‘நீ, நான், நாம்.. தன்னலம், பிறர்நலம், நம்நலம்.. இதில் எது முக்கியம் என்றால்? எல்லாமேதான்..’
தன்னலம் கருதாது பிறர்நலம் பேண்.. அதுவே உண்மையான மகிழ்ச்சிக்கு வழி.
இது நம் முதியோர் நமக்கு கற்றுத் தந்த பாடம்.
ஆனால் இதை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிப்பது அத்தனை எளிதல்ல.
அதற்கு ஒரு தேர்ந்த மனமுதிர்வு, பக்குவம் வேண்டும்.
ஆனால் இதற்கு மாற்றாக நம் எல்லோருடைய நலம் என்று சிந்தித்துப் பாருங்கள்..
இதில் என்னுடைய நலம், பிறருடைய நலம் எல்லாமே அடங்கியிருக்கிறதல்லவா?
ஆனால் இப்போதெல்லாம் தன்னலமே மேல்நோங்கி நிற்கிறது.
அதனால்தானோ என்னவோ கூட்டுக்குடும்பம் என்ற தத்துவம் செல்லாத காசாகிப் போய்விட்டது.
என் மனைவி, என் கணவன், என் பிள்ளை என்று குடும்பம் சுருங்கிப் போய்விட்டது.
நம்முடைய அலுவலகங்களிலும் ஏன் பொதுவாழ்விலும் இத்தகைய எண்ணம் பெருகி சமுதாயநலம் என்ற எண்ணமே நம்மில் பலருக்கும் இல்லாமல் போய்விட்டது.
தனி மரம் தோப்பாகாது.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..
இதெல்லாம் வெறும் தத்துவ சிந்தனைகளாகவே நின்றுபோனதுதான் இன்றைய சமுதாய சீர்கேட்டுக்கு அடிப்படைக் காரணம்..
இன்றைக்கு, இந்த நொடியில் கிடைக்கும் வெற்றியே நமக்கு முக்கியம் என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் மேலோங்கி நிற்பதும் இந்த சீர்கேட்டுக்கு காரணம் என்பதை நாம் உணரவேண்டும்..
அதற்காக நான், எனக்கு என்பது தவறு என்று சொல்ல வரவில்லை.
அதையே நாம், நமக்கு என்று சிந்தித்து பார்க்க முயல வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்..
தனிநபராய் ஒரு காரியத்தை அணுகுவதைவிட ஒரு குழுவாய் அணுகுவது மிகவும் எளிது..
தனிநபர் வெற்றி அளிக்கும் மகிழ்ச்சியை விட ஒரு குழுவாய் இணைந்து செயல்பட்டு கிடைக்கும் வெற்றி அளிக்கும் மகிழ்ச்சி பன்மடங்கு பெரிது.
இது நம் விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்..
சமீப காலமாக இதை அவர்கள் மறந்துபோனதன் விளைவுதான் தொடர்ந்து அடையும் தோல்விகள்..
இதை செயல்படுத்துவது கடினம்தான்..
ஆனால் முயன்றால் முடியும்தானே..
****
Tuesday, November 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment