‘நாம் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டுமென்றால் அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும் நம்முடைய நடவடிக்கைகள். அப்போதுதான் நாமும் உண்மையில் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கவியலும்.’
நான் உள்ளூர உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு நம்முடைய கிரிக்கெட் வீரர்கள் தலையைத் தொங்க போட்டுக்கொண்டு மைதானத்தில் காட்சியளிப்பதைப் போல நடந்தால் யார் அதை நம்புவார்கள்?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பது எத்தனை உண்மை!
மகிழ்ச்சி உள்ளத்தில் இருந்தால் அது நிச்சயம் நம்முடைய பிரகாசமான முகத்தில் தெரியும்.
துக்கத்தை வேண்டுமானாலும் மறைத்துவிடலாம். ஆனால் மகிழ்ச்சியை நம்மால் மறைக்க முடியாது.
துக்கம் பகிரப் பகிர குறையும்.. மாறாக மகிழ்ச்சி பலுகிப் பெருகும்.
மற்றவர்களுடன் நம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள அதை நம்முடைய முகத்தைத் தவிர வேறு எதில் காட்டமுடியும்?
உற்சாகமும் அப்படித்தான். அது ஒரு தொற்று நோய் போல என்றாலும் மிகையாகாது.
நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அனைவரையும் நம்முடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும், பாதிக்கும்..
நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அதுபோலத்தான் நாமும் ஒரு நாள் ஆவோம் என்பது உண்மைதானே..
நான் இன்று செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியடையப் போகிறேன் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும்.
நம்மையுமறியாமலே நாம் இன்று செய்யவிருக்கும் ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ஈடுபடுவோம்.
உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் நாம் செய்யும் எந்த ஒரு செயலாவது தோல்வியில் முடியுமா?
வெற்றியில் முடியும் எந்த ஒரு செயலும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்காது இருக்கவியலுமா?
ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையான, மகிழ்ச்சியான, உற்சாகமான சிந்தனைகளுடன் துவக்குவோமானால் அந்த நாள் மிக மகிழ்ச்சியான நாளாக முடியும் என்பதில் சந்தேகமேயில்லை..
இது நான் என் அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை..
என்னுடைய அலுவலக அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புவோர் என் உலகத்திற்கு வருமாறு அழைக்கிறேன்: http://ennulagam.blogspot.com/2006/12/ii-1.html
***
Monday, December 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment