தால் போதும்.
நம்மை மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்விப்பது சந்தோஷம்.
அது ஒரு தொற்று நோய் போல.. கிருமிகளின் உதவியில்லாமல், காற்றின் துணையில்லாமல் க்ஷண நேரத்தில் பரவக்கூடிய தொற்று நோய்..
அதனால் தொல்லையில்லை, சிரமங்கள் இல்லை, இடையூறு இல்லை, சஞ்சலங்கள் இல்லை..
சந்தோஷம் நமக்குள், நம் மனதில் ஓரங்களில் ஒட்டியிருக்கும் சகல தோஷங்களையும் தீர்க்கக்கூடிய மருந்து..
புகைபிடித்தால், மதுவின் தாக்கத்தில் மயங்கியிருந்தால் கிடைக்கக் கூடிய சந்தோஷம், மனநிறைவு அதன் தாக்கம் குறையக் குறைய குறைந்து போகும்..
ஆனால் உண்மையான, களங்கமில்லாத மனதில் தோன்றும் நிறைவான சந்தோஷம் நீடித்திருக்கும்.
அதற்கு ஆயுள் நூறாண்டு, ஆயிரம் ஆண்டு..
அதை நமக்குள்ளே வைத்து பூட்டி வைப்பதால் பயனில்லை.. அள்ள, அள்ள குறையாத அந்த பொக்கிஷத்தை, பகிர, பகிர குறையாத அந்த அமுதசுரபியை நாமும் அனுபவிப்போம்,
மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வோம்..
இன்று முதல், இக்க்ஷணம் முதல்..
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போச்சி..
சிரிங்க.. சந்தோஷமாய் சிரிங்க.. மனசிலருக்கற பாரத்த எவ்வளவு நாளைக்குத்தான் சுமக்கப் போறீங்க..
உண்மையான சந்தோஷம் நம் மனதில் இருந்தால் எந்த பாரமும் சுமையாகத் தெரியாது..
நமக்குள்ளயே இருக்கற சந்தோஷத்த தொலைச்சிட்டா எங்க தேடினாலும் கிடைக்காதுங்க..
*******
சாதாரணமாகவே நம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்போது நம்முடைய பங்கு குறைந்துபோகும்.
சந்தோஷத்தைத் தவிர.
சந்தோஷம் பிறருடன் பகிர்ந்துக்கொள்ள, பகிர்ந்துக்கொள்ள பன்மடங்கு பெருகி அதை பகிர்ந்துக்கொள்ளும் எல்லோரையும் மகிழ்விக்கிறது.
"Laugh.. the World laughs with you.. Weep and you weep alone."
எத்தனை யதார்த்தமான உண்மை!
நம்முடைய எதிரிகளுக்கு வேண்டுமானால் நம்முடைய சந்தோஷம் சந்தோஷத்தை அளிக்காமல் இருக்கலாம்..
ஆனால் நமக்கு எந்த உறவும் இல்லாதவர்களும்கூட நம்முடைய சந்தோஷத்தில் பங்கு கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம், இல்லையா?
சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொள்ள நல்ல மனம் இருந்தால் போதும். அடுத்தவர்களுடைய வெற்றியை, அவர்களுடைய மகிழ்ச்சியைக் கண்டு வெதும்பாத மனம் இருந்தால் போதும்.
நம்மை மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்விப்பது சந்தோஷம்.
அது ஒரு தொற்று நோய் போல.. கிருமிகளின் உதவியில்லாமல், காற்றின் துணையில்லாமல் க்ஷண நேரத்தில் பரவக்கூடிய தொற்று நோய்..
அதனால் தொல்லையில்லை, சிரமங்கள் இல்லை, இடையூறு இல்லை, சஞ்சலங்கள் இல்லை..
சந்தோஷம் நமக்குள், நம் மனதில் ஓரங்களில் ஒட்டியிருக்கும் சகல தோஷங்களையும் தீர்க்கக்கூடிய மருந்து..
புகைபிடித்தால், மதுவின் தாக்கத்தில் மயங்கியிருந்தால் கிடைக்கக் கூடிய சந்தோஷம், மனநிறைவு அதன் தாக்கம் குறையக் குறைய குறைந்து போகும்..
ஆனால் உண்மையான, களங்கமில்லாத மனதில் தோன்றும் நிறைவான சந்தோஷம் நீடித்திருக்கும்.
அதற்கு ஆயுள் நூறாண்டு, ஆயிரம் ஆண்டு..
அதை நமக்குள்ளே வைத்து பூட்டி வைப்பதால் பயனில்லை.. அள்ள, அள்ள குறையாத அந்த பொக்கிஷத்தை, பகிர, பகிர குறையாத அந்த அமுதசுரபியை நாமும் அனுபவிப்போம்,
மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வோம்..
இன்று முதல், இக்க்ஷணம் முதல்..
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போச்சி..
சிரிங்க.. சந்தோஷமாய் சிரிங்க.. மனசிலருக்கற பாரத்த எவ்வளவு நாளைக்குத்தான் சுமக்கப் போறீங்க..
உண்மையான சந்தோஷம் நம் மனதில் இருந்தால் எந்த பாரமும் சுமையாகத் தெரியாது..
நமக்குள்ளயே இருக்கற சந்தோஷத்த தொலைச்சிட்டா எங்க தேடினாலும் கிடைக்காதுங்க..
*******
Tuesday, October 03, 2006
தம்மை மறந்தோர்..
‘எவனொருவன் தன்னையே மறக்கிறானோ.. அவனைத்தான் மற்றவர்கள் மறக்காதிருப்பர்..’
உண்மைதானே..
நம்முடைய வாழ்க்கைக் காலத்தில் நாம் இன்றும் நினைவில் வைத்திருக்கும் இப்படிப்பட்ட மனிதர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில்தான் என்றாலும் அவர்களை நினைக்கும்போதெல்லாம் நம் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுகிறதே.
பொது வாழ்வில் எடுத்துக்கொண்டால் நம்முடைய நினைவில் நிற்கும் மனித தெய்வங்களை எண்ணிப் பாருங்கள்?
மகாத்மா, வினோபாஜி, பெருந்தலைவர் காமராஜ், அன்னைத் திரேசா, மார்ட்டின் லூத்தர் கிங், நெல்சன் மண்டேலா..
இன்னும் எத்தனையோ பேர்..
நம் குடும்பத்தில் நமக்காக தன்னையே மறந்து செருப்பாய் தேய்ந்த, மெழுகாய் உருகிய நம் பெற்றோர்..
நம் குடும்பத்தைப் பொருத்தவரை நான் மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவ்விருவர்தானே?
அதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
நான் சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சில ஆண்டுகள் வாலண்டியராக பணியாற்றியுள்ளேன் என்பதை முன்பே கூறியிருக்கிறேன்..
அதில் நான் கண்டவர்களுள் பெரும்பாலோனோர்.. ஏன்? ஏறக்குறைய எல்லோருமே பிள்ளைகளால் கைவிடப்பட்டோர்தானே..
அவர்களுடைய கண்களில் நான் கண்ட சோகம், ஏமாற்றம்.. அதை மறக்க நான் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா?
இன்று ஊர்தோரும், நகர்தோரும் பெருகிவரும் இத்தகைய இல்லங்களுக்கு காரணகர்த்தா நீங்களும் நானுந்தானே?
நம்முடைய அன்றைய வாழ்விலும் சரி.. இதோ சகல வசதிகளுடன் நம் குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்கிறோமே.. இந்த சந்தோஷத்துக்காக தங்களுடைய சந்தோஷத்தைத் தொலைத்தவர்களாயிற்றே நம் பெற்றோர்?
என்னுடைய இரு மகள்களில் மூத்தவள் இளவயதில் சற்று சுகம் இல்லாதவள். எப்போதும் நோய்வாய்பட்டு சுகவீனமாகிப்போவாள். களைப்போடு அலுவலகத்திலிருந்து வந்து நிற்பேன்.. ‘என்னங்க காலையிலருந்து பாப்பவுக்கு மேலுக்கு சரியில்லீங்க..’ என்பார் என் மனைவி..
உடல் களைப்பு மறந்துபோகும்.. என்னுடைய ஆயாசம் அடியோடு மறைந்துபோகும்.. குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டு ஓடுவோம்.. திரும்பிவர இரவு எந்நேரமாகுமோ..
அப்படித்தானே நம்மையும் வளர்த்தவர்கள் நம் பெற்றோர்?
இதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
தம்மை மறந்த அவர்களை நாம் நினைத்திருக்கிறோமா?
சிந்திப்போம்..
உண்மைதானே..
நம்முடைய வாழ்க்கைக் காலத்தில் நாம் இன்றும் நினைவில் வைத்திருக்கும் இப்படிப்பட்ட மனிதர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில்தான் என்றாலும் அவர்களை நினைக்கும்போதெல்லாம் நம் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுகிறதே.
பொது வாழ்வில் எடுத்துக்கொண்டால் நம்முடைய நினைவில் நிற்கும் மனித தெய்வங்களை எண்ணிப் பாருங்கள்?
மகாத்மா, வினோபாஜி, பெருந்தலைவர் காமராஜ், அன்னைத் திரேசா, மார்ட்டின் லூத்தர் கிங், நெல்சன் மண்டேலா..
இன்னும் எத்தனையோ பேர்..
நம் குடும்பத்தில் நமக்காக தன்னையே மறந்து செருப்பாய் தேய்ந்த, மெழுகாய் உருகிய நம் பெற்றோர்..
நம் குடும்பத்தைப் பொருத்தவரை நான் மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவ்விருவர்தானே?
அதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
நான் சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சில ஆண்டுகள் வாலண்டியராக பணியாற்றியுள்ளேன் என்பதை முன்பே கூறியிருக்கிறேன்..
அதில் நான் கண்டவர்களுள் பெரும்பாலோனோர்.. ஏன்? ஏறக்குறைய எல்லோருமே பிள்ளைகளால் கைவிடப்பட்டோர்தானே..
அவர்களுடைய கண்களில் நான் கண்ட சோகம், ஏமாற்றம்.. அதை மறக்க நான் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா?
இன்று ஊர்தோரும், நகர்தோரும் பெருகிவரும் இத்தகைய இல்லங்களுக்கு காரணகர்த்தா நீங்களும் நானுந்தானே?
நம்முடைய அன்றைய வாழ்விலும் சரி.. இதோ சகல வசதிகளுடன் நம் குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்கிறோமே.. இந்த சந்தோஷத்துக்காக தங்களுடைய சந்தோஷத்தைத் தொலைத்தவர்களாயிற்றே நம் பெற்றோர்?
என்னுடைய இரு மகள்களில் மூத்தவள் இளவயதில் சற்று சுகம் இல்லாதவள். எப்போதும் நோய்வாய்பட்டு சுகவீனமாகிப்போவாள். களைப்போடு அலுவலகத்திலிருந்து வந்து நிற்பேன்.. ‘என்னங்க காலையிலருந்து பாப்பவுக்கு மேலுக்கு சரியில்லீங்க..’ என்பார் என் மனைவி..
உடல் களைப்பு மறந்துபோகும்.. என்னுடைய ஆயாசம் அடியோடு மறைந்துபோகும்.. குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டு ஓடுவோம்.. திரும்பிவர இரவு எந்நேரமாகுமோ..
அப்படித்தானே நம்மையும் வளர்த்தவர்கள் நம் பெற்றோர்?
இதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
தம்மை மறந்த அவர்களை நாம் நினைத்திருக்கிறோமா?
சிந்திப்போம்..
Subscribe to:
Posts (Atom)

